Showing posts with label SONG LYRICS. Show all posts
Showing posts with label SONG LYRICS. Show all posts

Friday, 7 October 2016

சிவகாமி அம்மன் பொன்னூசல்

சிவகாமி அம்மன் பொன்னூசல்

1. அப்பம் அவல் பொரி விரும்பும் ஐங்கரத்தான்
அன்னை சிவ சங்கரியே ஆடீர் ஊசல்
சுப்பிரமா மணிவள்ளி தெய்வ யானை
சுடர் வேலன் தாயாரே ஆடீர் ஊசல்
எப்பொழுதும் சிரவணமா புரத்தீசன் தன்
இடப்பாகம் கொண்டருள்வீர் ஆடீர் ஊசல்
செப்பரிய சீர் நலம்சேர் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

2. இமயமலைப் பார்வதியே ஆடீர் ஊசல்
எங்கள் குல தேவதையே ஆடீர் ஊசல்
குமரியிலே கன்னிகையாய்க் கோயில் கொண்ட
குணக்குன்றே தவத்தகையே ஆடீர் ஊசல்
சமயபுரம், பண்ணாரி, திருவேற் காட்டில்
சார்மாரி யம்பிகையே ஆடீர் ஊசல்
திமதிம் எனமுழவொலிக்கச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

3. திருக்கடவூர் அபிராமி ஆடீர் ஊசல்
திருக்காஞ்சிக் காமாட்சி ஆடீர் ஊசல்
திருமதுரை மீனுட்சி ஆடீர் ஊசல்
திருமயிலைக் கற்பகமே ஆடீர் ஊசல்
அருள்பொழியும் அவிநாசி ஆலயத்தில்
அன்னை கருணாம்பிகையே ஆடீர் ஊசல்
செருக்கடையா(து) எமைக்காக்கச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

4. தேசமெலாம் புகழ்தில்லைச் சிதம்பரத்தில்
திருநடம்செய்தேவீ நீர் ஆடீர் ஊசல்
பேசு புகழ்ப் பட்டீசன் பேரூர் தன்னில்
பெறும் பச்சை மரகதமே ஆடீர் ஊசல்
ஆசுகவிப் புலவர்களுன் அடிகள் போற்ற
அறம் வளர்த்த நாயகியே ஆடீர் ஊசல்
தேசுடையோர் புகழ்பரப்பும் சிரவையூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

5. திங்கள் அணி கங்கைமுடிச் சிவன் தனக்குத்
தேர்ந்தெடுத்த நற்றுணையே ஆடீர் ஊசல்
மங்கையர்க்குத் தனியரசி மகிழ்ந்து போற்றி
வணங்க அருள் தந்தவரே ஆடீர் ஊசல்
எங்கள் குரு முதல்வர் திரு ராமா னந்தர்
ஏத்த அருள் செய்தவரே ஆடீர் ஊசல்
செங்கமல அடிகாட்டிச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

6. சீர் காழித் திருத்தலத்தில் சம்பந்தர்க்குத்
திருமுலைப்பால் சுரந்தவரே ஆடீர் ஊசல்
பார்புகழும் அபிராமி பட்டர் பாடப்
பவுர்ணமியாய் ஒளிர்ந்தவரே ஆடீர் ஊசல்
கார் முகிலாய்க் கவுமாரக் கந்தச்சாமி
கவிபொழியச் செய்தவரே ஆடீர் ஊசல்
தேர்வலம் செய் திருவீதிச் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

7. பந்த பாசங்கள் அறப் பணிவோர் தங்கள்
படுதுயரம் தீர்த்திடுவீர் ஆடீர் ஊசல்
வந்தனைக்குச் செவிசாய்ப்பீர் ஆடீர் ஊசல்
வரும் இடர்கள் மாற்றிடுவீர் ஆடீர் ஊசல்
சந்ததமும் சுந்தரமா முனிவர் போற்றச்
சரண் அளித்த சங்கரியே ஆடீர் ஊசல்
சிந்தனை மிக் கவர் வாழும் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

8. தவத் தவரின் தவப்பொருளே ஆடீர் ஊசல்
சமத்துவ மெய்ச் சிவத்துமையே ஆடீர் ஊசல்
சுவைத் தமிழின் தனிச்சுவையே ஆடீர் ஊசல்
சுமப்பவரின் சுகச்சுமையே ஆடீர் ஊசல்
பவக்கடலில் அலைக்கழியும் மனக் கலக்கம்
பணித்திடு மெய்ப் படைக்கலமே ஆடீர் ஊசல்
சிவத்திலகம் எனத்திகழும் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

9. நாரணியே நற்பரையே ஆடீர் ஊசல்
நான் மறையின் நவில் பொருளே ஆடீர் ஊசல்
பூரணியே புரந்தரியே ஆடீர் ஊசல்
புண்ணியத்தின் புண்ணியமே ஆடீர் ஊசல்
காரணியே கார்முகிலே ஆடீர் ஊசல்
கன்னல் மொழிக் கௌமாரீ ஆடீர் ஊசல்
சீரணியாய்த் திகழ்ந்திலகு சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

10. திரு முகத்தில் பொலிவுடையீர் ஆடீர் ஊசல்
திலகம் ஒளிர் பிறை நுதலீர் ஆடீர் ஊசல்
கருணை பொழிகண்ணுடையீர் ஆடீர் ஊசல்
கங்குல் நிறக் கார் குழலீர் ஆடீர் ஊசல்
மருவுமிதழ்ப் புன்னகையீர் ஆடீர் ஊசல்
வளம் வழங்கு கரம் உடையீர் ஆடீர் ஊசல்
திருவடிகள் சரண் அடைந்தோம் சிரவை யூரில்
சிவகாமி அம்பிகையே ஆடீர் ஊசல்

வாழி விருத்தம்

11. கார் முகில்கள் மழைபொழிக பயிர் விளைக
கல்வியுடன் ஒழுக்கம் ஓங்க
சீர் பெருகு சான்றோர்கள் சிறந்திடுக
திருப்பணி செய் தொண்டர் வாழ்க
பார்புகழும் கண்மணியாய்ச் சிரவைநகர்
பாரதத்தில் பரந்தே வாழ்க
நேர்மைமிகு சைவநெறி நிலவுலகில்
நிறைந்தோங்கி வாழ்க வாழ்க.

பத்திரகாளியம்மன் திருத்தாலாட்டு

பத்திரகாளியம்மன் திருத்தாலாட்டு

1. அப்பம் அவல்விரும்பும் ஆனை முகன் அடியார்
ஒப்பரிய நலம்சேர் உளமென் உயர்தொட்டில்
இப்போ துனக்காக இங்கே விடுதந்தார்
செப்பரிய செல்வியே தாலேலோ
சிரவையூர் நாயகியே தாலேலோ.

2. இலகு தமிழ் இறையாம் எம்முருகன் தன்அடியார்
அலகில் மனமென்னும் அணிசேர் மணித்தொட்டில்
திலகநுதலா யுனக்குத் தேர்ந்து விடுதந்தார்
உலகு கொருதாயே தாலேலோ
உயர்சிரவை நாயகியே தாலேலோ.

3. தண்டாயுதபாணிச் சாமி அடியார்கள்
நண்பார் மனமென்னும் நலஞ்சேர் நற்தொட்டில்
பண்பாய் அமைத்துப் பாங்காய் விடுதந்தார்
விண்ணோர் பணிதேவீ தாலேலோ
வியன்சிரவை நாயகியே தாலேலோ

4. குன்றமாம் ரத்னகிரிக் குமரன் அடியார்கள்
பொன்றா மனமென்னும் புகழ்சேர் பூந்தொட்டில்
இன்றைக் கணிபூட்டி எழிலாய் விடுதந்தார்
என்றைக்கும் தாயேநீ தாலேலோ
எம்சிரவை நாயகியே தாலேலோ.

5. பொடியார் திருமேனிப் பொன்னம்பல வாணன்
அடியார் மனமென்னும் அன்புத் திருத்தொட்டில்
வடிவாம் பிகையுனக்கே வகையாய் விடுதந்தார்
முடியா முதலே தாலேலோ
முதற்சிரவை நாயகியே தாலேலோ

6. திருமண் அணிநெற்றித் திருமால் அடியார்கள்
இருகண் நிறைவாக இலங்கும் எழில்தொட்டில்
பெருகும் மனத்தொடு பெய்து விடுதந்தார்
உருகும் மனத்துமையே தாலேலோ
ஒண்சிரவை நாயகியே தாலேலோ

7. வெள்ளைக் கமலத்தாய் விரவும் அடியார்கள்
தெள்ளத்தெளியப் பாத்தொடுத்த செழுந்தொட்டில்
உள்ளத்தால் ஆக்கி உனக்கே விடுதந்தார்
ஒள்ளியசீர்க் காளியம்மை தாலேலோ
ஒளிர்சிரவை நாயகியே தாலேலோ.

8. செல்வத்திருமடந்தை சீரார் அடியார்கள்
நல்ல மனமென்னும் நயஞ்சேர் நறுந்தொட்டில்
வல்லி உனக்கே வகையாய் விடுதந்தார்
எல்லையில் கருணையாய் தாலேலோ
எழிற்சிரவை நாயகியே தாலேலோ.

9. வில்லார் நுதல்வீர மாச்சி அடியார்கள்
வெல்லும் மனமென்னும் விரைசேர் மலர்த்தொட்டில்
மல்லிகையாற்கட்டி மகிழ்ந்து விடுதந்தார்
தில்லை நடத் தாய் தாலேலோ
திருச்சிரவை நாயகியே தாலேலோ

10. வடகிழக்குத் திக்கில் வளர் மாரித் தாயடியார்
திடஞ்சேர் மனமென்னும் சீரார் பணித்தொட்டில்
படமார் அணிபூட்டிப் பாங்காய் விடுதந்தார்
அடல்மிகும் எம்தாயே தாலேலோ
அணிச்சிரவை நாயகியே தாலேலோ

Wednesday, 17 August 2016

பத்திரகாளியம்மன் ஊஞ்சல்

பத்திரகாளியம்மன் ஊஞ்சல்

1. தந்திமுகன் தாயார்நீர் ஆடீர் ஊஞ்சல்
தக்கன்தன் குமரிநீர் ஆடீர் ஊஞ்சல்
செந்தமிழர் மனமென்னும் தொட்டில் தன்னில்
சேர்ந்திருக்கும் உமையம்மை ஆடீர் ஊஞ்சல்
திந்திமென முழவொலிக்கத் தில்லை மன்றில்
தேர்ந்தநடம் புரிகின்றீர் ஆடீர் ஊஞ்சல்
பந்தமற எமைக்காக்கும் சிரவை யூரில்
பத்ரகாளி அம்பிகையே ஆடீர் ஊஞ்சல்

2. வேலவனின் தாயாரே ஆடீர் ஊஞ்சல்
வெள்ளிமலை வீற்றிருப்பீர் ஆடீர் ஊஞ்சல்
ஞாலமெல்லாம் புகழாறு முகவன் கையில்
ஞானவேல் வடிவானீர் ஆடீர் ஊஞ்சல்
சீலமுடன் செம்மைசேர் வாழ்வளிக்கும்
திலகநுதல் தாயார்நீர் ஆடீர் ஊஞ்சல்
காலமெல்லாம் சிரவைமா நகரம் காக்கும்
காளிஉமை சங்கரிநீர் ஆடீர் ஊஞ்சல்

3. கொன்றைமணி செஞ்சடையான் செம்பா கத்தைக்
கோலமுறக் கொண்டருள்வீர் ஆடீர் ஊஞ்சல்
மின்றயங்கும் சிற்றிடையீர் ஆடீர் ஊஞ்சல்
மீனாட்சி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்
நின்றியங்கி உலகத்தை ஆட்டுவிக்கும்
நீலி, திரிசூலி, பரை, ஆடீர் ஊஞ்சல்
மன்றிலங்கும் நாயகிநீர் ஆடீர் ஊஞ்சல்
மாகாளி சிரவையுளீர் ஆடீர் ஊஞ்சல்

4. நாமணக்க உம்புகழை நாங்களெல்லாம்
நலம்பாடி ஆடிடவே ஆடீர் ஊஞ்சல்
பாமணக்க மக்கள்மனப் பயிர்வா டாமல்
பாங்காய்நீர் வரந்தந்தீர் ஆடீர் ஊஞ்சல்
பூமணக்கக் கனிகனியக் கோயில் எல்லாம்
பொலிவடையச் செய்தவரே ஆடீர் ஊஞ்சல்
தேமணக்கும் அதுபோலச் சிரவை யூரைச்
செய்திடவே வேண்டும் எம்தாய் ஆடீர் ஊஞ்சல்

5. அருள்சுரக்கும் நீரூற்றே ஆடீர் ஊஞ்சல்
அடியவரைக்காக்கும் அம்மை ஆடீர் ஊஞ்சல்
பொருள்சுரக்கும் செந்திருவே ஆடீர் ஊஞ்சல்
புனிதநலத் தாயேநீர் ஆடீர் ஊஞ்சல்
மருள்சுரக்கும் மனம்தேர அஞ்சேல் என்று
வாழ்வளிக்கும் அன்னைநீர் ஆடீர் ஊஞ்சல்
தெருள்சுரக்கச் சேய் யானும் உம்மை பாடச்
சிரவைநகர் காத்தருள்வீர் ஆடீர் ஊஞ்சல்

6. அரும்பொருளே ஆரணங்கே ஆடீர் ஊஞ்சல்
அங்கயற்கண் நாயகியே ஆடீர் ஊஞ்சல்
வரும்பகைகள் மாற்றிடுவீர் ஆடீர் ஊஞ்சல்
வளர்காதல் பெண்ணுமையே ஆடீர் ஊஞ்சல்
பெரும்பகையைத் தீர்த்திடுவீர் ஆடீர் ஊஞ்சல்
பிஞ்ஞகனார் பங்கிருப்பீர் ஆடீர் ஊஞ்சல்
சுரும்பாரும் பூங்குழலீர் ஆடீர் ஊஞ்சல்
சொற்சிரவை நகருடையீர் ஆடீர் ஊஞ்சல்

7. விளங்குசிவ சங்கரியே ஆடீர் ஊஞ்சல்
வீரவிளையாட் டுடையீர் ஆடீர் ஊஞ்சல்
களங்கமிலா தெம்மையெல்லாம் காக்கும் தாயே
கன்னி, ஒளிர்சிவகாமி, ஆடீர் ஊஞ்சல்
குளங்காவும் சோலைகளும் வானை முட்டும்
கோபுரமும் ஒளிர்பெறவே விளங்கவேண்டும்
வளம்பலவும் சேர்சிரவை நகரந் தன்னில்
வளர்காளி அம்பிகையே ஆடீர் ஊஞ்சல்

8. ஓங்காரத் துட்பொருளே ஆடீர் ஊஞ்சல்
உத்தமியே மெய்த்தவமே ஆடீர் ஊஞ்சல்
ஆங்காரம் தீர்த்திடுவிர் ஆடீர் ஊஞ்சல்
ஆதிபரா பரையேநீர் ஆடீர் ஊஞ்சல்
தீங்கெம்மை அணுகாமல் காத்து நிற்கும்
திரிபுரைநற் சிவசக்தி ஆடீர் ஊஞ்சல்
பாங்காகச் சிரவையூர்ப் பாதுகாக்கும்
பத்ரகாளி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்

9. அனைநடை யுடையவரே ஆடீர் ஊஞ்சல்
அபிராமி, புகழ்நாமி, ஆடீர் ஊஞ்சல்
மின்னிடையீர் என் அன்னை ஆடீர் ஊஞ்சல்
விழிக்கடையால் அருள்பவரே ஆடீர் ஊஞ்சல்
பொன்பொருளும் தருபவரே ஆடீர் ஊஞ்சல்
புவிஏழும் பூத்தவரே ஆடீர் ஊஞ்சல்
பன் நெடுநாள் சிரவையூர்ப் பாதுகாக்கும்
பத்ரகாளி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்

10. விரைமலர்க் குழல்வல்லி ஆடீர் ஊஞ்சல்
விமலிகற் பகவல்லி ஆடீர் ஊஞ்சல்
மரைமலர்ப் பதவல்லி ஆடீர் ஊஞ்சல்
மாதுளம்பூ நிறவல்லி ஆடீர் ஊஞ்சல்
வரையினிடை வளர்வல்லி ஆடீர் ஊஞ்சல்
வண்டாரும் தார்வல்லி ஆடீர் ஊஞ்சல்
சிரவையூர்த் தென்றிசையில் நின்று காக்கும்
சிற்சத்தி பராசத்தி ஆடீர் ஊஞ்சல்

வாழி வெண்பா

வாழ்க சிரவைநகர் வாழ்பத்ர காளிபுகழ்
வாழ்க அவர்பாதம் வாழ்த்துமன்பர் - வாழ்கவே
வையகமும் வண்தமிழும் வான்மழையும் மாதவரும்
சைவநெறி யாவும் தழைத்து

Saturday, 28 March 2015

ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)

ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)

விநாயகர் வணக்கம்:

கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்
வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்
சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்

வரலாறு, மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்,

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஐயப்பன் கவசம்:

கணபதி துதி,

அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே
இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே
உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே
எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே
ஐங்கரனே அருள் புரிவாய்.

காப்பு:

ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்
ஐயப்ப தேவன் கவசமிதனை
அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே

நூல்:

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலிவாஹனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணியமூர்த்தியே வருக வருக
பூத நாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக

பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவிளை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்

ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்
சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.

பஜனை பாடல்கள்-வழிநடைப் பாடல்


சாமியே - ஐயப்போ
ஐயப்போ - சாமியே
பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் - சுவாமிக்கே
சுவாமிக்கே - நெய் அபிஷேகம்
பால அபிஷேகம் - சுவாமிக்கே
தேன் அபிஷேகம் - சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே
பகவானே - பகவதியே
பகவதியே - பகவானே
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் - குண்டும் குழியும்
ஏந்திவிடையா - தூக்கிவிடைய்யா
தூக்கிவிடைய்யா - ஏந்திவிடைய்யா
வில்லாளி வீரனே - வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே - வில்லாளி வீரனே
பாதபலம் தா - தேக பலம் தா
தேகபலம் தா - பாத பலம் தா
கற்பூர தீபம் - சுவாமிக்கே
அவிலும் மலரும் - சுவாமிக்கே
காணிப்பொன்னும் - சுவாமிக்கே
இருமுடி கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - இருமுடி கட்டு
கற்பூரஜோதி - சுவாமிக்கே
சுவாமிமாரே - ஐயப்பமாரே
ஐயப்பமாரே - சுவாமிமாரே
ஈஸ்வரனே - ஈஸ்வரியே
ஈஸ்வரியே - ஈஸ்வரனே
ஐயப்பபாதம் - சுவாமிபாதம்
சுவாமிபாதம் - ஐயப்பபாதம்
தாங்கிவிடப்பா - ஏந்திவிடப்பா
ஏந்திவிடப்பா - தாங்கிவிடப்பா
கடினம் கடினம் - கரிமலை ஏற்றம்
கரிமலை ஏற்றம் - கடினம் கடினம்
தூக்கிவிடப்பா - ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம் - தூக்கிவிடப்பா
கதலி பழமும் - சுவாமிக்கே
சுவாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
கட்டுங்கட்டி - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - கட்டுங்கட்டி
யாரைக்காண - சாமியைக்காண
சாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
பேட்டை துள்ளல் - சுவாமிக்கே
பெருவழி பாதை - சுவாமிக்கே
கருடன் வருவது - சுவாமிக்கே
ஆபரண பெட்டி - சுவாமிக்கே
தேவன் மாரே - தேவி மாரே
தேவி மாரே - தேவன் மாரே
தேவனே - தேவியே
தேவியே - தேவனே
கடவுள் வணக்கம் - காலை மாலை
காலை மாலை - கடவுள் வணக்கம்
சுவாமியே - ஐயப்போ-ஐயப்போ சுவாமியே

பஜனை பாடல்கள்-பதினெட்டாம் படிகளே சரணம்:


1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

4. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

5. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

6. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

7. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

8. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

9. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

10. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

11. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

12. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

13. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

14. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

15. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

16. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

17. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

18. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

19. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

20. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

பஜனை பாடல்கள்-சாமி சாமி ஐயப்பா

பஜனை பாடல்கள்-சாமி சாமி ஐயப்பா

1. சாமி சாமி ஐயப்பா சபரிமலை ஐயப்பா
சபரிமலை ஐயப்பா சாஸ்தாவே ஐயப்பா

2. அச்சங்கோயில் அரசனே சாமி சாமி ஐயப்பா
ஆதரிக்க வேண்டுமையா சபரிமலை ஐயப்பா

3. குளத்துப்புழை பாலகரே சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

4. கணபதியின் தம்பியே சாமி சாமி ஐயப்பா
கவலைகளைப் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

5. வாபரின் கோட்டை ஐயாசாமி சாமி ஐயப்பா
வரங்களையே கொடுக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

6. காளைகட்டி ஆஸ்ரமம் சாமி சாமி ஐயப்பா
களைப்பார வந்து நின்றோம் சபரிமலை ஐயப்பா

7. அமுதா நதியிலே சாமி சாமி ஐயப்பா
ஆனந்தமாய் குளித்து வந்தோம் சபரிமலை ஐயப்பா

8. கரிமலை உச்சியிலே சாமி சாமி ஐயப்பா
கடினமாக ஏறிவந்தோம் சபரிமலை ஐயப்பா

9. பம்பா நதியிலே சாமி சாமி ஐயப்பா
பாவமெல்லாம் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

10. நீலிமலை ஏற்றத்திலே சாமி சாமி ஐயப்பா
நிற்க வைத்து பார்க்கிறியே சபரிமலை ஐயப்பா

11. சரங்குத்தி வந்தடைந்தோம் சாமி சாமி ஐயப்பா
சன்னிதானம் கண்டோமே சபரிமலை ஐயப்பா

12. நெய்யப்பிஷேகத்தோடு சாமி சாமி ஐயப்பா
நேரில் காண வந்தோம் சபரிமலை ஐயப்பா

13. குற்றம் குறை எதுவானாலும் சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா.

பஜனை பாடல்கள்-அல்லி மலர் வாசமது:

பஜனை பாடல்கள்-அல்லி மலர் வாசமது:

1. அல்லி மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஹரி ஹர புத்திரனின் மேலே மணக்குது

2. அத்தர் புனுகு வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமியின் மேலே மணக்குது

3. மல்லிகை பூ மரிக்கொழுந்து எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மணிகண்ட சுவாமியின் மேலே மணக்குது

4. முல்லை மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மோகன பாலனின் மேலே மணக்குது

5. ரோஜா மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ராஜாதி ராஜனவன் மேலே மணக்குது

6. காட்டுமல்லி நாட்டுமல்லி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
கருணாகர மூர்த்தியின் மேலே மணக்குது

7. பரிமள சாம் பிராணி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
எரிமேலி சாஸ்தாவின் மேலே மணக்குது

8. கற்பூர வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
காந்தமலை வாசனவன் மேலே மணக்குது

9. சந்தன வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
சபரி கிரி மலையின் மேலே மணக்குது

10. குங்குமப் பூ ஜவ்வாது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
குளத்துப் புழை பாலகனின் மேலே மணக்குது

11. பன்னீரும் குல் கந்தும் எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
பந்தள செல்வனவன் மேலே மணக்குது

12. மகர மாதம் ஜோதியது எங்கே தெரியுது
அது எங்கே எங்கே தெரியுது
கரந்தமலை உச்சியின் மேலே தெரியுது

13. மஞ்ச பொடி மகிமையது எங்கே தெரியுது
அங்கே எங்கே எங்கே தெரியுது
மஞ்ச மாதா தேவியவள் மேலே தெரியுது

14. விபூதி அபி÷க்ஷகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
வீரமணிகண்டன் மேலே நடக்குது

15. நெய்யா அபிஷேகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
சாஸ்தாவாம் ஐயப்பனின் மேலே நடக்குது

16. சரண கோஷ சப்தமது எங்கே ஒலிக்குது
அது எங்கே எங்கே ஒலிக்குது
சுவாமியாம் ஐயப்பன் மலையில் ஒலிக்குது.

தள்ளாடித் தள்ளாடி நடை நடந்து - நாங்க சபரிமலை நோக்கி வந்தோமய்யா (தள்ளாடி)

 தள்ளாடித் தள்ளாடி நடை நடந்து - நாங்க
சபரிமலை நோக்கி வந்தோமய்யா (தள்ளாடி)

1. கார்த்திகை நல்ல நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையும் மாலையும் சரணங்கள் சொல்லிகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)

2. இருமுடியைக் கட்டிகிட்டு இன்பமாக பாடிகிட்டு
ஈசன் மகனெ உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு (தள்ளாடி)

3. வேட்டைகளும் துள்ளி கிட்டு வேஷங்களும் போட்டுகிட்டு
வேடிக்கையாக நாங்கள் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் (தள்ளாடி)

4. காணாத காட்சியெல்லாம் கண்ணாரக் கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையாத் தாண்டிகிட்டு
பம்பையில் குளித்து விட்டு பாபமெல்லாம் போக்கி விட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று பஜனைகள் பாடிக்கிட்டு (தள்ளாடி)

5. நீலிமலை ஏற்றத்திலே நின்று நின்று ஏறிக்கிட்டு
நெஞ்சம் உருகி உன்னை நினைச்சுமே பார்த்துகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே (தள்ளாடி)

6. படியேறி போகும் போது பாங்காகக்காய் உடைத்து
பாலனான உந்தனையே பார்த்து சொக்கிகிட்டு
நெய்யிலே குளிக்கும் போது நேரிலேயே பார்த்து கிட்டு
ஐயா சரணம் என்று அலறியடிச்சுக் கிட்டு (தள்ளாடி)

சன்னதியில் கட்டுங்கட்டி


 1. சன்னதியில் கட்டுங்கட்டி தன்னே னானான - நாங்க
சபரிமலை பயணமுங்க தில்லேலே லேலோ

2. கார்த்திகையில் மாலைப்போட்டு தன்னே னானான - நாங்க
கடும் பயணம் போறோமுங்க தில்லேலே லேலோ

3. மார்கழியில் கட்டுந்தாங்கி தன்னே னானான - நாங்க
மணிகண்டனைப் பார்க்க போறோம் தில்லேலே லேலோ

4. எரிமேலியில் பெட்டை துள்ளி தன்னே னானான - நாங்க
ஏறிடுவோம் சபரிமலை தில்லேலே லேலோ

5. அழுதையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
அன்னதானம் மிட்டிடுவோம் தில்லேலே லேலோ

6. பம்பையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
சக்தி பூஜை கொண்டாடுவோம் தில்லேலே லேலோ

7. ஐந்து மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
ஐயப்பனை காணப் போறோம் தில்லேலே லேலோ

8. மலையாம் மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
மகர ஜோதி காணப் போறோம் தில்லேலே லேலோ

9. பதினெட்டாம் படியேறி தன்னே னானான - நாங்க
பாவங்களைத் தீர்க்க போறோம் தில்லேலே லேலோ

பஜனை பாடல்கள்-ஐயப்பசாமி - ஆறுமுகசாமி:

பஜனை பாடல்கள்-ஐயப்பசாமி - ஆறுமுகசாமி:

1. சரணம் சாமி சரணம்சாமி ஐயப்பசாமி
அரோகரா அரோகரா ஆறுமுகசாமி

2. பம்பையிலே உதித்தவராம் ஐயப்பசாமி
பொய்கையிலே உதித்தவராம் ஆறுமுகசாமி
திருமாலின் திருமகனாம் ஐயப்பசாமி
திருமாலின் மருமகனாம் ஆறுமுகசாமி

3. சபரிமலை மீதிருப்பார் ஐயப்பசாமி
பழனிமலை மீதிருப்பார் ஆறுமுகசாமி
புலிக் கொடியைக் கொண்டவராம் ஐயப்பசாமி
சேவற்கொடி அழகனையப்பா ஆறுமுகசாமி

4. ஐந்து மலைக் கதிபதியாம் ஐயப்பசாமி
ஆறு மலைக் கதிபதியாம் ஆறுமுகசாமி
வில்எடுத்து வருபவராம் ஐயப்பசாமி
வேல் எடுத்து வருபவராம் ஆறுமுகசாமி

5. காடுமலை நாடியவர் ஐயப்பசாமி
குன்றேறி நின்றவர்தான் ஆறுமுகசாமி
வாபரைத் துணைக்கொண்டார் ஐயப்பசாமி
பாகுவைத் துணைக்கொண்டார் ஆறுமுகசாமி

6. சரண கோஷ பித்தராம் ஐயப்பசாமி
அரோகர பித்தராம் ஆறுமுகசாமி
மகிஷியைக் கொன்றவராம் ஐயப்பசாமி
சூரனை வென்றவராம் ஆறுமுகசாமி

7. இன்று வரை பிரம்மச்சாமி ஐயப்பசாமி
இருதாரம் கொண்டவராம் ஆறுமுகசாமி
இருமுடி பிரியனையா ஐயப்பசாமி
காவடி பிரியனையா ஆறுமுகசாமி

8. நெய்யா அபிஷேகராம் ஐயப்பசாமி
பாலா அபிஷேகராம் ஆறுமுகசாமி
ஊமைக் கருள் புரிந்தவராம் ஐயப்பசாமி
ஒளவைக்கு உபதேசித்தவர் ஆறுமுகசாமி

9. புலியேறி வருபவராம் ஐயப்பசாமி
மயிலேறி வருபவராம் ஆறுமுகசாமி
பாணக்க பிரியராம் ஐயப்பசாமி
பஞ்சாமிர்தப் பிரியராம் ஆறுமுகசாமி

10. தை மகர கீர்த்தியவர் ஐயப்பசாமி
தை பூச மூர்த்தியவர் ஆறுமுகசாமி
அருள் வழங்கும் வள்ளலவர் ஐயப்பசாமி
அழகு தமிழ் ஆனழகர் ஆறுமுகசாமி

சமயபுரம் மாரியம்மா

சமயபுரம் மாரியம்மா,

1. சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

2. மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்

3. துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா - அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா

4. பட்டு பீதாம்பரத்தில தாவணியும் - உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்

5. எட்டு திசைகளையும் ஆண்டவனே - அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா

6. கத்தி கதறுகிறோம் கேட்கலையோ - தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ

7. உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பில் - எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா

8. காலிற் சதங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா

9. பூவாடை வீசுதம்மா அம்மா
பூமகளே என் தாயே மாரியம்மா

தாயே சமயபுரத்தாளே!
எல்லாம் உன் அடிமையே!
எல்லாம் உன் உடமையே!
எல்லாம் உன் செயலே!


செல்லாத்தா செல்ல மாரியாத்தா,

செல்லாத்தா செல்ல மாரியாத்தா,

செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
பொன்னாத்தா உன்னைக் காணாட்டா - இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா  (செல்)

தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தென்னை மரத் தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழிதனையே காட்டி விடு மாரியாத்தா (செல்)

பசும்பாலை கறந்துகிட்டு கறந்த பாலை எடுத்து கிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி நீ பாம்பாக மாறி அதை
பாங்காக குடித்து விட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா - இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்)
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா - எங்கள்
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா

பிள்ளையார் துதி,

பிள்ளையார் துதி,

1. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

2. ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

3. ஆனைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வயிறு படைத்தவர் பக்தர் குறைத்தீர்த்தவர்

4. மஞ்சனிலே செய்யினும் மண்ணனாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்

5. ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

6. அவல் பொரிக்கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும்
கவலை யின்றித் திண்ணுவார் கஷ்டங்களை போக்குவார்

7. கலியுகத்து விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம்போல் சுற்றுவார்.


அரிஹரோ ஹரா சுவாமி,

அரிஹரோ ஹரா சுவாமி,

அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா
அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா

1. திருப்பரங் கிரி தீரனுக்கு அரஹரோஹரா
தெய்வயானை மணாளனுக்கு அரஹரோஹரா
செந்தில் வளர் கந்தனுக்கு அரஹரோஹரா
செஞ்சுடர் வேல் வேந்தனுக்கு அரஹரோஹரா

2. பழனிமலை வேலனுக்கு அரஹரோஹரா
பாலா பிஷேகனுக்கு அரஹரோஹரா
சுவாமிமலை நாதனுக்கு அரஹரோஹரா
சுப்ரமண்ய மாணவர்க்கு அரஹரோஹரா

3. தணிகைமலை செல்வனுக்கு அரஹரோஹரா
தனித்து நின்ற குமரனுக்கு அரஹரோஹரா
சோலைமலை முருகனுக்கு அரஹரோஹரா
சொகுசுக்கார வேலனுக்கு அரஹரோஹரா

4. கந்தன் கடம்பனுக்கு அரஹரோஹரா
கதிர்காம வேலனுக்கு அரஹரோஹரா
சிக்கல் சிங்காரனுக்கு அரஹரோஹரா
சிங்கார வேலனுக்கு அரஹரோஹரா

5. எட்டுக்குடி வேலனுக்கு அரஹரோஹரா
எங்குள் குல தேவனுக்கு அரஹரோஹரா
மருதமலை மன்னனுக்கு அரஹரோஹரா
மாந்தர் தொழும் மாறனுக்கு அரஹரோஹரா

6. வெள்ளிமலை வேலனுக்கு அரஹரோஹரா
வள்ளி மணாளனுக்கு அரஹரோஹரா
அபிஷேகப் பிரியனுக்கு அரஹரோஹரா
ஆனந்த வடிவனுக்கு அரஹரோஹரா

பஜனை பாடல்கள்- ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச



பஜனை பாடல்கள்-
ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷ்மாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷ்மாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷ்மாம்

ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ரக்ஷ்மாம்

மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ரக்ஷ்மாம்

ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ரக்ஷ்மாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷ்மாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷ்மாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீச சபரிகிரீச சபரிகிரீச ரக்ஷ்மாம்

வெங்கடேச வெங்கடேச வெங்கடேச பாஹிமாம்
ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ரக்ஷ்மாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷ்மாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷ்மாம்


பஜனை பாடல்கள்-கணேசா சரணம்

பஜனை பாடல்கள்-கணேசா சரணம்

கணேசா சரணம் சரணம் கணேசா
கணேசா சரணம் சரணம் கணேசா (கணேசா)

 கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா
கருணையின் வடிவே சரணம் கணேசா (கணேசா)

 சங்கடம் தீர்ப்பாய் சரணம் கணேசா
சண்முக சோதரா சரணம் கணேசா (கணேசா)

 சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சாஸ்தா சோதரா சரணம் கணேசா (கணேசா)

 முதல்வனும் நீயே சரணம் கணேசா
முனிதொழும் தேவா சரணம் கணேசா (கணேசா)

 அகந்தை அழிந்திடும் சரணம் கணேசா
அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா (கணேசா)

 கரிமுகன் நீயே சரணம் கணேசா
கதியெனத் தொழுவோம் சரணம் கணேசா (கணேசா)

 மூஷிக வாகனா சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா (கணேசா)

 பார்வதி பாலா சரணம் கணேசா
பாகவதப் பிரியா சரணம் கணேசா (கணேசா)

Thursday, 5 March 2015

கந்தர் அனுபூதி

கந்தர் அனுபூதி


(அருணகிரி நாதர் அருளியது)


காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

நூல் 
ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே. 1

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே. 2

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே. 3

வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே. 5

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே. 6

கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே. 7

அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே. 8

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே. 10

கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே. 11

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே. 12

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே. 14

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே. 15

பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோ ரா வினையே னுழலந் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே. 16

யாமோதிய கல்வியு மெம் மறிவுந்
தாமே பெற வேலவர் தந்தனாற்
பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர்
தாமேல் நடவீர் நடவீ ரினியே. 17

உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூர் பயங் கரனே. 18

வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடி யென்றொரு பாவி வௌiப் படினே. 19

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண்
உரிதா வுபதேச முணர்ந் தியவா
விரிதாரண விக்ரம் வேளி மையோர்
புரிதா ரக நாக புரந்தரனே. 20

கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே. 21

காளைக் குமரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும்
வேளைச் சுரபூ 

அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூத ரனே 23

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரத்தா பூப தியே. 24

மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றிய சேவகனே. 25 

ஆதார மிலே னருளைப் பெறவே
நீதா னொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோ தமனோ
கீதா சுரலோக சிகா மணியே. 26

மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலேறிய வானவனே. 27 

ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரவே. 28

இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
பொல்லே னறியாமை பொறுத் திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. 29

செல்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே. 30

பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே. 31

கலையே பதறிக் கதறிக் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையானே. 32

சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந்த வரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே. 33

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்கார லெனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகா வலசண் முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே. 34

விதிகாணு முடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே. 35

நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே. 36

கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியொடு மகந் தையையே. 37

ஆதாளிaய யொன் றறியே னையறத்
தீதாளியை யாண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ்வே லவனே. 38

மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணருந்
தேவே சிவ சங்கர தேசிகனே. 39

வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
கனையோ டருவித் துறையோடு பசுந்
தினையோ டிதணோடு திரிந் தவனே. 40

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே. 41

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையு மற்றதுவே. 42

தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யின்பின்
பேசா அநுபூதி பிறந் ததுவே. 43

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே. 44

கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே. 45

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே. 46 

ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே. 47

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே. 48

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே. 49

மதிகெட்டறவா டிமயங் கியறக்
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே. 50

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே. 51

திருச்சிற்றம்பலம் 

கந்தர் அலங்காரம்
(அருணகிரி நாதர் அருளியது)



காப்பு
அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்
தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.

நூல்
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே. 1

அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. 2

தேரணி யிட்டுபட புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நௌiந்ததுசூர்ப்
பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே. 3

ஓரவொட்டாரொன்றை யுன்னவொட்டார்மலரிட்டுனதான்
சேரவொட்டாரைவர் செய்வதென்யான் சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிக்கக்
கூரகட்டாரியிட் டோ ரிமைப் போதினிற் கொன்றவனே. 4


திருந்தப் புவனங்களீன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே. 5

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மாநந்தந் திfத்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே. 6

சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குட் டவிக்கு மென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. 7

ஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே. 8

தேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே. 9

சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கு
மெல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச்
செவ்வாய்வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. 10

குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்து மேரு அடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டே 11

படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகழிந்
துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்
இடைப்பட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே. 12

ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிபட் டெட்டு வெற்புங்கனகப்
பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே. 13

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்கு வெற்பும்
அப்பாதி யாய் விழ மேருங் குலங்கவிண்ணாரு முய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே. 14

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே. 15


இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெரு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் தொளக்கலை வேல்
விடுங்கொ னருள் வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. 16

வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைச்
பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வௌiக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே. 17

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18

சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொளுத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணரந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம் பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே. 19

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. 20

மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணப் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே. 21

மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. 22

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண்டோ ட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே. 23

கின்னங் குறித்தடி னேfசெவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வௌiயாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே. 24

தண்டாயுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாய டாவந்த காவந்து பார்சற்றென் கைக் கெட்டவே. 25

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
சீலத்தை மௌfளத் தௌiந்தறி வார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங்களே. 26

ஓலையுந் தூதருங் கண்டுதிண்டாட லொழித் தெனக்குத்
காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே. 27

வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான் மனவாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே. 28

கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான் கடந் தேன் சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே. 29

பாலென் பதுமொழி பஞ்னெf பதுபதம் பாவையர்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. 30

பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல் தொட்ட காவலனே. 31

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னே துறந் தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைத்த வதைக்குங் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்தாள் வந்திரட்சிப்பையே. 32

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே. 33

பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்வழி யார்வலைக்கேமனங் கட்டுண்டதே. 34

பத்திற் துறையிழிந் தாநந்த வாரி படிவதானால்
புத்தித் தரங்கந் தௌiவதென் றோபொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட கட்டியிலே
குத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே. 35

கழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்பமின்பங்
கழித்தோடு கின்றதெக்கால நெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென் கிலையெங்ங னே முத்தி கிட்டுவதே. 36

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே. 37

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 38

உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிலொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோ வெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே. 39

சேல்பட் டழிந்தது செந்துaர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. 40

பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே. 41

நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிங்குங்
குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டி மல்குற் குரகுங் குமரன் பதாம்புயத்தை
வணங்லாத் தவைaங்கி தெங்கே யெனக்கிங் ஙன் வாய்த்ததுவே. 42

கவியாற் கடலடைத் தோன் மரு கொனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றி யன்பாற்
குவியாக் கரங்கள் வந்தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே. 43

தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே. 44

ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகைப்
பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக்
குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே. 45

நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்த னேசெந்தி லாய் சித்ர மாதரல்குற்
றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மநோதுக்க மானது மாய்வயதற்கே. 46

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே. 47

பத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. 48

சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்சூழாஞ்
சாரிற் கதியின்றி வேறிலை காண்தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே. 49

படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே. 50

மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியபின்
நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்
தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
இலையா யினும் வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே. 51

சிகாராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ, பணி பாசசங் க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமார
குமராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே. 52

வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
றேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே. 53

சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்கொன்
றீகைக் கெனை விதித் தாயிலை யே யிலங் காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே. 54 

ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பு மறார் தினைப் போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்புசெய்யா ரென்செய்வார் யம தூதருக்கே. 55

கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக்
குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே. 56

பொருபிடி யுங்களி றும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முக வாவென் சாற்றிநித்தம்
இருபிடி சோகொண் டிட்டுண்டிருவினை யோமிறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாயவுடம்பிதுவே. 57

நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார்க் கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே. 58

பொங்கார வேலையில் வேலைவிட் டோ னருள் போலுதவ
எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த
வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே. 59

சிந்திக் கிலேனின்று சேவிக்கு லேன்றண்டைச் சிற்றடியை
வந்திக் கிலேனொன்றும் வாழ்த்துகி லேன் மயில் வாகனனைச்
சந்திக் கிலேன் பொய்யை நிந்திக் கிலேனுண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே. 60

வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே. 61 

ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
மாலுக் கணிகலம் தண்ணந் துழாய்மயி லேறுமையன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே. 62

பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப்
போதித்த நாதனைப் போர் வேலனைச்சென்று போற்றியுய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச்
சாதிதfத புத்திவந் தெங்கே யெனக் கிங்ஙன் சந்தித்ததே. 63

பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப் போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பொரு மாள் திரு முன்புநின்றேன்
கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே. 64

வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள்
எட்டுங் குலகிரி யெட்டும் விட் டோ ட வெட் டாதவெளி
மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே. 65

நீர்க்குமிழக்கு நிகரென்பர் யாக்கைநில்லாது செல்வம்
பார்க்கு மிடத் தந்த மின் போலுமென்பர் பசித்துவந்தே
ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்
வேற்குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றெ. 66

பெறுதற் கறிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
குறிகிப் பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்பத்
தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி
இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே. 67

சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே
ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப்
பாடுங் கவுரி பவுரிகொண்டா டப்பசுபதின்
றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே. 68

தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச் சுவாமி யெனைத் தேற் றிய பின்னர்க் காலன்வெம்பி
வந்திப் பொழுதென்னை யென் செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்
சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே. 69

விழிக்கு துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே. 70

துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. 71

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. 72

போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில்லாத தொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆநந்தமே. 73

அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற்
குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டுங் கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால்
இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யௌiதல்லவே. 74

படிக்கின் றிலைபழு நித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுருகா வென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே. 75

கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாள னெதென் தணிகைக் குமரநின் றண்டைந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்
பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே. 76

சேல்வாங்கு கண்ணியர் வண்ண் பயோதரஞ் சேரஎண்ணி
மால்வாங்கி யேங்கி மயங்காமல் வௌfளி மலையெனவே
கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
நூல் வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே. 77

கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண்டாடுவிர்காள்
போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந்
தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவரையே கெடுவீர்நும் மறிவின்மையே. 78

பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங்
கந்தா இளங்குமரா அமராவதி காவலனே. 79

மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. 80

தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற் கட்டுஞ்
சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே. 81

தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தரு ளாய்புண்ட ரீகனண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டிப்
பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே. 82

தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்
வாங்கி யினுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே. 83

மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்
பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே. 84

காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத்தைப்புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவௌi தேவிழி நாசிவைத்து
மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே. 85

வேலாயுதன் சங்கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியாச்
சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்
காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்
பாலா யுதம் வருமோய னோடு பகைக்கினுமே. 86

குமரா சரணஞ் சரணமனெf றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையோடு வந்தினி யென்செயுமே. 87

வணங்கித் துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்குணங்
கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும்
பிணங்கத் துணங்கை யலகை கொண்டாடப் பிசிதர்தம்வாய்
நிணங்கக்க விக்ரம வேலா யுதந் தொட்ட நிர்மலனே. 88

பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை
தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப்
போங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே. 89

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செஙfகோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. 90

கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப்
பொருமா வினைச் செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்
தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. 91

தொண்டர்கண் டண்டிமொண் டுண்டுருக் குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டயம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்ட வெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்லரண் டங்கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்விண் டோ டாமல் வேல்தொட்ட காவலனே. 92

மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே. 93

தௌfளிய ஏனவிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்
வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை சிறு வள்ளைதள்ளித்
துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதக் சொல்லைநல்ல
வௌfளிய நித்தில வித்தார Yமூரலை வேட்டநெஞ்சே. 94

யான்றானெனுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவௌiக் கேவந்து சந்திப்பதே. 95

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96

சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப்
பாலிக்கு மாயனுஞ சக்ரா யுதமும் பணிலமுமே. 97

கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. 98

காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தாவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. 99

இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
கெடுதலி லாத்தொண் டரிற் கூட் டியவா கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே. 100

சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே. 101

திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வாண வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே. 102

இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்
குராப்புனை தண்டையந் தாளரு ளாய் கரி கூப்பிட்டநாள்
கராப்புடக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே. 103

செங்கே ழடுத்த சிவனடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந்தெதிர் நிற்பனே. 104 

ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன் வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே. 105

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந்
தௌfளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவி
வள்ளிக்கு வாய்த்தவ னே மயிலேறிய மாணிfக்கமே. 106

சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்ட நமக்கொரு மெய்த்துணையே. 107

கந்தர் அலங்காரம் முற்றிற்று

வேல் - மயில் - சேவல் விருத்தம் 1 - 6
(அருணகிரி நாதர் அருளியது)

மயில் விருத்தம் - காப்பு
நாட்டை - ஆதி 2 களை

சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புய
சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும்

கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும்
கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய்

கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத
கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்

எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக
சிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே

(கனபதி தெய்வ சகோதரனே வினாயக தெய்வ சகோதரனே)

---.


சேவல் விருத்தம் - காப்பு

கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருள
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற்

செந்தாமரை கடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட

வந்தே சமர்ப்பொரு மிண்டாகிய கய மா முகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம் மா மேருவில் எழுதி

பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கம் அதை
பார்மிசை வைத்த வினாயகன் முக்கட் பரமன் துணையாமே

(முக்கட் பரமன் துணையாமே வினாயகன் பரமன் துணையாமே)

---.


வேல் விருத்தம் - 1
கம்சத்வனி - கண்ட சாபு

மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே

வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வு பெறும் அறு சிறையவான்

சிகரவரை மனை மறுகு தொறு ஞுளைய மகளிர் செழு
செனெல்களொடு தரளம் இடவே

ஜகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
திடர் அடைய ஞுகரும் வடிவேல்

தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி
தரு கவுளும் உறு வள் எயிறுன்

தழை செவியும் ஞுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்

குகரமலை எயினர்க்குல மடமயிலும் என இருவர்
குயமொடமர் புரியு முருகன்

குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே

(குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு கொடிய வேலே)

---.


மயில் விருத்தம் - 1
கம்சட்வனி - கண்ட சாபு

சந்தான புஷப பரிமள கிண்கிணீ முக
சரண யுகளமிர்த்த ப்ரபா

சன்ற சேகர முஷிகாருட வெகுமோக
சத்ய ப்ரியாலிங்கன

சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி
யம்பக வினாயகன் முதற்

சிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
சித்ர கலாப மயிலாம்

மந்தா கினிப் பிரபவ தரங்க விதரங்க
வன சரோதய கிர்த்திகா

வர புத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்

இந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரண
இகல்வேல் வினோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே

(ரத்னக் கலாப மயிலே
ரத்னக் கலாப மயிலே)

---.


சேவல் விரித்தம் - 1
கம்சத்வனி கண்ட சாபு

உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பர கதி தெரியவே

உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே

கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்

கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றா டுமாம்

மலைகள் நெறு நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடிய அயில் கடவு முருகன்

மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற
வரிசையின மகள் அவளுடன்

சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண
சிறுவன் அயன் வெருவ விரகிற்

சிரமிசையில் வெகு சினமொட் அடியுதவும் அறுமுகவன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே அறுமுகவன் சேவற்திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு

வெங்க் காள கண்டர் கை சூலமுன் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்

விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்க் கல்லி
வெல்லா எனக் கருதியே

சங்க்ராம நீஜயித்து அருளெனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப

சயிலமொடு சூரனுடல் ஒருனொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசன

கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாக்ஷி சைவ

சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வ

சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்க்கள் குலாந்தகன்
செம்பொட்ற்றிருக்கை வேலே

(முருகன் திருக்கை வேலே அறுமுகவன் திருக்கை வேலே)

---.


மயில் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு

சக்ரப் ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து வெளி
பட்டுக் க்ரவுஞ்ச சயிலன்

தகரப் பெருங்க் கனக சிகர சிலம்புமெழு
தனிவெற்பும் அம்புவியும் எண்

திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம் பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுன் கவுரி
பத்மப் பதங்க் கமழ்தரும்

பகீரதி ஜடில யொகீசுரர்க் உரிய
பரம உபதேசம் அறிவி

கைக்கு செழும் சரவணத்திற் பிறந்த ஒரு
கந்த சுவாமி தணிகை

கல்லார கிரியுருக வரு கிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே

(கலாபத்தில் இலகு மயிலே
மரகத கலாபத்தில் இலகு மயிலே)

---.


சேவல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு

எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம
ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும்

ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை
ஈனப் பசாசு களையும்

கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்

கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்
கரத் தடர்த்துக் கொத்துமாம்

தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடு கிடென நடனம்

தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய
சரண அழகொடு புரியும் வேள்

திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள்
தெரியும் அரன் உதவு குமரன்

திமிர தினகர முருக சரவண பவன் குகன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே குகன் சேவற் திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 3
சாரங்கா - கண்ட சாபு

வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும்
வெகுளுறு பசாச கணமும்

வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
வெம்பசி ஒழிக்கவந்தே

ஆதார கமடமுங்க் கணபண வியாளமும்
அடக்கிய தடக் கிரியெலாம்

அலைய நடமிடு நெடுன் தானவர் நிணத்தசை
அருந்தி புரந்த வைவேல்

தாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை
தனிப்பரங்க் குன்றேரகம்

தணிகை செந்தூரிடைக் கழி ஆவினங்குடி
தடங்க் கடல் இலங்கை அதனிற்

போதார் பொழில் கதிர்க்காமத் தலத்தினை
புகழும் அவரவர் நாவினிற்

புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
புங்கவன் செங்கை வேலே

(கந்தங்குகன் செங்கை வேலே முருகன் குகன் செங்கை வேலே)

---.


மயில் விருத்தம் - 3
சாரங்கா - கண்டசாபு

ஆதார பாதளம் பெயர அடி பெயர மு
தண்ட முகடது பெயரவே

ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயர எறி
கவுட்கிரி சரம் பெயரவே

வேதாள தாளங்களுக் கிசைய ஆடுவார்
மிக்க ப்ரியப்பட விடா

விழிபவுரி கவுரி கண்ட் உளமகிழ விளையாடும்
விச்தார நிர்த்த மயிலாம்

மாதானு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா

மறைமுனி குமாரி சாரங்கனன் தனிவந்த
வள்ளிமணி ஞூபுர மலர்

பாதார விந்த சேகரனேய மலரும் உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்

படைனிருதர் கடகம் உடைபட நடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே

(பசுந்தோகை வாகை மயிலே
பச்சை பசுந்தோகை வாகை மயிலே)

---.


சேவல் விருத்தம் - 3
சார்ங்கா - கண்டசாபு

கரி முரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை இறுக்கியு முறைத்து

கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடரும் அக்
காலத்தில் வேலு மயிலும்

குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வர
குரலொலித் அடியரிடை

குலத்தலறு முக்கிற்சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்

அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற்
பனமுறைத் தத மிகவுமே

அமணரைக் கழுவில் வைத்தவரு மெய்ப் பொடிதரித்து
அவனிமெய்த் திட அருளதார்

சிவபுரத் அவதரித் தவமுதத் தினமணி
சிவிகை பெற்றினிய தமிழை

சிவனயப் புற விரித்துரை செய் விற்பனன் நிகற்
சேவற்திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே
குருபரன் சேவற்திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி

அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல
அங்கியும் உடன் சுழலவே

அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல
அகில தலமும் சுழலவே

மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
மாணப் பிறங்கி அணியும்

மணி ஒலியினிற் சகல தலமு மருள சிரம
வகை வகையினிற் சுழலும் வேல்

தண்டம் உடனுங்க் கொடிய பாசம் உடனுங்க் கரிய
சந்தம் உடனும் பிறைகள்போல்

தந்தமுட ஞும் தழலும் வெங்கண் உடனும் பகடு
தன்புறம் வரும் சமனை யான்

கண்டு குலையும் பொழுதில் அஞ்ஜலென மெஞ்சரண
கஞ்ஜம் உதவும் கருணைவேள்

கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே

(கந்தன் அடல் கொண்ட வேலே
முருகன் அடல் கொண்ட வேலே)

---.


மயில் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி

யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
உதித்த தென்ற் அயன் அஞ்ஜவே

ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற் குவடுறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந் இரு
விசும்பிற் பறக்க விரினீர்

வேலை சுவற சுரர் நடுக்கங்க் கொளச்சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்டவுணர் நெஞ்ஜம் பிளந்த நர
கேசரி முராரி திருமால்

நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகோடி அனவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்

முருகனுமை குமரன் அறு முகன் நடவு விகடதட
முரிக் கலாப மயிலே

(விகடதட முரிக்கலாப மயிலே
சிறகை வீசிப் பறக்கு மயிலாம்)

---.


சேவல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி

அச்சப் படக் குரல் முழக்கிப் பகட்டி அல
றிக் கொட்டமிட்ட் அமரிடும்

அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறு குழைகளைக் கொத்தியே

பிச்சு சினத்த் உதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே

பெற்றுச் சுடர் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்

பொய் சித்திரப் பலவும் உட்கத் திரை ஜலதி
பொற்றைக் கறுத் அயில்விடும்

புட்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ் செட்டி சுப்ரமணியன்

செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினை

தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே
சுப்ரமணியன் சேவற்திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு

ஆலமாய் அவுணருக் அமரருக் அமுதமாய்
ஆதவனின் வெம்மை ஒளிமீது

அரியதவ முனிவருக் இந்துவில் தண்ணென்ற்
அமைந்த் அன்பருக்கு முற்றா

முலமாம் வினை அறுத் அவர்கள் வெம் பகையினை
முடித் இந்திரர்க்கும் எட்டா

முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளித் எந்த
முதண்டமும் புகழும் வேல்

ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும்
இன்பணைகள் உமிழு முத்தும்

இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
இலவங்க நறவமாருன்

தாலமா மரமுதற் பொருள் படைத் திடும் எயினர்
தரு வனிதை மகிழ்னன் ஐயன்

தனினடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
சரவணக் குமரன் வேலே

(முதண்ட மும்புகழும் வேல்
சரவணக் குமரன் வேலே)

---.


மயில் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்டசாபு

ஜோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபி
நய துல்ய சோம வதன

துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள்
யாவுங்க் கொடுஞ்ஜ சிறகினால்

அணையுன் தனது பேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங்க் கலப மயிலாம்

நீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்

நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியாகுலன் சங்குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன்
மாதவன் முராரி திருமால்

மதுகைட வாரி திரு மருகன் முருகன் குமரன்
வரமுதவு வாகை மயிலே

(முருகன் கலாப மயிலே
வரமுதவு வாகை மயிலே)

---.


சேவல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு

தான இடும்புசெயு மோகினி இடாகினி
தரித்த வேதாஅள பூதம்

சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித்
தடிந்து சந்தோட முறவே

கோனாகி மகவானும் வனாள வனாடர்
குலவு சிறை மீள அட்ட

குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள்
கொட்டி எட்டிக் கூவுமாம்

மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவனற் குருபரன்

வானீரம் அவனியழல் காலாய் நவக் கிரகம்
வாழ்னாள் அனைத்தும் அவனாம்

சேனா பதித் தலைவன் வேதாவினை சிறைசெய்
தேவாதி கட் கரசு கட்

டேனான மைக்கடலின் மீனானவற் கினியன்
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே
குருபரன் சேவற் திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 6
சிந்துபைரவி - கண்ட சாபு

பந்தாடலிற் கழங்க் காடலிற் சுடர் ஊசல்
பாடலினொ டாடலின் எலாம்

பழந்தெவ்வர் கட்கம் துணித் இந்திரர்க் அரசு
பாலித்த திறல் புகழ்ந்தே

சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும்
சசிமங்கை அனையர்த்தாமுன்

தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
தலைமையும் பெற்ற வைவேல்

மந்தாகினித் தரங்க சடிலருக் அரிய
மந்த்ற்ற உபதேச நல்கும்

வரதேசிகன் கிஞ்சுகச் சிகா லங்கார
வாரணக் கொடி உயர்த்தோன்

கொந்தார் மலர்க் கடம்பும் செச்சை மாலையும்
குவளையும் செங்க் காந்தளும்

கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன்
கோலத் திருக்கை வேலே

(தேசிகன் கோலத் திருக்கை வேலே)

---.


மயில் விருத்தம் - 6
சின்துப்கைரவி - கண்ட சாபு

சங்கார காலமென அரிபிரமர் வெருவுற
சகல லோகமு நடுங்க

சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்
சஞ்சலப் பட உமையுடன்

கங்காளர் தனி நாடகம் செய்தபோத் அந்த
காரம் பிறன்டிட நெடும்

ககன கூடமு மேலை முகடு முடிய பசுங்க்
கற்றை கலாப மயிலாம்

சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள
சித்ரப் பயோதர கிரி

தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன்
திருத்தணி மகீதரன் இருங்க்

கெங்கா தரன் கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்திகேயன்

கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே

(பசுங்க் கற்றை கலாப மயிலாம்)

---.


சேவல் விருத்தம் - 6
சின்டுப்கைரவி - கண்ட சாபு

பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்து சிவத் அருந்தி

பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி
பச்சை கலாப மயிலை

துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு
துடரும் பிரேத பூத

தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்

மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்ஜி நான்முகி வராகி

மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்

செங்க் கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர
சிங்கமாய் இரணியனுடல்

சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன்
சேவற் திருத் துவஜமே

(மால் மருமகன் சேவற்திருத் துவஜமே)

வேல் விருத்தம் - 7
பீம்பளாச் - கண்ட சாபு

அண்டங்கள் ஒருகோடி ஆயினுங்க் குலகிரி
அனதமாயினு மேவினால்

அடைய உருவிப் புறம் போவதல் லது தங்கல்
அறியாது சூரனுடலை

கண்டம் படப்பொருது காலனுங்க் குலைவுறுங்க்
கடியகொலை புரியும் அது செங்க்

கனகா சலத்தைக் கடைந்து முனை யிட்டு
கடுக்கின்ற துங்க நெடுவேல்

தண்டன் தனுத் திகிரி சங்கு கட்கம் கொண்ட
தானவான் தகன் மாயவன்

தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பற்றலை
தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
மகையும் பதம் வருடவே

மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
வாகைத் திருக்கை வேலே

(வாகைத் திருக்கை வேலே
குகன் வாகைத் திருக்கை வேலே)

---.


மயில் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு

தீரப் பயோததி (க)திக்கும் ஆகாயமும்
ஜகதலமு நின்று சுழல

திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகை
தீக் கொப்புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்க

படர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சை ப்ரவாள மயிலாம்

ஆர ப்ரதாப புளகித மதன பாடீர
அமிர்த்த கலசக் கொங்கையாள்

ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பர
மானந்த வல்லி சிறுவன்

கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார
குருதரு திருத்தணிகை வேள்

கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி
குடிபுகுத நடவு மயிலே

(பச்சை ப்ரவாள மயிலாம்
வைய்யளி வருபச்சை ப்ரவாள மயிலாம்)

---.


சேவல் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு

வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்

விடு பேய்களே கழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம் பேய்களைத் துரத்தி

பேறான ஏசரவண பவாஏ என்னு மந்திரம்
பேசி உச்சாடனத்தார்

பிடர் பிடித்துக் கொத்தி நகனுதியினால் உற
பிய்ச்சுக் களித் தாடுமாம்

மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி

வாத பித்தம் சிலேர்ப்பனம் குட்ட முதலான
வல்ல பிணிகளை மாற்றியே

சீறாத ஓராறு திருமுக மலர்ந் அடியர்
சித்தத் இருக்கு முருகன்

சிலைகள் உரு இட அயிலை விடுகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே

(செவற் திருத் துவஜமே
குருபரன் சேவற் திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு

மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய்
வலிய தானவர் மார்பிடம்

வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
மகவான் தனை சிறைவிடுத்து

ஓமவிருடித் தலைவர் ஆசிபெற்ற் உயர்வானில்
உம்பர் சொற்றுதி பெற்று நா

உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில்
ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்

சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா
சூடி காலாந்த காலர்

துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல
துரக கேசர மாம்பரச்

சேம வடவாம்புயப் பரண சங்காபரண
திகம்பர த்ரியம்பக மகா

தேவ நந்தன கஜானன சகோதர குகன்
செம்பொற்றிருக்கை வேல்

(ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்)

---.


மயில் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு

செக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரை
சிந்தப் புராரி அமிர்த்தம்

திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங்க் கொப்புளிப்ப

சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல
சங்கார கோர நயன

தறுகண் வாசுகி பணா முடி எடுத் உதருமொரு
சண்டப் பரசண்ட மயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீத் உலாவிய
விருத்தன் திருத்தணிகை வாழ்

வேலாயுதன் பழ வினைத்துயர் அறுத்தெனை
வெளிப்பட உணர்த்தி அருளி

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்த
சுவாமி வாகனம் ஆனதோர்

துரக கஜ ரதகடக விகடதட நிருதர் குல
துஷடர் நிஷடுர மயிலே

(சண்ட ப்ரசண்ட மயிலாம்)

---.


சேவல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு

வந்து அர்ப்பரிக்கும் அம்மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர் பில்லி பேய்

வஞ்ஜினாற் பேதுற மகாபூதம் அஞ்ஜிட
வாயினும் காலினாலும்

பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவை செம்
பவளமா அதிகாசாமா

பசும் சிறைத்தலமிசைத் தணியயிற் குமரனை
பார்த் அன்புறக் கூவுமாம்

முந்த் ஆகமப் பலகை சங்காகமத்தர் தொழ
முன்பேறு முத்தி முருகன்

முது கானகத் எயினர் பண்டோ ட் அயிற் கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்

சிந்தா குலத்தை அடர் கந்தா எனப்பரவு
சித்தர்க் கிரங்க் அறுமுகன்

ஜெய வெற்றிவேள் புனிதன் நளினத்தன் முடி குற்றி
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 9
துர்கா - கண்ட சாபு

தேடுதற்க் அரிதான நவமணி அழுத்தியிடு
செங்கரனை அமுதம் வாய்கொள்

ஜயமளித் அருள் எனக் என உவப்பொடு வந்து
சேவடி பிடித்த தெனவும்

நீடுமைக் கடல் சுட்டதிற்க் அடைந்த் எழுகடலும்
நீயெமைக் காக்க எனவும்

நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்
நிகழ்கின்ற துங்க நெடுவேல்

ஆடுமைக் கணபணக் கதிர்முடி புடை எயிற்று
அடலெரிக்- கொடிய உக்ர

அழால் விழிப் படுகொலைக் கடைய கட்செவியினுக்கு
அரசினைத் தனியெடுத்தே

சாடு மைப்புயல் எனப் பசுனிற சிகரியில்
தாய் திமித் துட நடிக்கும்

ஷமரமயில் வாகனன் அமரர்த்தொழு நாயகன்
ஷண்முகன் தங்கை வேலே

(ஷண்முகன் தங்கை வேலே
மயில் வாகனன் தங்கை வேலே)

---.


மயில் விருத்தம் - 9
டுர்கா - கண்ட சாபு

சிகர தமனிய மேருகிரி ரஜதகிரி நீல
கிரி எனவும் ஆயிரமுக

தெய்வனதி காளிந்தி என நீழலிட்டு வெண்
திங்கள் சங்கெனவும் ப்ரபா

நிகர் எனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்ற மா முகில் என்னவே

நெடியமுது ககன முகடுற வீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்

அகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள்
அடியவர்கள் மிடி அகலவே

அடல் வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற்குழாம் அசையவே

மகரகன கோமள குண்டலம் பல அசைய
வல்லவுணர் மனம் அசைய மால்

வரை அசைய உரகபிலம் அசைய எண்டிசை அசைய
வைய்யளி ஏறு மயிலே

(வையாளீ ஏறு மயிலே
நீலக் கலாப மயிலாம்)

---.


சேவல் விருத்தம் - 9
டுர்கா - கண்ட சாபு

உருவாய் எவர்க்கு நினை அரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் உயிரதாய்

உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய்

வரும் ஈசனைக் களப முகன் ஆதரித் திசையை
வலமாய் மதிக்க வருமுன்

வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான் முன்
வைகு மயிலைப் புகழுமாம்

குருமா மணித்திரள் கொழிக்கும் புனற் கடக்
குன்றுதோ றாடல் பழனம்

குலவு பழமுதிர் சோலை ஆவினன் குடி பரங்க்
குன்றிடம் திருவேரகம்

திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித்
தெறித்திடும் செந்தி நகர் வாழ்

திடமுடைய அடியவர் தொழு பழையவன் குலவுற்ற
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே
பழையவன் சேவற் திருத் துவஜமே)

---.


வேல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு

வலாரி அலலாகுலம் இலாத் அகலவே கரிய
மாலறியு நாலு மறை ஞூல்

வலான் அலைவிலா நசிவிலான் மலைவிலான் இவர்
மனோலய உலாசம் உறவே

உலாவரு கலோல மகராலய ஜலங்களும்
உலோகனிலை நீர்னிலை இலா

ஒலாவொலி நிசாசரர் உலோகமதெலாம் அழல்உலாவிய நிலாவு கொலைவேல்

சிலாவட கலா வினொதவா சிலிமுகா விலொச
நா சின சிலா தணிவிலா

சிலாமலர் எலா மதிய மோதி மதி சேலொழிய
சேவக சராப முகிலாம்

விலாச கலியாண கலை சேர பசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்

விலாழி யினிலாழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைன்யன் கை வேலே

(வேலே, வேழம் இளைன்யன் கை வேலே
வேழம் இளைன்யன் கை வேலே)

---.


மயில் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு

நிராஜத விராஜத வரோதய பராபர
நிராகுல நிராமய பிரா

நிலாதெழு தலால் அறமிலா நெறி யிலா நெறி
நிலாவிய உலாச இதயன்

குராமலி விராவுமிழ் பராரை அமரா நிழல்
குரானிழல் பராவு தணிகை

குலாசல சராசரம் எலாம் இனிதுலாவிய
குலாவிய கலாப மயிலாம்

புராரி குமரா குருபரா எனும் வரோதய
புராதன முராரி மருகன்

புலோமஜை சலாமிடு பலாசன வலாரி புக
லாகும் அயில் ஆயுத நெடுன்

தராதல கிராதர்கள் குலாதவ அபிராம வல
சாதனன் வினோத சமரன்

தடாரி விகடாசுரன் குடாரித படா திகழ்
ஷடானனன் நடாவு மயிலே

(மயிலே, ஷடானனன் நடாவு மயிலே
ஷடானனன் நடாவு மயிலே)

---.


சேவல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு

மகர ஜலனிதி சுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடு கிடு கிடெனவே

மகுடகுட வடசிகரி முகடு பட படபடென
மதகரிகள் உயிர் சிதறவே

ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்பட
கர்ஜித் இரைத் அலறியே

காரையாழின் நகரர் மாரைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றாடுமாம்

சுகவிமலை அமலை பரை இமையவரை தரு குமரி
துடியிடை அனகை அசலையாள்

சுதன் முருகன் மதுரமொழி உழைவனிதை
இபவனிதை துணைவன் எனதிதய நிலையோன்

திகுட திகுட திதிகுட தகுடதி தகுட திகுட
செக்கண செகக் கண என

திருனடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே

(துவஜமே, சேவற் திருத் துவஜமே
சேவற் திருத் துவஜமே)

---.


சேவல் விருத்தம் - 11
மத்யமாவதி - கண்ட சாபு

பூவிலியன் வாசவன் முர்ரரி முனிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே

பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற அனு
போக பதினால் உலகமும்

தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாள வரு
தானதவ ஞூல் தழையவே

தாள் வலியதான பல பேய்கள் அஞ்ஜ சிறகு
கொட்டிக் குரற் பயிலுமாம்

காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடன

காரண மெய்ன்யானபரி சீரணவ் அர அசன
கனகமயில் வாகனன் அடற்

சேவகன் இரஜத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முக

சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவற் திருத் துவஜமே

(துவஜமே சேவற் திருத் துவஜமே
சேவற் திருத் துவஜமே)

---.


மயில் விருத்தம் - 11
மத்யமாவதி

என்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீலப் போத்
இலங்கிய திருத்தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒரு
நம் பிரானான மயிலை

பனாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
பகர்ந்த அதிமதுர சித்ரப்

பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
மாசறு மயில் விருத்தம் ஒருபத்தும்

படிப்பவர்கள் ஆதி மறை ஞூல்
மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்

வாணி தழுவப் பெறுவரால்
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்

வாரிஜ மடந்தை யுடன் வாழ்
அன்னயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்

அமுதா சனம் பெறுவர் மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர்

அழியா வரம் பெறுவரே.

(அழியா வரம் பெறுவரே
அழியா வரம் பெறுவரே)

---.


------------
தீறூ வாகூப்பூ -


1. சீர்ப்பாத வகுப்பு
காவடிச்சிந்து - கண்ட சாபு (21/2)

உததியிடை கடவு மரகத வருண குல துரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலப கக மயிலின் மிசை
யுகமுடிவின் இருளகல ஒருஜோதி வீசுவதும்

உடலும் உடல் உயிரு நிலை பெறுதல் பொருளென உலகம்
ஒருவிவரு மனுபவன சிவயோக சாதனையில்
ஒழுகும் அவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி
உணர்வு விழி கொடு நியதி தமதூடு நாடுவதும்

உரு எனவும் அரு எனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன பரசமய கலை ஆரவாரம் அற
உரை அவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அனுபூதி ஆனதுவும்

உறவுமுறை மனைவிமக எனும் அலையில் எனதிதய
உருவுடைய மலினபவ ஜலராசி ஏறவிடும்
உறுபுணையும் அறிமுகமும் உயரமரர் மணிமுடியில்
உறைவதுவும் உலைவிலதும் அடியேன் மனோரதமும்

இதழி வெகு முக ககன நதி அறுகு தறுகண் அர
இமகிரண தருண உடு பதி சேர் ஜடாமவுலி
இறைமகிழ உடைமணியொட் அணிசகலமணி கலென
இமையமயில் தழுவும் ஒரு திருமார்பில் ஆடுவதும்

இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயிற்
எறிபுகுத உரகர்ப்பதி அபிஷேகம் ஆயிரமும்
எழுபிலமு நெறு நெறென முறிய வடகுவட் இடிய
இளைய தளர் நடை பழகி விளையாடல் கூருவதும்

இனியகனி கடலைபயற் ஒடியல்பொரி அமுது செயும்
இலகுவெகு கடவிகட தடபார மேருவுடன்
இகலி முது திகிரிகிரி நெரிய வளை கடல் கதற
எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்

எறுழி புலி கரடி அரி கரி கடமை வருடை உழை
இரலை மரை இரவு பகல் இரைதேர் கடாடவியில்
எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய
இனிது பயில் சிறுமி வளர் புனமீத் உலாவுவதும்

முதல வினை முடிவில் இருபிறை எயிறு கயிறுகொடு
முது வடவை விழி சுழல வருகால தூதர்க்கெட
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையும் அவை
முடிய வருவதும் அடியர் பகை கோடி சாடுவதும்

மொகுமொகென மதுப முரல் குரவு விளவினது குறு
முறியு மலர் வகுள தள முழுனீல தீவரமும்
முருகு கமழ்வதும் அகில முதன்மை தருவதும் வ்ரத
முனிவர் கருதரிய தவ முயல்வார் தபோ பலமும்

முருக சரவண மகளிர் அறுவர் முலை ஞுகரும் அறு
முக குமர சரணமென அருள்பாடி ஆடிமிக
மொழி குழற அமுது தொழுதுர் உகுமவர் விழி அருவி
முழுகுவதும் வருகவென அறைகூவி ஆளுவதும்

முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழு
துலக் அறிய மழலை மொழி கொடு பாடும் ஆசுகவி
முதல மொழிவன நிபுண மதுப முகர் இத மவுன
முகுள பரிமள நிகில கவிமாலை சூடுவதும்

மதசிகரி கதறி முது முதலை கவர்த்தர நெடிய
மடு நடுவில் வெருவி ஒரு விசை ஆதிமுலம் என
வருகருணை வரதன் இகல் இரணியனை ஞுதி உகிரின்
வகிரும் அடல் அரி வடிவு குறளாகி மா பலியை

வலிய சிறை இட வெளியின் முகடு கிழிபட முடிய
வளரு முகில் நிருதன் இரு பது வாகு பூதரமும்
மகுடம் ஒருபது முறிய அடு பகழி விடு குரிசில்
மருக நிசிசரர் தளமும் வரு தாரகா சுரனும்

மடிய மலை பிளவு பட மகர ஜலனிதி குறுகி
மறுகி முறையிட முனியும் வடிவேல நீலகிரி
மருவு குருபதி யுவதி பவதி பகவதி மதுர
வசனி பயிரவி கவுரி உமையாள் த்ரிசூல தரி

வனஜை மதுபதி அமலை விஜயை திரிபுரை புனிதை
வனிதை அபினவை அனகை அபிராம நாயகி தன்
மதலை மலை கிழவன் அனுபவன் அபயன் உபய சதுர்
மறையின் முதல் நடு முடிவின் மணனாறு சீறடியே

---.


2. தேவேந்திர சங்க வகுப்பு
புன்னாக வராளி - சங்கீர்ண ருபகம் - (2 களை) (22)

தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக ஞுதிகொடு
சாடோ ங்கு நெடுன் கிரி ஓடேந்து பயங்கரி
தமருக பரிபுர ஒலிகொடு நடனவில் சரணிய சதுர் மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை

சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
தாம் ஆங்குச மென் திரு தாளாந்தர அம்பிகை
தரு பதி சுரரொடு சருவிய அசுரர்கள் தட மணிமுடி பொடி
தான் ஆம்படி செங்கையில் வாள் வாங்கிய சங்கரி

இரண கிரண மட மயில் ம்ருகமத புளகித இளமுலை இள
நீர் தாங்கி ஞுடங்கிய ஞூல்போன்ற மருங்கினள்
இறுகிய சிறு பிறை எயிருடை யமபடர் எனதுயிர் கொள வரின்
யான் ஏங்குதல் கண்டெதிர் தான் ஏன்று கொளும் குயில்

இடுபலி கொடு திரி இரவலர் இடர் கெடவிடு மன கரதல
ஏகாம்பரை இந்திரை மொகாங்க சுமங்கலை
எழுதிய படமென இருள் அறு சுடரடி இணை தொழு மவுனிகள்
ஏகாந்த சுகம் தரு பாசாங்குச சுந்தரி

கரணமு மரணமு மலமொடும் உடல்படு கடுவினை கெடனினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்ஜனி நஞ்சுமிழ்
கனல் எரி கணபண குணமணி அணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம் படி கொண்டவள்

கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரி கமலை குழை
காதார்ந்த செழுங்க் கழுனீர் தோய்ந்த பெருன் திரு
கரைபொழி திருமுக கருணையில் உலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மா சாம்பவி தந்தவன்

அரணெடு வடவரை அடியொடு பொடிபட அலைகடல் கெட அயில்
வேல் வாங்கிய செந்தமிழ் ஞூலோன் குமரன் குகன்
அறுமுகன் ஒருபதொட் இருபுயன் அபினவன் அழகிய குறமகள்
தார்வேய்ந்த புயன் பகையா மாந்தர்கள் அந்தகன்

அடன்மிகு கடதட விகடித மதகளிற் அனவரதமும்
அகலா மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம் படி செந்திலில்
அதிபதி என வரு பொரு திரல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே.

---.


3. வேல் வகுப்பு
மோகனம் - ஆதி (திச்ர நடை) (எடுப்பு அதீதம்

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்த நகை
கறுத்த குழல் சிவத்த இதழ் மறச் சிறுமி விழிக்கு நிகராகும்

பனைக் கை முக படக் கரட மதத் தவள
கஜக் கடவுள் பதத்திடு நிகளத்து முளை தெறிக்க அரமாகும்

பழுத்த முது தமிழ்ப் பலகை இருக்கும் ஒரு
கவிப் புலவன் இசைக் குருகி வரைக் குகையை இடித்து வழிகாணும்

பசித் அலகை முசித் அழுது முறைப் படுதல்
ஒழித் அவுணர் உரத் உதிர நிணத் தசைகள் புசிக்க அருள் நேரும்

சுரர்க்கு முனி வரர்க்கு மக பதிக்கும் விதி
தனக்கும் அரி தனக்கும் நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினை சாடும்

சுடர்ப் பரிதி ஒளிப்ப நில ஒழுக்கு மதி
ஒளிப்ப அலை அடக்கு தழல் ஒளிப்ப ஒளிர் ஒளிப் பிரபை வீசும்

துதிக்கும் அடியவர்க் கொருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக் களையும் எனக்கொர் துணை ஆகும்

சொலற்கரிய திருப் புகழை உரைத் அவரை
அடுத்த பகை அறுத் எறிய உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்

தருக்கி நமன் முருக்க வரின் எருக்கு மதி
தரித்த முடி படைத்த விறல் படைத்த இறை கழற்கு நிகராகும்

தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின் உண
அழைப் பதென மலர்க் கமல கரத்தின் முனை விதிர்க்க வளைவாகும்

தனித்து வழி நடக்குமெனத் இடத்தும் ஒரு
வலத்தும் இரு புறத்தும் அருகடுத் இரவு பகற்றுணைய தாகும்

சலத்து வரும் அரக்கருடல் கொழுத்து வளர்
பெருத்த குடர் சிவத்த தொடை எனச் சிகையில் விருப்ப மொடு சூடும்

திரைக் கடலை உடைத்து நிறை புனற் கடிது
குடித் உடையும் உடைப் படைய அடைத் உதிர நிறைத்து விளையாடும்

திசைக் கிரியை முதற் குலிசன் அறுத்த சிறை
முளைத்த தென முகட்டின் இடை பறக்க அற விசைத் அதிர ஓடும்

சினத் அவுணர் எதிர்த்த ரண களத்தில் வெகு
குறைத் தலைகள் சிரித் எயிரு கடித்து விழி விழித் அலற மோதும்

திருத்தணியில் உதித் அருளும் ஒருத்தன் மலை
விருத்தன் எனத் உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே

(எனத் உளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே)

---.


4. திருவேளைக்காரன் வகுப்பு
நாதனாமக்ரிய - கண்ட சாபு (21/2)

ஆனபய பத்தி வழி பாடு பெறு முத்தி அது
வாக நிகழ் பத்த ஜன வாரக் காரனும்

ஆர மதுரித்த கனி காரண முதல் தமைய
நாருடன் உணக் கை பரி தீமைக் காரனும்

ஆகமம் விளைத் அகில லோகமு நொடிப் பளவில்
ஆசையொடு சுற்றும் அதி வேகக் காரனும்

ஆணவ அழுக் கடையும் ஆவியை விளக்கி அனு
பூதி அடைவித்த தொரு பார்வைக் காரனும்

ஆடலைவுபட்ட் அமரர் நாடது பிழைக்க அம
ராவதி புரக்கும் அடல் ஆண்மைக் காரனும்

ஆடக விசித்ர கன கோபுர முகப்பில் அரு
ணாபுரியில் நிற்கும் அடையாளக் காரனும்

ஆயிர முகத்து நதி பாலனு மகத் அடிமை
ஆனவர் தொடுத்த கவி மாலைக் காரனும்

ஆறுமுக வித்தகனும் ஆறிருபுயத் அரசும்
ஆதி முடிவற்ற திரு நாமக் காரனும்

யானென தென சருவும் ஈன சமயத் எவரும்
யாரும் உணதற் கரிய நேர்மைக் காரனும்

யாது நிலை அற்றலையும் ஏழு பிறவிக் கடலை
ஏறவிடு நற்கருணை ஓடக் காரனும்

ஏரகம் இடைக்கழி சிராமலை திருப் பழனி
ஏரணி செருத் தணியில் வாசக் காரனும்

ஏழையின் இரட்டை வினை ஆயதொருடர் சிறை
இராமல் விடுவித்த் அருள் நியாயக் காரனும்

யாமளை மணக்கு முக சாமளை மணிக் குயிலை
யாயென அழைத் உருகு நேயக் காரனும்

ஏதம் அற நிச்சய மனோலய விளக்கொளியும்
யாக முனிவர்க் குரிய காவற் காரனும்

ஈரிரு மருப் புடைய சோனை மத வெற்பி வரும்
யானை அளவில் துவளும் ஆசைக் காரனும்

ஏடவிழ் கடப்ப மலர் கூதள முடிக்கும் இளை
யோனும் அறிவிற் பெரிய மேன்மைக் காரனும்

வானவர் பொருட்டு மகவானது பொருட்டு மலர்
வாவியில் உதித்த முக மாயக் காரனும்

வாரண பதிக் குதவு நாரணன் உவக்கு மரு
மானும் அயனைக் கறுவு கோபக் காரனும்

வாழி என நித்த மறவாது பரவிற் சரண
வாரிஜம் அளிக்கும் உப காரக் காரனும்

மாடமதில் சுற்றிய த்ரிகூட கிரியிற் கதிர் செய்
மா நகரியிற் கடவுள் ஆயக் காரனும்

வாள் எயிறதுற்ற பகுவாய் தொறு நெருப் உமிழும்
வாசுகி எடுத் உதறும் வாசிக் காரனும்

மாசில் உயிருக் உயிரும் ஆசில் உணர்வுக் உணர்வும்
வானில் அணுவுக் அணு உபாயக் காரனும்

வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்பட ம
காடவியில் நிற்ப தோர் சகாயக் காரனும்

மீனவனு மிக்க்க புலவோரும் உறை பொற் பலகை
மீதமர் தமிழ் த்ரய வினோதக் காரனும்

வேரி மதுமத்த மதி தாதகி கடுக்கை புனை
வேணியர் துதிப்ப தொரு கேள்விக் காரனும்

வேலை துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டுருவ
வேலை உறவிட்ட தனி வேலைக் காரனும்

மீனுலவு கிர்த்திகைக் குமாரனு நினைக்கும் அவர்
வீடு பெறவைத் அருள் உதாரக் காரனும்

மேனை அரிவைக் குரிய பேரனு மதித்த திறல்
வீரனும் அரக்கர் குல சூறைக் காரனும்

வேதியர் வெறுக்கையும் அனாதி பர வச்துவும் வி
சாகனும் விகற்ப வெகு ருபக் காரனும்

வேடுவர் புனத்தில் உரு மாறி முனி சொற்படி வி
யாகுல மனத்தினொடு போம்விற் காரனும்

மேவிய புனத்தி தணில் ஓவியம் எனத் திகழு
மேதகு குறத்தி திரு வேளைக் காரனே.

---.


5. பெருத்த வசன வகுப்பு

காபி - ஆதி

அருக்கன் உலவிய ஜக த்ரயமும் இசை
அதிற்கொள் சுவை என அனைத்து நிறைவதும்

அவச்தை பலவையும் அடக்கி அகிலமும்
அவிழ்ச்சி பெற இனிதிருக்கு மவுனமும்

அசட்டு வெறு வழி வழக்கர் அறுவரும்
அரற்று வன பொருள் விகற்பம் ஒழிவதும்

அழுக்கு மல இருள் முழுக்கின் உழல்வதை
அடக்கி அவனெறி கடக்க விடுவதும்,

(பெருத்த வசனமே அறுமுகவன்
பெருத்த வசனமே)

சந்த்ரகெளஞ்ச்

எருக்கும் இதழியு முடிக்கும் இறை குரு
எமக்கும் இறையவன் எனத் திகழு வதும்

இரட்டை வினை கொடு திரட்டு மலவுடல்
இணக்கம் அற ஒரு கணக்கை அருள்வதும்

இருக்கு முதலிய சமச்த கலைகளும்
இதற்க் இதெதிரென இணைக்க அரியதும்

இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
கடக்க விடுவதொர் இயற்கை அருள்வதும்

(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)

ரஞ்ஜனி

நெருக்குவன உபனிடத்தின் இறுதிகள்
நிரப்பு கடையினில் இருப்பை உடையதும்

நெருப்பு நிலம் வெளி மருத்து வனமென
நிறைத்த நெறி முறை கரக்கும் உருவமும்

நினைப்பு நினைவது நினைப் பவனும் அறு
நிலத்தில் நிலை பெற நிறுத்த உரியதும்

நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
நிவிர்த்தி உற அனுபவிக்கு நிதியமும்

(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)

வசந்தா

உருக்கு திருவருள் திளைத்து மகிழ் தர
உளத்தொட் உரை செயல் ஒளித்து விடுவதும்

ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
உடிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்

உரத்த தனி மயில் உகைத்து நிசிசரர்
ஒளிக்க அமர்ப்பொரு சமர்த்தன் அணி தழை

உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே

(பெருத்த வசனமே அறுமுகவன் பெருத்த வசனமே)

---.


6. வேடிச்சி காவலன் வகுப்பு
நீலாம்பரி - கண்ட சாபு (21/2)

உதர கமலத் தினிடை முதிய புவன த்ரயமும்
உக முடிவில் வைக்கும் உமை யாள் பெற்ற பாலகனும்

உமிழ் திரை பரப்பி வரு வெகு முக குலப் பழைய
உதக மகள் பக்கல் வரு ஜோதி ஷடானனும்

உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க அவர்
ஒருவர் ஒருவர்க் அவணொர் ஓர் புத்ரன் ஆனவனும்

உதய ரவி வர்க நிகர் வன கிரண விர்த்த விதம்
உடைய சத பத்ர நவ பீடத்து வாழ்பவனும்

உறை சரவணக் கடவுள் மடுவில் அடர் வஜரதரன்
உடைய மத வெற்புலைய வேதித்த வீரியனும்

உரைபெற வகுத் அருணை நகரின் ஒரு பத்தன் இடும்
ஒளிவளர் திருப் புகழ் மதாணி க்ருபாகரனும்

உரக கண சித்த கண கருட கண யக்ஷ கணம்
உபனிடம் உரைத் தபடி பூஜிக்கும் வானவனும்

ஒருவனும் மகிழ்ச்சி தரு குருபரனும் உத்தமனும்
உபயம் உறும் அக்னி கர மீதிற் ப்ரபாகரனும்

அதி மதுர சித்ர கவி நிருபனும் அகத்தியனும்
அடிதொழு தமிழ் த்ரய வினோத கலாதரனும்

அவரை பொரி எட்பயறு துவரை அவல் சர்க்கரையொட்
அமுது செயும் விக்ன பதி யானை சகோதரனும்

அவுணர் படை கெட்டு முது மகரஜல வட்ட முடன்
அபயமிட விற்படை கொட் ஆயத்த மானவனும்

அருணையில் இடைக் கழியில் உரக கிரியிற் புவியில்
அழகிய செருத் தணியில் வாழ் கற்ப காடவியில்

அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தை களும்
அறியென இமைப் பொழுதின் வாழ் வித்த வேதியனும்

அரி பிரமருக்கு முதல் அரிய பரமற்க் உயரும்
அருமறை முடிப்பை உபதேசித்த தேசிகனும்

அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்குணனும்
அகில புவனத் அமர சேனைக்கு நாயகனும்

அனுபவனும் அத்புதனும் அனுகுணனும் அக்ஷரனும்
அருமனம் ஒழிக்கும் அனு பூதி சுகோதயனும்

இதம் அகிதம் விட்டுருகி இரவு பகல் அற்ற இடம்
எனதற இருக்கை புரி யோகப் புராதனனும்

எனது மனசிற் பரம சுக மவுன கட்கம் அதை
யமன் முடி துணிக்க விதியா வைத்த பூபதியும்

எழுமையும் எனைத் தனது கழல் பரவு பத்தனென
இனிது கவி அப்படி ப்ரசாதித்த பாவலனும்

இமையவர் முடித் தொகையும் வனசரர் பொருப்பும் எனத்
இதயமு மணக்கும் இருபாத சரோருகனும்

எழு தரிய கற்பதரு நிழலில் வளர் தத்தை தழு
விய கடக வஜர அதிபாரப் புயாசலனும்

எதிரில் புலவர்க் குதவு வெளி முகடு முட்ட வளர்
இவுளி முகியை பொருத ராவுத்தன் ஆனவனும்

எழுபரி ரதத் இரவி எழு நிலமொட் அக்கரிகள்
இடர் பட முழக்கி எழு சேவற் பதாகையனும்

இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷகளனும்
இளையவனும் விப்ரகுல யாக சபாபதியும்

மதுகையொடு சக்ரகிரி முதுகு நெளியப் புவியை
வளைய வரும் விக்ரம கலாப சிகாவலனும்

வலிய நிகளத் தினொடு மறுகு சிறை பட்டொழிய
வனஜ முனியை சிறிது கோபித்த காவலனும்

வரு சுரர் மதிக்க ஒரு குருகு பெயர் பெற்ற கன
வட சிகரி பட்டுருவ வேல் தொட்ட சேவகனும்

வரதனும் அனுக்ரகனும் நிருதர் குல நிஷடுரனும்
மனு பவன சித்தனு மனோதுக்க பேதனனும்

வயிர் இசை முழக்க மிகு மழை தவழ் குறிச்சி தொரும்
மகிழ் குரவையுட் திரியும் வேடிக்கை வேடுவனும்

மரகத மணிப் பணியின் அணிதழை உடுத் உலவும்
வனசரர் கொடிச்சி தனை யாசிக்கும் யாசகனும்

மதனன் விடு புஷப சர படலம் உடல் அத்தனையும்
மடல் எழுதி நிற்கும் அதி மோகத் தபோதனனும்

வரிசிலை மலைக் குறவர் பரவிய புனத் இதணில்
மயிலென இருக்கும் ஒரு வேடிச்சி காவலனே

---.


7. சேவகன் வகுப்பு
மாண்ட் - அங்கதாளம் (141/2) 2 11/2 2 11/2 2 11/2 2 2

இருபிறை எயிரு நிலவெழ உடலம்
இருள்படு சொருபம் உடைக்கோ விடவே

இறுகிய கயிறு படவினை முடுகி
எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய்

அருமறி முறையின் முறை முறை கருதி
அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால்

அறிவொடு மதுர மொழியது குழறி
அவமரு பொழுதில் அழைத்தால் வருவாய்,

ஒருபது சிரமும் இருபது கரமும்
விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா

உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா,

மருவளர் அடவி வனிதையர் பரவ
மரகத இதணில் இருப்பாள் கணவா

வளை கடல் கதற நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழு சேவகனே

---.


8. புய வகுப்பு
ராகமாலிகை - (26) 2 11/2 2 4 11/2 11/2 2 2 11/2 11/2 11/2 21/2 21/2

யமுனா கலயாணி

வசை தவிர் ககன சர சிவ கரண மகாவ்ருத
சீல சால வரமுனி சித்தரை
அஞ்ஜல் அஞ்ஜல் என்று வாழ் வித்து நின்றன

மணிவட மழலை உடைமணி தபனிய நாண் அழ
காக நாடி வகை வகை கட்டு ம
ருங்குடன் பொருந்து ரீதிக் கிசைந்தன

வருணித கிரண வருணித வெகு தரு ணாதப
ஜோதி ஆடை வடிவு பெறப் புனை
திண் செழுன் குறங்கின் மேல் வைத் அசைந்தன

வளை கடல் உலகை வலம் வரு பவுரி வினோத க
லாப கோப மயில் வதனத்து வி
ளங்கும் அங்குசம் கடாவிச் சிறந்தன

வரை பக நிருதர் முடி பக மகர மகோததி
தீயின் வாயின் மறுக விதிர்த் அயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன

மதியென உதய ரவி என வளை படு தோல் வி
சால நீலமலி பரிசை படை
கொண்டு நின்ற் உழன்று சாதிக்க முந்தின

மன குண சலன மலினமில் துரிய அதீத சு
கானு பூதி மவுன நிரக்ஷர
மந்திரம் பொருந்தி மார்பில் திகழ்ந்தன

வகை வகை குழுமி மொகு மொகு மொகென அனேக ச
முக ராக மதுபம் விழச் சிறு
சண்பகம் செறிந்த தாரிற் பொலிந்தன

கமீர்க்கல்யாணி

மிசை மிசை கறுவி வெளிமுகட் அளவு நிசாசர
சேனை தேடி விததி பெறச் சில
கங்கணன் கறங்க மீதிற் சுழன்றன

வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூத பி
சாசு போத மிகு தொனி பற்றி மு
ழங்கு விஞ்சு கண்டை வாசிக்கை கொண்டன

வித மிகு பரத சுர வனிதையர் கண மேல்தொறும்
லீலையாக விமல ஜலத்தினை
விண் திறந்து மொண்டு வீசிப் பொலிந்தன

விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர் குலக் குலி
சன் பயந்த செங்கை யானைக் இசைந்தன

விகசித தமர பரி புர முளரி தொழா அபி
ராம வேடர் விமலை தினைப் புன
மங்கை கொங்கைக் கண்டு வேளைப் புகுந்தன

விதிர் தரு சமர முறி கர கமல நகாயுத
கோழி வீற விதரண சித்ர
அலங்க்ருதம் புனைந்து பூரித் இலங்கின

விரகுடை எனது மன துடன் அகில் பனினீர் புழு
கோடளாவி ம்ருகமத கற்புர
குங்குமன் கலந்து பூசித் உதைந்தன

வினைபுரி பவனி தொழுத் அழுத் உருகிய கோதையர்
தூது போகவிடு மது பக்ஷண
வண்டினன் திரண்டு சூழப் படிந்தன

பூர்விகல்யாணி

இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளி த
நாசி தேசி பயிரவி குஜஜரி
பஞ்சுரன் தெரிந்து வீணைக் இசைந்தன

இறுதியில் உதய ரவி கண நிகரென ஆறிரு
காது தோயும் இலகு மணிக் கன
விம்ப குண்டலங்கள் மேவிப் புரண்டன

எதிர் படு நெடிய தரு அடு பெரிய கடாம் உமிழ்
நாக மேகம் இடிபட மற்பொரு
திண் சிலம்ப் அடங்க மோதிப் பிடுங்கின

எழு தரும் அழகு நிறமலி திறல் இசையாக உ
தார தீரம் என உரை பெற்ற
அடங்கலும் சிறந்து சாலத் ததும்பின

இருள் பொரு கிரண இரணிய வட குல பாரிய
மேரு ஜாதி இனமென ஒத் உல
கங்கள் எங்கணும் ப்ரகாசித்து நின்றன

இயன் முனி பரவ ஒருவிசை அருவரையூட் அதி
பார கோர இவுளி முகத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன

இபரத துரக நிசிசரர் கெட ஒரு சூரனை
மார்பு பீறி அவன் உதிரப் புனல்
செங்களன் துளங்கி ஆடிச் சிவந்தன

எவை எவை கருதில் அவை அவை தரு கொடை
யால் மணி மேகராசி சுரபி அவற்றொடு
சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன

கல்யாணி

அசைவற நினையும் அவர் பவம் அகலவெ மேல்வரு
கால தூதரை உடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன

அகிலமும் எனது செயலலத் இலையென யானென
வீறு கூறி அறவு மிகுத் எழும்
ஐம்புலன் தியங்கி வீழத் திமிர்ந்தன

அனலெழு துவஜம் உடுகுலம் உதிர வியோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்க பி
லங்களுங்க் குலுங்க ஆலித் அதிர்ந்தன

அடல் நெடு நிருதர் தளமது மடிய வலாரி தன்
வானை ஆள அரசு கொடுத் அப
யம் புகுந்த அண்டர் ஊரைப் புரந்தன

அடவியில் விளவு தள வலர் துளவு குரா மகிழ்
கோடல் பாடல் அளி முரல் செச்சை
அலங்கல் செங்க் கடம்பு நேசித் அணிந்தன

அரியதொர் தமிழ்கொட் உரிமையொட் அடிதொழுதே கவி
மாலை யாக அடிமைத் தொடுத்திடு
புஞ்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன

அழகிய குமரன் உமை திரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப் படு
கந்தன் எந்தை இந்த்ர நீலச் சிலம்பினன்

அனுபவன் அனகன் அனனியன் அமலன் அமோகன்
அனேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்ஜலென் ப்ரசண்ட வாகைப் புயங்களே.

---.


9. கடைக்கணியல் வகுப்பு
கிந்தோளம் - ஆதி(திச்ர நடை) (12)

அலை கடல் வளைந்த் உடுத்த எழு புவி புரந்தி ருக்கும்
அரசென நிரந்த ரிக்க வாழலாம்

அளகை அரசன் தனக்கும் அமரர் அரசன் தனக்கும்
அரசென அறன் செலுத்தி ஆளலாம்

அடை பெறுவ தென்று முத்தி அதி மதுர சென் தமிழ்க்கும்
அருள் பெற நினைந்து சித்தி ஆகலாம்

அதிர வரும் என்று முட்ட அலகில் வினை சண்டை நிற்க
அடல் எதிர் புரிந்து வெற்றி ஆகலாம்

இலகிய நலம் செய் புஷபகமும் உடல் நிறம் வெளுத்த
இப அரசெனும் பொருப்பும் ஏறலாம்

இருவரவர் நின்றி டத்தும் எவர் எவர் இருந்தி டத்தும்
ஒருவன் இவன் என்ற் உணர்ச்சி கூடலாம்

எமபடர் தொடர்ந் அழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க
இடி என முழங்கி வெற்றி பேசலாம்

இவை ஒழியவும் பலிப்பத் அகலவிடும் உங்கள் வித்தை
இனை இனிவிடும் பெருத்த பாருளீர்,

முலையிடை கிடந்த் இளைப்ப மொகு மொகென வண்டிரைப்ப
முகை அவிழ் கடம் படுத்த தாரினான்

முதலி பெரி அம்பலத்துள் வரை அசல மண்டபத்துள்
முனிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினான்

முனை தொறு முழங்கி ஒற்றி முகிலென இரங்க எற்றி
முறை நெறி பறந்து விட்ட கோழியான்

முதியவுணர் அன்று பட்ட முதிய குடர் நன்று சுற்று
முது கழுகு பந்தர் இட்ட வேலினான்

மலை மருவு பைம்பு நத்தி வளரும் இரு குன்ற மொத்தி
வலிகுடி புகுன் திருக்கு மார்பினான்

மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர் முலை உண்டு முற்றும்
வடிவுடன் வளர்ன் திருக்கும் வாழ்வினான்

மலை இறை மடந்தை பெற்ற ஒரு மதலை என்ற் உதித்து
மலை இடியவுன் துணித்த தோளினான்

மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக் கண்
இயலையு நினைன் திருக்க வாருமே

(வித்தை இனை இனி விடும் பெருத்த பாருளீர்
கடைக் கண் இயலையு நினைன் திருக்க வாருமே)

---.


10. மயில் வகுப்பு
ராகமாலிகை - சதுச்ர ஏகம் (கண்ட நடை) (10)

பைரவி

ஆதவனும் அம்புலியும் மாசுற விழுங்கி உமிழ்
ஆல மருவும் பணி இரண்டும் அழுதே

ஆறுமுகன் ஐந்து முகன் ஆனை முகன் எங்கடவுள்
ஆமென மொழிந்த் அகல வென்று விடுமே

ஆர்க்கலி கடைந்த் அமுது வானவர் அருந்த அருள்
ஆதி பகவன் துயில் அனந்தன் மணி சேர்

ஆயிரம் இருந்தலை களாய் விரி பணன் குருதி
ஆக முழுதுன் குலைய வந்த் அறையுமே

நடபைரவி

வேத முழுதும் புகல் இராமன் ஒரு தம்பி மிசை
வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய்

வீசும் அரவன் சிதறி ஓட வரு வெங்கழுலன்
மேல் இடி எனும்படி முழங்கி விழுமே

மேதினி சுமந்த பெரு மாசுண மயங்க நக
மேவு சரணங்க் கொட் உலகெங்கும் உழுமே

வேலியென எண்டிசையில் வாழும் உரகன் தளர
வே அழல் எனும் சினமுடன் படருமே

ஆனந்தபைரவி

போதினில் இருந்த கலை மாதினை மணந்த உயர்
போதனை இரந்து மலர் கொண்டு முறையே

பூசனை புரிந்து கொடியாகி மகிழ் ஒன்று துகிர்
போல்முடி விளங்க வரும் அஞ்ஜம் அடுமே

பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர்
பூரண கணங்களொடு வந்து தொழவே

போரிடுவ வென்று வெகு வாரண கணங்கள் உயிர்
போயினம் எனும்படி எதிர்ந்து விழுமே

சிந்துபைரவி

கோதகலும் ஐந்து மலர் வாளி மதனன் பொருவில்
கோல உடலன் கருகி வெந்து விழவே

கோபமொடு கண்ட விழி நாதர் அணியும் பணிகள்
கூடி மனம் அஞ்ஜி வளை சென்று புகவே

கூவியிர வந்தம் உணர் வாழி என நின்று பொரு
கோழியொடு வென்றி முறை யும் பகருமே

கோலம் உறு செந்தில் நகர் மேவு குமரன் சரண
கோகனதம் அன்பொடு வணங்கு மயிலே

(குமரன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே
முருகன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே
குமரன் சரணம் அன்பொடு வணங்கு மயிலே)

---.


11. வீரவாள் வகுப்பு
பீம்பளாச் - கண்ட சாபு(21/2)

பூ வுளோனுக்கும் உயர் தேவர் கோனுக்கும் எழு
பூவில் யாவர்க்கும் வரு துன்பு தீர்த் திடுமே

பூத சேனைக்குள் ஒரு கோடி சூர்யப் பிரபை
போல மாயக் கரிய கங்குல் நீக்கிடுமே

பூதி பூசிப் பரமர் தோலை மேல் இட்ட தொரு
போர்வை போல் நெட்டுறை மருங்கு சேர்த் திடுமே

போரிலே நிர்த்தம் இடு வீர மா லக்ஷமி மகிழ்
பூஜை நேசித்து மலர் துமபை சாத் திடுமே

பாவ ருபக் கொடிய சூரனார் பெற்ற பல
பாலர் மாளத் தசைகள் உண்டு தேக்கிடுமே

பானு கோபப் பகைன்யன் மேனி சோரக் குருதி
பாயவே வெட்டி இரு துண்டமாக் கிடுமே

பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்று நரி
பாறு பேய் துய்த்திட நிணங்கள் ஊட்டிடுமே

பாடி ஆடிப் பொருத போரிலே பத்திர க
பாலி சூலப் படையை வென்றுதாக் கிடுமே

ஆவலாகத் துதி செய் பாவலோர் மெய்க் கலிக
ளாம் அகோரக் களை களைந்து நீக் கிடுமே

யாருமே அற்றவன் என்மீதொர் ஆபத் உறவ
ராமலே சுற்றிலும் இருந்து காத்திடுமே

ஆடல் வேள் நற்படைகள் ஆணை யாவுக்கு முதல்
ஆணையா வைத்து வலம் வந்து போற்றிடுமே

ஆல காலத்தை நிகர் கால சூலத்தையும்
அறாத பாசத்தையும் அரிந்து போட்டிடுமே

மேவலார் முப்புரமும் நீறவே சுட்ட ஒரு
மேருவாம் விற் பரமர் தந்த பாக்கியவான்

வேடர் மானுக்கும் உயர் தேவயானைக்கும் இசை
வேலர் தாளைத் தொழுத் உயர்ந்த வாழ்க் கையினான்

வீறு சேர் மிக்க கண நாதனார் எட்டு வகை
வீரர் நேயத் தமையன் என்ற தோட்டுணைவோன்

மேன்மையாம் லக்ஷ ரத வீரர் பூஜிக்க வரு
வீரவாகுத் தலைவன் வென்ற வாட் படையே

---.


12. திருப்பழனி வகுப்பு
மத்யமாவதி - சதுச்ர த்ருவம் 4 4 4 2 கண்ட நடை (35)

எந்த வினையும் பவமும் எந்த விடமும் படரும்
எந்த இகலும் பழியும் எந்த வழுவும் பிணியும்
எந்த இகழ்வுன் கொடிய எந்த வசியுன் சிறிதும் அணுகாமலே

எந்த இரவுன் தனிமை எந்த வழியும் புகுத
எந்த இடமுன் சபையில் எந்த முகமும் புகலும்
எந்த மொழியுன் தமிழும் எந்த விசையும் பெருமை சிதறாமலே

வந்தனை செய் துன் சரண நம்புதல் புரிந்த அருள்
வந்த் அனுதினன் தனிலும் நெஞ்ஜில் நினைவின் படி வ
ரந்தர உவந்தருள் இதம் பெறுவதன்றி நெடு வலை வீசியே

வஞ்ஜ விழி சண்டன் உறுகின்ற பொழுதுன் குமர
கந்த என நங்க் அறையவுன் தெளிவு தந்துயிர் வ
ருந்து பயமுன் தனிமையுன் தவிர அஞ்ஜலென வரவேணுமே

(முருகேசனே வரவேணுமே
முருகேசனே வரவேணுமே
முருகேசனே வரவேணுமே)

தன் தனன தன் தனன டிண்டி குடி டிண்டி குடி
குண்ட மட குண்ட மட மண்ட மென நின்று முர
சந்திமிலை பம்பைதுடி திண்டிம முழங்கும் ஒலி திசை வீறவே

தண்ட அமர் மண்டசுரர் மண்டை நிணம் என்றலகை
உண்டுமிழ்தல் கண்டமரர் இந்திரன் வணங்கு பத
தண்டை சிறு கிங்கிணி புலம்பிட வரும் பவனி மயில் வாகனா

சென் தளிரை முந்து படம் என்றுள மருண்டு நிறை
சந்தன வனன் குலவு மந்தி குதிகொண்ட் அயல் செ
றிந்த கமுகின் புடை பதுங்கிட வளைந்து நிமிர் மடல் சாடவே

சிந்திய அரம்பை பல விங்கனியில் வந்து விழ
மெங்கனி உடைந்த சுளை விண்ட நறை கொண்டு சிறு
செண்பக வனங்கள் வளர் தென் பழனியம் பதியின் முருகேசனே

(வரவேணுமே முருகேசனே
வரவேணுமே முருகேசனே
வரவேணுமே முருகேசனே) 
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer