Friday 21 February 2014

கந்தர் ஷஷ்டி கவசம் நான்கு -- ஸ்வாமிமலை


கந்தர் ஷஷ்டி கவசம் நான்கு -- ஸ்வாமிமலை


by Devaraya Swamigal. 
 
அமரர் இடர் தீர அமரம்
குமரனடி நெஞ்சே குறி
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டைய சஷ்டி கவசந் தனை.
ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறை பொருளே
ஓங்கார மாக உதயத் தெழுந்தே
ஆங்கார மான அரக்கர் குலத்தை
வேரரக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரர்களைத் துண்டதுண் டங்களாய்
வேலாய
பாலா போற்றி பழநியின் கோவே
நான்கு மறைகள் நாடியே தேடும்
மான்மரு கோனே வள்ளi மணாளனே
நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
காண நீ வந்து காப்பதுன் கடனே
கூளi கூளi கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் முதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகர் போற்றி
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
அதிசய மாக அமைந்தவா போற்றி
திரியரட் சரத்தால் சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மைய
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்
மதுரமாய் அளிக்கும் மயில்வா கனனே
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறு சிரமும் அழகிய முகமும்
ஆறிரு செவிய
ஆறிரு கண்ணும் அற்ப
சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரணயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும்ஆ ய
தரங்குலைந்(து) ஒடத் தாரகா சுரன் முதல்
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
சீர்திருச்செந்தூர் தேவசே னாதிப
அஷ்ட குலாசலம் யாவைய
இஷ்டசித்திகள் அருள் ஈசன்
துட்டசங் காரா சுப்பிர மணியா
மட்டிலா வடிவே வையாப
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொளாக் காட்சி காட்டிய சடாட்சர
சைவம் வைணவம் சமரச மாக
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலார்க்(கு) அருளும் ஈசா போற்றி
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்
தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
அருச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய்
பில்லிவல் வினைய
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச்
சல்லாப மாகச் சகலரும் போற்ற
கண்டு களிப்ப
அண்ட நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்
சண்டா முனிய
மண்டை வலியோடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு
திட்டு முறைகள் தெய்வத சாபம்
குட்டம் சோம்பல் கொடிய வாந்திய
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்
உன்னுடைய நாமம் ஒதியே நீரிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை
செய்வதுன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரனே சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
அமரர் இடர் தீர அமரம்
குமரனடி நெஞ்சே குறி


 

 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer