Sunday 21 August 2016

நமக்கு தெரிந்ததும் தெரியாததும்

#நமக்கு_தெரிந்ததும்_தெரியாததும்

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .
2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் .
3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது
4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது .
5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது .
6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது
7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .
8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது .
9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது .

#பெண்கள்_தெரிந்து_கொள்ள_வேண்டியது ...

1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)
3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .
4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .
7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது
8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது,அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும் .
9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது .
10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது
11. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

Wednesday 17 August 2016

பத்திரகாளியம்மன் ஊஞ்சல்

பத்திரகாளியம்மன் ஊஞ்சல்

1. தந்திமுகன் தாயார்நீர் ஆடீர் ஊஞ்சல்
தக்கன்தன் குமரிநீர் ஆடீர் ஊஞ்சல்
செந்தமிழர் மனமென்னும் தொட்டில் தன்னில்
சேர்ந்திருக்கும் உமையம்மை ஆடீர் ஊஞ்சல்
திந்திமென முழவொலிக்கத் தில்லை மன்றில்
தேர்ந்தநடம் புரிகின்றீர் ஆடீர் ஊஞ்சல்
பந்தமற எமைக்காக்கும் சிரவை யூரில்
பத்ரகாளி அம்பிகையே ஆடீர் ஊஞ்சல்

2. வேலவனின் தாயாரே ஆடீர் ஊஞ்சல்
வெள்ளிமலை வீற்றிருப்பீர் ஆடீர் ஊஞ்சல்
ஞாலமெல்லாம் புகழாறு முகவன் கையில்
ஞானவேல் வடிவானீர் ஆடீர் ஊஞ்சல்
சீலமுடன் செம்மைசேர் வாழ்வளிக்கும்
திலகநுதல் தாயார்நீர் ஆடீர் ஊஞ்சல்
காலமெல்லாம் சிரவைமா நகரம் காக்கும்
காளிஉமை சங்கரிநீர் ஆடீர் ஊஞ்சல்

3. கொன்றைமணி செஞ்சடையான் செம்பா கத்தைக்
கோலமுறக் கொண்டருள்வீர் ஆடீர் ஊஞ்சல்
மின்றயங்கும் சிற்றிடையீர் ஆடீர் ஊஞ்சல்
மீனாட்சி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்
நின்றியங்கி உலகத்தை ஆட்டுவிக்கும்
நீலி, திரிசூலி, பரை, ஆடீர் ஊஞ்சல்
மன்றிலங்கும் நாயகிநீர் ஆடீர் ஊஞ்சல்
மாகாளி சிரவையுளீர் ஆடீர் ஊஞ்சல்

4. நாமணக்க உம்புகழை நாங்களெல்லாம்
நலம்பாடி ஆடிடவே ஆடீர் ஊஞ்சல்
பாமணக்க மக்கள்மனப் பயிர்வா டாமல்
பாங்காய்நீர் வரந்தந்தீர் ஆடீர் ஊஞ்சல்
பூமணக்கக் கனிகனியக் கோயில் எல்லாம்
பொலிவடையச் செய்தவரே ஆடீர் ஊஞ்சல்
தேமணக்கும் அதுபோலச் சிரவை யூரைச்
செய்திடவே வேண்டும் எம்தாய் ஆடீர் ஊஞ்சல்

5. அருள்சுரக்கும் நீரூற்றே ஆடீர் ஊஞ்சல்
அடியவரைக்காக்கும் அம்மை ஆடீர் ஊஞ்சல்
பொருள்சுரக்கும் செந்திருவே ஆடீர் ஊஞ்சல்
புனிதநலத் தாயேநீர் ஆடீர் ஊஞ்சல்
மருள்சுரக்கும் மனம்தேர அஞ்சேல் என்று
வாழ்வளிக்கும் அன்னைநீர் ஆடீர் ஊஞ்சல்
தெருள்சுரக்கச் சேய் யானும் உம்மை பாடச்
சிரவைநகர் காத்தருள்வீர் ஆடீர் ஊஞ்சல்

6. அரும்பொருளே ஆரணங்கே ஆடீர் ஊஞ்சல்
அங்கயற்கண் நாயகியே ஆடீர் ஊஞ்சல்
வரும்பகைகள் மாற்றிடுவீர் ஆடீர் ஊஞ்சல்
வளர்காதல் பெண்ணுமையே ஆடீர் ஊஞ்சல்
பெரும்பகையைத் தீர்த்திடுவீர் ஆடீர் ஊஞ்சல்
பிஞ்ஞகனார் பங்கிருப்பீர் ஆடீர் ஊஞ்சல்
சுரும்பாரும் பூங்குழலீர் ஆடீர் ஊஞ்சல்
சொற்சிரவை நகருடையீர் ஆடீர் ஊஞ்சல்

7. விளங்குசிவ சங்கரியே ஆடீர் ஊஞ்சல்
வீரவிளையாட் டுடையீர் ஆடீர் ஊஞ்சல்
களங்கமிலா தெம்மையெல்லாம் காக்கும் தாயே
கன்னி, ஒளிர்சிவகாமி, ஆடீர் ஊஞ்சல்
குளங்காவும் சோலைகளும் வானை முட்டும்
கோபுரமும் ஒளிர்பெறவே விளங்கவேண்டும்
வளம்பலவும் சேர்சிரவை நகரந் தன்னில்
வளர்காளி அம்பிகையே ஆடீர் ஊஞ்சல்

8. ஓங்காரத் துட்பொருளே ஆடீர் ஊஞ்சல்
உத்தமியே மெய்த்தவமே ஆடீர் ஊஞ்சல்
ஆங்காரம் தீர்த்திடுவிர் ஆடீர் ஊஞ்சல்
ஆதிபரா பரையேநீர் ஆடீர் ஊஞ்சல்
தீங்கெம்மை அணுகாமல் காத்து நிற்கும்
திரிபுரைநற் சிவசக்தி ஆடீர் ஊஞ்சல்
பாங்காகச் சிரவையூர்ப் பாதுகாக்கும்
பத்ரகாளி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்

9. அனைநடை யுடையவரே ஆடீர் ஊஞ்சல்
அபிராமி, புகழ்நாமி, ஆடீர் ஊஞ்சல்
மின்னிடையீர் என் அன்னை ஆடீர் ஊஞ்சல்
விழிக்கடையால் அருள்பவரே ஆடீர் ஊஞ்சல்
பொன்பொருளும் தருபவரே ஆடீர் ஊஞ்சல்
புவிஏழும் பூத்தவரே ஆடீர் ஊஞ்சல்
பன் நெடுநாள் சிரவையூர்ப் பாதுகாக்கும்
பத்ரகாளி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்

10. விரைமலர்க் குழல்வல்லி ஆடீர் ஊஞ்சல்
விமலிகற் பகவல்லி ஆடீர் ஊஞ்சல்
மரைமலர்ப் பதவல்லி ஆடீர் ஊஞ்சல்
மாதுளம்பூ நிறவல்லி ஆடீர் ஊஞ்சல்
வரையினிடை வளர்வல்லி ஆடீர் ஊஞ்சல்
வண்டாரும் தார்வல்லி ஆடீர் ஊஞ்சல்
சிரவையூர்த் தென்றிசையில் நின்று காக்கும்
சிற்சத்தி பராசத்தி ஆடீர் ஊஞ்சல்

வாழி வெண்பா

வாழ்க சிரவைநகர் வாழ்பத்ர காளிபுகழ்
வாழ்க அவர்பாதம் வாழ்த்துமன்பர் - வாழ்கவே
வையகமும் வண்தமிழும் வான்மழையும் மாதவரும்
சைவநெறி யாவும் தழைத்து
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer