Thursday 7 April 2016

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)









மனிதர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக இருக்கும் அஷ்டதிக் பாலகர்கள்.

மனிதர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக இருக்கும் அஷ்டதிக் பாலகர்கள்.


அஷ்டதிக் பாலகர்கள் என்று இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை குறிப்பிடுவார்கள். இவர்களை வணங்கினால் அனைத்து விதபலன்களையும் பெறலாம்.
மனிதர்கள் செய்யும் நற்பலன்களுக்கும், தீய பலன்களுக்கும் இவர்களே சாட்சியாக இருக்கின்றனர்.
இந்திரனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும், சுகமும் உண்டாகும். அக்னியை வழிபட்டால் ஒளி பொருந்திய நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பை பெறலாம். எமனை வழிபட்டால் தீவினைப் பயன்கள் நீங்கி தர்ம வழியில் நடக்கலாம். நிருதியை வழிபட்டால் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடலாம். வருணனை வழிபட்டால் பயிர்வகைகள் சிறந்து வளர்ந்து பசுமையை உண்டாக்கி செழிப்பாக வாழலாம். வாயு நம் மூச்சுக்கு ஆதாரமாக இருப்பவர், நீண்ட ஆயுளையும், பலத்தையும் வழங்குவார், குபேரனை வழிபட்டால் சகலவித செல்வங்களையும் தந்து வாழ்க்கையை சிறப்பிப்பார். ஈசானனை வழிபட்டால் ஞானத்தை வழங்கி ஆன்ம விடுதலையை தருவார்.
இதனால் இந்த அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டால் வாழ்வில் அனைத்தும் பெற்று இன்பமாக வாழலாம், திருவண்ணாமலையில் சிவபெருமான் கிரிவல பாதையை சுற்றி அஷ்டதிக் பாலகர்களை உள்ளடக்கியவாறு சிவலிங்கமாக காட்சி தருகின்றார்.

பிரதோச விரதமும் அதன் சிறப்புகளும்

பிரதோச விரதமும் அதன் சிறப்புகளும்


மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே யிருத்திக் காத்த காலவேளையே பிரதோசவேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாத யிருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரியமறைவிற்கு முன்னே மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்ததற்கப்பால் மூன்றே முக்கால் நாழிகையும், ஆக ஏழரை நாழிகைக் காலந்தான் பிரதோசகாலம் எனப்படும். குறிப்பாக, 4:30 மணி முதல் 7:00 மணி வரை உள்ள காலமே பிரதோசகாலம். சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது.
இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் கடைப்பிடிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் உணவருந்த வேண்டும்.
பிரதோசத்தில் பத்து வகைகள் உள்ளன.
1. நித்திய பிரதோசம்
2. நட்சத்திர பிரதோசம்
3. பட்ச பிரதோசம்
4. மாதப் பிரதோசம்
5. பூர்ண பிரதோசம்
6. திவ்ய பிரதோசம்
7. அபய பிரதோசம்
8. தீபப் பிரதோசம்
9. சப்த பிரதோசம்
10. மகா பிரதோசம்
நித்திய பிரதோஷம் - அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை
பட்ச பிரதோஷம் - சுக்லபக்ஷ சதுர்த்தி மாலை
மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பக்ஷ திரயோதசி
மகாப் பிரதோஷம் - சனிக்கிழமை தினம் கிருஷ்ண பக்ஷ திரயோதசி
பிரளயப் பிரதோஷம் - ஈசனிடம் ஒடுங்கும் பிரளயக் காலம்
திங்கட்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சோமவாரப் பிரதோசம் எனவும்,
சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படுகிறது.

Tuesday 5 April 2016

சிவ விரதங்கள்

சிவ விரதங்கள்


சைவ - வைணவத்தில், விரத முறை பல வகையில் பலன் தரக்கூடியதாக அமையும் அந்த வகையில் சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.
1. சோமவார விரதம்­ - திங்கள்கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

குலதெய்வங்கள்

"குலதெய்வங்கள்" என்றால் என்ன ..? அவர்களின் "பெருமை" என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?

நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.
மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது...
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் "குலதெய்வங்கள்" என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள்... அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.
இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை... இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!... விஞ்ஞான முறையில் யோசித்தால்...
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே... ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோ சோமே முடிவு செய்கிறது.
தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...
இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு... தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...
பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்... பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை... ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.
மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...
அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
1. பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
2. புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்... குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள்.

குழந்தை பாக்கியம் தரும் பைரவ விரதம்

குழந்தை பாக்கியம் தரும் பைரவ விரதம்: கெட்ட கனவு, வறுமையையும் தீர்க்கும் அதி சக்தி படைத்தவர்


காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் காலபைரவர்.
ஒருவருக்கு மோசமான காலம் நடந்தாலும் காலச்சக்கரத்தினால் துன்புறும் பக்தர்களை காப்பாற்றக்கூடியவர்ஆதலால்தான் இவரை ஆபதுத்தாரண பைரவர் என்று போற்றப்படுகின்றார்.
ஆபதுத்தாரணர் - என்றால் பக்தர்களின் துன்பத்தை அடியோடு அழிப்பவர் என்றும் பொருள்படும். இவரே மகாகாலர், சட்டநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குகிறவர் என்று பெயர்.
ஒருவருக்கு வறுமையும்,கஷ்டமும்,தைரிய இழப்பு ஏற்பட்டால் இவரை சனிக்கிழமைகளிலோ அல்லது தேய்பிறை அஷ்டமி,வளர்பிறை அஷ்டமியில் வணங்கி வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவருக்கு அர்ச்சனை செய்வதால் விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும்.
*உங்களுக்கு எப்போதாவது கெட்ட கனவோ அல்லது மன பயமோ,எதிர்மறை சிந்தனையோ ஏற்பட்டால் கால பைரவரை மனமுருகி அழையுங்கள் அவர் ஓடோடி வந்து உங்கள் உள்ளத்தில் புகுந்து அசாத்திய தைரியத்தை கொடுப்பார்.

மந்திரத்தால் எளிதில் பயன் அடையக்கூடிய எளிய வழிமுறைகள்

மந்திரத்தால் எளிதில் பயன் அடையக்கூடிய எளிய வழிமுறைகள்
நாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம். மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர்.


ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன. பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன. சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை. இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான்.
மந்திர செபத்தில் வெற்றி அடைய பல விதிமுறைகள் உள்ளன. அவற்றில் எல்லாவற்றையும் பின்பற்ற இயலாது. ஒரு சில விதிமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்
மந்திர செபம் வெற்றி அடைய நாம் செய்ய வேண்டியவை:-
மந்திர செபத்தினை குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும்.
மந்திரம் செபம் செய்யும் போது நமது கவனம் மந்திர செபத்திலேயே தான் இருக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் போது நமது உடல், மனம், வாக்கு மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் மது பழக்கத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் புகை பழக்கம் இருப்பின் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் முறையற்ற உறவு இருப்பின் அதனை நிரந்தரமாக கைவிட வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பசுவிற்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பைரவரின் வாகனத்திற்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் ஏதேனும் ஒரு வறியவருக்கு உணவளிக்க வேண்டும்.
பால், மோர், வெண்ணெய் மற்றும் நெய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
உணவில் தயிர் சேர்க்கக்கூடாது. தயிர் மந்திர செபத்திற்கு தடைகளை உருவாக்கும்.
உணவில் பிரண்டையை சேர்த்திடல் வேண்டும். இது மந்திர செபத்திற்கு உண்டாகும் தடைகளை நீக்கும்.
செபம் செய்யும் முன்பு குவளையில் நீர், எலுமிச்சை சாறு, பனை வெல்லம் கலந்து வைக்க வேண்டும்.
ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு சங்கினை வைத்து அதில் இளநீரினை ஊற்ற வேண்டும்.
மற்றொரு சங்கினை எடுத்து ஊத வேண்டும்.
மந்திர செபம் செய்வதற்கு முன் பால் அருந்த வேண்டும்.
பால் அருந்திய பின்பு சங்கல்பம் என்னும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
சங்கல்பம் செய்த பின்பு 6 – 12 சுற்றுகள் பிராணாயாமம் செய்திடல் வேண்டும்.
12 சுற்றுகளுக்கு அதிகமாக பிராணாயாமம் அதிகமாக செய்தால் பெரும் தடைகள் உண்டாகும்.
பிராணாயாமம் செய்த பின்பு மந்திர செபம் செய்திடல் வேண்டும்.
மந்திர செபம் முடிந்தவுடன் சங்கினை ஊதி மேற்கண்ட எலுமிச்சை பானத்தினை அருந்த வேண்டும்.
அதன் பின்னர் மற்றொரு சங்கில் வைத்த இளநீரினை பருக வேண்டும்.
வெறும் தரையில் உட்கார்ந்து செபம் செய்தல் கூடாது.
உயரமான இடங்கள், கோவில்கள், பசு இருக்கும் இடங்களில் செபம் செய்ய வேண்டும்.
கால சந்திகளில் செபம் செய்தல் மிகுந்த பலனை கொடுக்கும்

ருத்ராட்ஷம் அணிய சிறப்பு தகுதி தேவையா? யார் எல்லாம் அணியலாம்?

ருத்ராட்ஷம் அணிய சிறப்பு தகுதி தேவையா? யார் எல்லாம் அணியலாம்?


ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.
ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.
இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.
ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்வார்கள்?, குளித் தவர்தான் ப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா?
ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அதுபோலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும். ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள்.
எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம்.
ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது.
பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.
ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாம்:
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.
எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.
எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாம்:
பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?
இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.
ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டும்
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது.
இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.
ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.
ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாம்:
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.
நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம்.
இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

இறைவனை எப்படி வழிபடவேண்டும், வழிபடும் முறைகளில் ஒருசில வழிமுறைகள்

இறைவனை எப்படி வழிபடவேண்டும், வழிபடும் முறைகளில் ஒருசில வழிமுறைகள்


1. அபிஷேகம் ( நீர், பால், தயிர்,சந்தனம்,தேன்,பன்னீர்,இளநீர்,திரவியபொடி,விபூதி,கரும்புச்சாறு,போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து இறைவனை வழிபடுதல் ஆகும்)
2. அழகு செய்தல் ( பெருமானுக்கு சந்தனத்தால் காப்பு செய்தல்,திருநீறால் காப்பு செய்தல்,அன்னத்தால் காப்பு செய்தல்,ஆடை, ஆபரணங்கள் அனிவித்தல், பிறை,திருநீறு பட்டை அனிவித்தல்,முகம் பாவனை செய்தல், மாலைகள் சாத்துதல் போன்றவைகள் ஆகும்)
3. அர்ச்சனை ( மலர்களால் அர்ச்சனை செய்தல், விபூதியால் அர்ச்சனை செய்தல், குங்குமத்தால் அர்ச்சனை செய்தல், வேதங்களால் அர்ச்சனை செய்தல்,மந்திரங்களால் அர்ச்சனை செய்தல், திருமுறைகளால் அர்ச்சனை செய்தல், அஷ்டோத்திரம் ( 108) போற்றிகள் செய்து அர்ச்சனை செய்தல் சகஸ்ரநாமம் ( 1008) போற்றிகள் செய்து அர்ச்சனை செய்தல் போன்றவை ஆகும்)
4. நைவேத்யம் ( பஞ்சாமிர்தம்,சுத்தஅன்னம்,சுண்டல்,பழங்கள்,சக்கரைப் பொங்கல்,வெண் பொங்கல், பாசிப்பயிறு பாயாசம்,போன்றவை செய்தல் ஆகும்)
5. ஆராதனை ( 16 தீப வகைகளை வைத்து பெருமானுக்கு அர்ச்சித்தல் ஆகும்)
6. திருவிழாக்கள் ( திருவாதிரை, பிரதோசம்,கல்யாண உற்சவம்,ஆருத்ரா தரிசனம்,அமாவாசை,பௌர்ணமி, மகாசிவராத்திரி,மாதசிவராத்திரி, போன்றவைகளை கொண்டாடுதல் ஆகும்)

இறை பக்கி விரைவாக கிடைக்க உதவும் சில வழிமுறைகள்

இறை பக்கி விரைவாக கிடைக்க உதவும் சில வழிமுறைகள்

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.
2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.
3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.
4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.
5. சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும். தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும் முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.
6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும் விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும் விநாயகருக்கு = அருகம்புல் ஆகும் பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இல்லை ஆகும் இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.
9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள்.
10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...
சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
ஆனி – தேன்
ஆடி – வெண்ணெய்
ஆவணி – தயிர்
புரட்டாசி – சர்க்கரை
ஐப்பசி – உணவு, ஆடை
கார்த்திகை – பால், விளக்கு
மார்கழி – பொங்கல்
தை – தயிர்
மாசி – நெய்
பங்குனி – தேங்காய்.
11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும்.
12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து பூசிக்கொள்ள கூடாது.
14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.
15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
16. கோயிலிலிருந்து வெளியே வரும்போது மணியடிக்கக்கூடாது, கோயிலுக்குப் போன பலனே போய்விடும், இறைவனை வணங்கும்போது மட்டுந்தான் மணி அடிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன்

உண்மையான தரமான நவரத்தினங்களை அடையாளம் காண்பது எப்படி...??

போலிகள் நிறைந்த வியாபாரிகளிடமிருந்து உண்மையான தரமான நவரத்தினங்களை அடையாளம் காண்பது எப்படி...??


உண்மையான நவரத்தினங்களை இனம் காண்பது எப்படி என தெரிந்துக்கொள்வேம்....
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது “அகத்தியர் வாகடம்” என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்.
நம்மில் சிலருக்கு நவரத்தின கற்கள் வாங்குவதற்கு தயக்கம் இது உண்மையாத
எனக் குழப்பம்..சரி இனி கிழே உள்ள சில குறிப்புகளில் பரிசோதித்த வாங்க முயற்சி செய்யுங்கள்
முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.
அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

எது தானம் - எது தர்மம் கீதையில் விளக்கம் தருகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

எது தானம் - எது தர்மம் கீதையில் விளக்கம் தருகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்


பாரதப் போரில் மிகப் பெரிய கொடையாளி கர்ணனின் உயிர் பிரியாமல் காத்தது அவர் செய்த தான தர்மங்கள், ஆனால் விதிப்படி உயிர் பிரிந்தால்தான் அவரின் தேகம் சாந்தியடைந்து அவரின் உயிர் இறைவனை சரணடையும் என்பதால் அவரின் உயிரை போக்க கண்ணனே அந்தனர் வேடத்தில் வந்து கர்ணன் செய்த புண்ணியங்களை தானம் பெற்றார். கண்ணன் அருளால் கர்ணன் மோட்சத்தை அடைந்தார்.
இதுகுறித்து சூரியதேவன் கண்ணனிடம் தானம் தர்மம் இவற்றிற்கு உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு வேண்டிக் கொண்டதன் பேரில் கண்ணன் கூறிய தான தர்ம உரைதான் கீழே உள்ளது.
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ? என்றார் கண்ணன்.

Saturday 2 April 2016

மேஷம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) கேதுவால் நன்மை ராகுவால் பிரச்னை! (100/70)

அன்புள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேது சிறப்பான பலனைத் தருவார். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். செயல்களை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல்அதிகரிக்கும். ராகு இதுவரை 6-ம் இடமான கன்னி ராசியில் இருந்து, உடல் ஆரோக்கியத்தையும், காரியஅனுகூலத்தையும் தந்திருப்பார். இப்போது 5-ம் இடமான சிம்ம ராசிக்கு வருவதால் மனைவி, குழந்தைகள் வகையில் கருத்து வேறுபாட்டை உருவாக்கலாம்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: இந்த சமயத்தில் கேதுவின் இருப்பிடத்தாலும், குருவின் 9-ம் இடத்துப் பார்வையாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முயற்சிகள் வெற்றி அடையும். ராகுவால் அவ்வப்போது தடைகள் வந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும்.  ராகு சில சிரமங்களைத் தரும் அதே நேரம், நல்ல வேளையாக குரு காலமாகிய 7-2-2016 முதல்1-8-2016 வரை வக்ரம் அடைகிறார். இதனால் ராகு தரும்சிரமங்களைக் குறைத்து பலன்கள் கிடைக்கச் செய்வார்.  கேதுவால் குடும்பத்தில் வசதிகள் பெருகும்.உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் ஆரம்பத்தில் தடைபடலாம். அதே நேரம் தீவிர முயற்சியின் பேரில் பிப்ரவரி முதல் ஜூலைக்குள் நடப்பதற்கு வாய்ப்புண்டு.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். கேது பலமாக இருப்பதால் பணவிஷயத்தில் எந்த கஷ்டமும் வராது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால், சம்பள உயர்வுக்கு தடை இல்லை.
கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும்.
அரசியல்வாதிகள் கேதுவால் சிறப்பான பலனை காணலாம். மாணவர்களுக்கு கேதுவின் அருளாலும், குருவின் பார்வையாலும் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் சாகுபடி எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். ஆடம்பர செலவைக் குறைப்பது புத்திசாலித்தனம். கேதுவால் உடல்நிலை நன்றாக இருக்கும். மருத்துவ செலவு குறையும்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை: கேதுவும், குருவும் சாதகமான இடத்தில் இருப்பார்கள். அவர்கள் சுபநிகழ்ச்சியை நடத்தித் தருவர். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும்.
கணவன்-மனைவி இடையே அன்னியோனியம் கூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் மாறி, மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். ராகுவால் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து போகும்.
பணியில் மேம்பாடு காணலாம். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் வெற்றி அடையும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். அரசு வகையில் உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.
கலைஞர்களுக்கு பாராட்டு, விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்க பெறுவர்.
மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும்.
விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர். புதிய சொத்து வாங்கலாம்.
பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். கேதுவால் உடல் நலம் சிறப்படையும்.
பரிகாரம்: ராகுவுக்கும், சனிபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

ரிஷபம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) போகப் போக தெரியும் ராகுவின் அருமை புரியும்! (65/100)

உறுதியான உள்ளம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
இந்த ராகு-கேது பெயர்ச்சி ஆரம்பத்தில் சிரமங்களையும், போகப்போக நன்மைகளை தரும் வகையில் அமையும். ராகு இதுவரை 5-ம் இடமான கன்னி ராசியில் இருந்து குடும்பத்தில் பிரச்னையை தந்து கொண்டிருந்தார். இப்போது அவர் 4-ம் இடமான சிம்மத்திற்கு வருவதால் அந்த பிரச்னை மறையும்.அதே நேரம் இந்த இடமும் ராகுவுக்கு சாதகமானது அல்ல என்பதால் அலைச்சலையும், வேறு பிரச்னையையும் உருவாக்கலாம். கேது இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மீனத்தில் இருந்து, நல்ல சுகத்தையும், பொருளாதார வளத்தையும் தந்திருப்பார். அவர் இப்போது 10-ம் இடமான கும்பத்திற்கு செல்வது சிறப்பானது என்று சொல்ல முடியாது. இங்கும் அவர் உடல் உபாதைகளை தரலாம். ஆனால், பெயர்ச்சிக் காலத்தின் பிற்பகுதியில் காரிய அனுகூலத்தைப் கொடுப்பார்.
2016 ஜனவரி முதல்  டிசம்பர் வரை: ராகு, கேது சாதகமற்ற இடங்களில் இருந்தாசலும், குரு பலத்தால் நீங்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பனிபோல் விலகும். ஏனெனில், குரு சாதகமான இடத்தில் உள்ளதுடன், அவரது 5,7-ம் பார்வையும் சிறப்பாக உள்ளது. உங்கள் செல்வாக்கு அந்தஸ்து மேம்பட்டு இருக்கும். மதிப்பு,மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்துமுடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வசதியானவீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் மாறி மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். இந்த காலகட்டத்தில், ராகுவால் நீங்கள் அனுபவிக்கப் போவது, தம்பதியினர் இடையே ஏற்படும் உரசல் மட்டுமே. விட்டுக் கொடுத்து போனால், இதையும் சமாளித்து விடலாம்.
தொழிலதிபர்கள், வியாபாரிகள் வளர்ச்சி காணலாம். பங்குதாரர்கள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். மார்ச் மாதத்திற்கு பிறகு புதிய தொழில் தொடங்கலாம். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். போட்டியாளர்களின் தொல்லை அடியோடு மறையும்.
பணியாளர்கள் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். உங்களை எதிர்த்தவர்கள் உங்கள் நிலைமையை புரிந்து அனுசரணையுடன் நடப்பர்.
கலைஞர்களுக்கு பாராட்டு, விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடுபுதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். சமூகத்தில் ஒரு அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர்.
விவசாயிகள் நெல், சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் தீர்ப்புகள் சாதகமாக அமையும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.
பெண்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். உங்களை புரிந்து கொள்ளாத குடும்பத்தினர் இனி படிப்படியாக உங்களை புரியும் நிலை ஏற்பட்டு உங்களிடமே தஞ்சம் கொள்ளும் நிலை உருவாகும்.
2017 ஜனவரி முதல்   ஜூலை வரை:  ராகுவும்-கேதுவும் சாதகமற்ற இடத்தில்தான் இருக்கிறார்கள். இந்த காலத்தில் குருவும் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அடி யெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப் புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார். ஆனாலும், அவரது 9-ம் இடத்து பார்வையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும். மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் முன்னேற்றம் காண முடியும்.
விவசாயத்தில் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம்.
பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: ராகு கேது சாதகமற்ற நிலையில் உள்ளதால் அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். பவுர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி சித்திரபுத்திர நயினாரை மனதில் நினைத்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில்

மிதுனம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) கேது தரும் சோதனை படைப்பீர்கள் சாதனை! (75/100)

வெற்றியை லட்சியமாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!
இதுவரை ராகு 4-ம் இடமான கன்னி ராசியில் இருந்து இருந்து வீண் கலகத்தையும், அலைச்சலையும் உருவாக்கி இருப்பார். குடும்பத்தில் பகையையும், பிரிவையும் உருவாக்கி இருக்கலாம். இப்போது ராகு 3-ம் இடமான சிம்மத்திற்கு சென்று பல்வேறு நன்மைகளை தர உள்ளார். குறிப்பாக காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் கொடுப்பார். ராகு நன்மை தரும்போது, கேதுவால் நன்மை தர இயலாது. அவர் இதுவரை 10-ம் இடமான மீனத்தில் இருந்து உடல் உபாதைகளை தந்திருப்பார். இனி அவர் 9-ம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். அதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால் அவரால் இருந்து வந்த நோய்கள் குணம் அடையும். அதே நேரம் பொருள் இழப்பை சந்திக்கலாம். ஆனால், அந்த சோதனைகளை பெயர்ச்சி காலத்தின் பிற்பகுதியில் ஊக்கத்துடன் சந்தித்து சாதனை படைப்பீர்கள்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு, கேதுவின் நிலை இப்படி இருக்க, குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கிறார். இது சுமாரான இடம் தான். ஆனால், 7-2-2016 முதல் 20-6-2016 வரை, அவர் வக்கிரம் அடைவதால் கெடுபலன் நடக்காது. செலவு அதிகரித்தாலும், பணநிலை கைகொடுக்கும் அளவுக்கு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தேவைகள் பூர்த்தியாகும். கேதுவால் மனைவி வகையில் சிற்சில பிரச்னை வரலாம். சற்று விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது மனக்கசப்பு வரலாம். சற்று விலகி இருக்கவும். அல்லது அவர்களிடம் அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம்.
பணியாளர்கள் சீரான நிலையில் இருப்பர். கடந்த காலத்தைவிட வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். அதே நேரம், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்னைகள் குறையும். அதிகாரிகளிடம் அனுசரித்து போனால் போதும். இடமாற்றம் ஏற்படலாம். சிலர் வேலை காரணமாக குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிய வேண்டியிருக்கும்.
தொழில், வியாபாரத்தில் பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். போட்டியாளர்கள் வகையில் எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக பெறமுடியாது. சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியது இருக்கும்.
அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டி வரும்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சுமாரான நிலையில் இருப்பர். தீவிர முயற்சி எடுத்தால் நல்ல முன்னேற்றம் காணலாம். பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து உழைப்புக்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன் கொடுக்கும்.
விவசாயத்தில் உழைப்புக்கு ஏற்ற பலனைத்தான் பெற முடியும். ஜூலை மாதத்திற்கு பிறகு முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். கால்நடை மூலம் சீரான வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைவிட்டு போகலாம். வழக்குகள் பாதகமாகவும் அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள், தங்கள் தேவைகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
2017 ஜனவரி முதல்   ஜூலை வரை: இந்த சமயத்தில், கேது-ராகுவால் ஏற்படும் பிரச்னைகளை குரு 5ம் இடத்துக்கு வந்து சரி செய்வார். பொருளாதார நிலை வளர்ச்சி அடையும். நீங்கள் எடுத்த காரியம் நிறைவேறும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிணக்குகள் மறையும்.
பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மறையும். வேலைப்பளு குறையும். விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடலாம். உங்கள் திறமை மேம்பட்டு இருக்கும். புதிய பதவி கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது சிலர் வணிக விஷயமாக வெளிநாடு செல்வர். முதல்போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அரசு வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும். மாணவர்களுக்கு விரும்பிய பாடம், கல்லுõரியில் இடம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு அரசிடம் இருந்து பாராட்டு, விருது கிடைக்கும். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
விவசாயிகள் புதிய சொத்து வாங்குவர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குதூகலமான பலனை காண்பர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். பத்ரகாளியம்மனுக்கு விளக்கேற்றி பூஜை செய்யவும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் (மதுரையில் இருந்து 20 கி.மீ.,)

கடகம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வேலையில் மிக கவனம் சாலையில் மெது பயணம்! (60/100)

கண்ணியம் மிக்க கடக ராசி அன்பர்களே!
ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான கன்னி ராசியில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். நல்ல பொருளாதார வளம், பல்வேறு முன்னேற்றங்களை பெற்றிருக்கலாம். இப்போது 2-ம்இடமான சிம்மத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் இல்லை. குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளைத் தருவார். ஆனால், துõரதேச பயணத்தை ஏற்படுத்துவார். கேது இதுவரை 9-ம் இடமான மீனத்தில் இருந்தார். அவரால் பொருள் இழப்பையும், காரியத்தில் தோல்வியும் கண்டிருக்கலாம். ஆனால், இப்போது 8-ம் இடமானகும்பத்திற்கு மாறுவதன் மூலம் கெடுபலன் நடக்காது. அதேநேரம், அவர் கும்பத்திற்கு மாறுவதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவரால் உடல்உபாதைகள் வரலாம். குரு பகவானும் தற்போது 3-ம் இடத்தில் இருக்கிறார். ஆனால், அவரது அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. மேலும், அவர் 7-2-2016 முதல் 1-8-2016 வக்கிரம் அடைந்து சிம்ம ராசியில் இருப்பார். இந்த காலத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு, கேது எப்படி இருந்தாலும் குரு பார்வையால் நல்ல பணப்புழக்கம் காணலாம். அதே நேரம் செலவு அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை முன்புபோல் இருக்காது என்றாலும் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் வராது. வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சனிபகவான் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். வாகனங்கள் இயக்கும் போது மெதுவாகச்செல்வது தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையால் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில்
அனுகூலம் இருக்கும். புதிய வீடு, மனை வாங்க நினைப்பவர்களின் எண்ணம் ஜூலை மாதத்திற்குள் நிறைவேறும்.
பணியாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு வேலையில் இடைஞ்சல் வரலாம். பொறுப்புகளை பிறர் தட்டிப் பறிக்கலாம். எனவே வேலையில் கவனமாக இருக்கவும்.. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
தொழில், வியாபாரம் தொடர்பான பணவிஷயத்தில் யாரையும் நம்பி விட வேண்டாம். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தைக் காணலாம். வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெறுவர். அலைச்சலும், வெளியூர் வாசமும் இருக்கும்.
கலைஞர்கள் புதிய யுக்தி மூலம் பிரபலம் அடைவர். புதிய ஒப்பந்தத்திற்காக சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள் சுமாரான பலனைக் காணலாம். ஆசிரியர்கள் சொல்படி நடப்பது நல்லது.
விவசாயத்தில் சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.
பெண்கள் புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டு. அமைதியும், பொறுமையும் தேவை. மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.
2017 ஜனவரி முதல் ஜூலை வரை: இந்த காலத்தில், ராகு கேதுவின் சாதகமற்ற நிலையுடன், குருவும் 4-ம் இடத்திற்கு வருவார். இதனால், பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் இருந்தாலும், செலவும் துரத்தும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் இல்லை. உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்காது.
பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால், உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரிகள் புதிய தொழிலை தொடங்க இது உகந்த காலம் அல்ல. சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். அரசு வகையில் எந்த உதவியும் கிடைக்காது.
கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும்.
பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: குருவுக்கு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். ராகு-கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர் வழிபாடு மிகவும் உயர்வை தரும். 
செல்ல வேண்டிய தலம்:  திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் உள்ள ராகு சன்னிதி.

சிம்மம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமில்லே! (55/100)

சிரமப்பட்டு முன்னேற துடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!
இதுவரை ராகு, உங்கள் ராசிக்கு 2-ம் இடமான கன்னி ராசியில் இருந்து குடும்பத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தி இருப்பார். சிலர் வீட்டில் திருட்டு போயிருக்கலாம். இனி, அவரால் அந்த நிகழ்வுகள் ஏற்படாது. ஆனாலும், ராகு பெயர்ச்சி இப்போதும் சாதகமாக இல்லை. அவர் உங்கள் ராசிக்கு வருவதால், வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சிக்கு தகுந்த பலன் இல்லாமல் போகலாம்.ஆனாலும், எவ்வளவு தான் சோதனை வந்தாலும் சிங்கம் போல் எதிர்த்து போராடும் இயற்கை குணமுள்ள உங்களுக்கு நல்ல@த நடக்கும். கேது இதுவரை 8-ம் இடமான மீனத்தில் இருந்து உடல் உபாதைகளை தந்திருக்கலாம். இப்போது அவர் 7-ம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். இதுவும் உகந்த இடம் இல்லை. ஆனாலும் எட்டாமிடத்தில் இருந்ததுபோல் கெடு பலன்கள் நடக்காது. 7-ல் கேது இருக்கும் போது மனைவி வகையில் பிரச்னையையும், அலைச்சலையும் தரலாம். வீண் மனவேதனை உருவாகலாம். எதிரிகளால் பிரச்னை வரத்தான் செய்யும். இருப்பினும், குரு ராசிக்கு 2-ம் இடத்தில் இருப்பதால், ராகு கேது தரும் கெடு பலன்கள் குறையும்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு, கேதுவால் பாதிப்பு என்ற போதிலும், குரு சாதகமான இடத்தில் இருப்பதால் சுபங்களை தருவார். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகி தெளிவடையும். எந்த பிரச்னையையும் முறியடித்து முன்னேறும் வல்லமையை பெறுவீர்கள். பொருளாதார நிலை வளர்ச்சி அடையும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். உறவினர்கள் வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடு மறையும். ஆனால், வீட்டில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு
ஏற்படலாம்.
பணியாளர்களுக்கு வேலைப் பளு குறையும். விருப்பமான இட மாற்றத்தை முயற்சி செய்தால் பெற்று விடலாம். உங்கள் திறமை மேம்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு வரும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலர் வணிக விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தைக்காணலாம். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முதல்போடாமல் முன்னேற வழிவகை காணலாம். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிக்குள்ளாகலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.
அரசியல்வாதிகள் செல்வாக்கு பெறுவர். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் காண்பர். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவர். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் குதுõகலமான பலனைக் காண்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டவும். உடல் நலம் சுமாராக இருக்கும்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை:  ராகு, கேது மட்டுமின்றி பிற முக்கிய கிரகங்களும் சாதகமாக காணப்படவில்லை. கடந்த காலங்ளை போல் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. வீண்விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. தீவிர முயற்சியின் பேரில் காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை மனைவியிடம் ஒப்படைக்கவும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதுநல்லது. ஆனால், குருபகவானின் வக்ர காலமாகிய 9-3-2017 முதல்3-8-2017 வரை அவரால் ஓரளவு பலன் கிடைக்கும்.
பணியாளர்கள் கடந்த காலத்தை போல் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரத்தில் அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். தீயோர் சேர்க்கையால் அவதிப்படலாம். எனவே யாரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும். அரசு உதவி கிடைப்பது அரிது.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும்.
மாணவர்கள் அதிகமாக சிரத்தை எடுத்து படித்தால் தான் உயர் மதிப்பெண் பெற முடியும்.
விவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரைத் தவிர்க்கவும். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கம் வகிப்பர். வேலைக்குச் செல்லும் பெண்கள்விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சுமாராக இருக்கும்.
பரிகாரம்: பத்ரகாளியம்மனுக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பெருமாள் கோவில்.

கன்னி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ராகுவால் சுமை இருக்கு! கேதுவால் சுகம் இருக்கு!(70/100)

பெருந்தன்மையுடன் செயலாற்றும் கன்னி ராசி அன்பர்களே!
ராகு-கேதுவால் இதுவரை எந்த பலனும் கிடைக்காமல் இருந்து வந்தீர்கள். இப்போது இந்த பெயர்ச்சி மூலம் சிறப்பான நன்மை உங்களுக்கு காத்திருக்கிறது. அதுவும் தற்போது கேது நன்மை தரும் இடத்திற்கு வருகிறார். அவர் இதுவரை 7-ம் இடமான மீனத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னை, உடல் உபாதை ஏற்படுத்தி வந்தார். இப்போது 6-ம் இடமான கும்பத்திற்கு வருவதன் மூலம் அந்த பின்தங்கிய நிலை அடியோடு மறையும். பொன், பொருள் தாராளமாக சேரும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும்.  கேது நன்மை தரும் காலத்தில் ராகுவால் நற்பலன் தர இயலாது. அதனால் சுமையும், சுகமும் கலந்ததாக வாழ்வு அமையும். ராகு இதுவரை உங்கள் ராசியில் இருந்து உறவினர் வகையில் பிரச்னையை உருவாக்கி இருக்கலாம். இப்போது அவர் இடம் மாறி 12-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இங்கு அவர் பொருள் விரயம், துõரதேச பயணத்தையும் கொடுப்பார்.
2016 ஜனவரி முதல்  டிசம்பர் வரை: குரு பகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. ஆனாலும் 7-2-2016 முதல் 20-6-2016 வரை வக்கிரம் அடைகிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் குருபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன் தர மாட்டார் மாறாக நன்மையே தருவார். அதோடு குருவின் அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. சனி பகவான் இப்போது 3-ம் இடத்தில் இருக்கிறார். இதுவும் சிறப்பான நிலை. பொருளாதார வளத்தை மேம்படுத்துவார்.
தொழிலில் சிறந்தோங்க செய்வார். பணப் புழக்கம் சீராக இருக்கும். சமுகத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுத் தேவை அனைத்தும் தாராள பொருள் செலவில் நிறைவேறும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனவே சற்று ஒதுங்கி இருக்கவும். குரு பகவான் வக்கிர காலத்தில் தீவிர முயற்சி எடுத்தால், புதிய வீடு கட்ட வாய்ப்புண்டாகும். சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகவும் யோகமுண்டு.
பணியாளர்கள் கடந்த காலத்தை விட முன்னேற்றம் காண்பர். பணிச்சுமை இருந்தாலும் அதற்கான நற்பலன் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு. வழக்கமான சம்பள உயர்வு, சலுகை கிடைப்பதில் தடை ஏற்படாது.
வியாபாரத்தில் புதிய தொழில் ஓரளவே அனுகூலத்தைக் கொடுக்கும். சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற நேரிடலாம். எதிரி மீது எப்போதும் கவனம் வைப்பது நல்லது.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். புகழ்,பாராட்டு கிடைக்க தாமதம் உண்டாகும். பெண்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல தேர்ச்சி உண்டாகும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கப் பெறுவர். அதிகமான பண முதலீடு தேவைப்படும்
பயிர்களைத் தவிர்ப்பது நல்லது.
பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நன்மையளிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை:  குருபகவான் 2-ம் இடமான துலாமிற்கு வருவதால் நன்மை உண்டாகும். குருவின் பலத்தால் மந்த நிலை மாறும். புதிய முயற்சியைச் சிறப்பாக செய்து முடிக்கலாம். பண வரவு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். சமுக மதிப்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் விருந்து விழா என்று சென்று வருவீர்கள். நீண்ட காலமாக தடைபட்ட திருமணம் கை கூடும். உறவினர் வகையில் அனுகூலம் பிறக்கும். புதிய வீடு கட்ட வாய்ப்புண்டு.
பணியாளர்களுக்கு வேலை பளு குறையும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர்.
இடமாற்ற பீதி மறையும். படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை
கிடைக்கும்.
வியாபாரத்தில் முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். அரசு வகையில் நன்மை உண்டாகும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான நிலை இனி இருக்காது. ஆசிரியர்களின் ஆதரவால் முன்னேற்றத்திற்கு வழி காண்பர். விவசாயிகளுக்குப் புதிய நிலம் வாங்கும் வாய்ப்புண்டாகும். பெண்கள் குடும்ப வளர்ச்சியில் பங்கேற்பர்.
பரிகாரம்: நவக்கிரகங்களை தவறாமல் வழிபடுங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுக் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர் சாதம் படையுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள தகட்டூர் பைரவர் கோவில்.

துலாம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) அசத்தப் போகும் ராகு வந்தாச்சு ராஜயோகம்! (75/100)

நேர்மை குணம் படைத்த துலாம் ராசி அன்பர்களே!
ராகு-கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். ராகு இது வரை உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கன்னி ராசியில் இருந்ததால் வாழ்வில் பண இழப்பையும், மனக்கவலையையும் நீங்கள் சந்தித்து இருக்கலாம். முயற்சிகளில் தடை ஏற்பட்டு இருக்கும். ராகுவால் ஏற்பட்ட இடர்பாடுகளுக்கு இனி விடை கொடுக்கலாம். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான சிம்மத்திற்கு செல்வது சிறப்பான அமைப்பாகும். பொருளாதாரத்தில் ராஜயோகத்தை தருவார். பெண்களால் நன்மை உண்டாகும். ராகு நன்மை தரும் போது கேதுவால் நன்மை கிடைக்காது. கேது இதுவரை 6-ம் இடமான மீனத்தில் இருந்து பொன், பொருளை அள்ளித் தந்தார். அவர் இப்போது 5-ம் இடமான கும்பத்திற்கு வருகிறார். தொழிலில் பிரச்னை உருவாகலாம். திருட்டு பயமும் ஏற்படலாம்.
2016 ஜனவரி முதல்  டிசம்பர் வரை: குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உள்ளார். இது சுமாரான நிலையே. ஆனால் ராகு நன்மை தருவார்.மேலும் குரு 7-2-2016 முதல் 20-6-2016 வக்கிரம் அடைகிறார். இதனால் பொருளாதார வளம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். மக்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படலாம். சில காலம் பொறுத்திருப்பது நல்லது. சிலருக்கு குரு வக்கிர காலத்தில் திருமணம் கைகூடலாம். துõரத்து உறவினர்களின் வகையில் இருந்து எதிர்பாராத விரும்பத்தகாத செய்தி வரலாம்.
பணியாளர்களுக்கு அலைச்சல் ஏற்படும். சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். புதிய வேலை மாற்றம், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. குரு வக்கிர காலத்தில் நன்மை தொடர்ந்து நடக்கும்.
வியாபாரத்தில் வளர்ச்சி நிலவும். ராகுவால் பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். கேதுவால் எதிரிகளின் இடையூறு அவ்வப்போது தலைதுõக்கலாம். அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. சிலர் திடீர் சோதனைக்கு ஆளாகலாம். எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குருவால் நிர்வாகச் செலவு அதிகரிக்கும். சிலருக்கு வீண் விரயம் ஏற்படவும் வாய்ப்புண்டு. பண விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. 2016 ஜூலை முதல் புதிய முதலீட்டை தவிர்க்கவும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைப்பதில் சற்று தடைகளைச் சந்திப்பர். விடாமுயற்சியின் பேரில் நன்மை கிடைக்கும். திறமைக்கு ஏற்ப புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். எளிதாக படித்து அதிக மதிப்பெண் எடுத்து விடலாம் என்று அசட்டையாக இருந்து விட வேண்டாம். இப்போது கஷ்டப்பட்டு படிப்பது அடுத்த கல்வி ஆண்டுக்கு உறுதுணையாக அமையும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.
விவசாயிகள் தொடர்ந்து சிறப்பான பலனைக் காணலாம். கரும்பு, எள், பயறு வகை மற்றும் பனை பொருட்களில் நல்ல மகசூல் கிடைக்கும். முயற்சியின் பேரில் புதிய சொத்து அமையும்.
பெண்கள் திருப்திகரமாக வாழ்வு நடத்துவர். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டவும்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை:  சனி, குரு, கேது ஆகிய கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும், குருவின் அனைத்துப் பார்வைகளும் சாதகமாக உள்ளன. அதன் மூலம் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. முயற்சி எடுத்தால் மட்டுமே திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.
பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
வியாபாரிகள் அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். பெண்களை பங்கு தாரராக கொண்ட தொழில் நல்ல வளர்ச்சி அடையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். எதிரியால் உருவாகும் பிரச்னையை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள்.
கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர். மாணவர்கள் விடா முயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரம் சுமாராக இருக்கும்.
பெண்கள் அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். பெண் காவலர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்புண்டு.
பரிகாரம்: குருபகவானுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுங்கள். ஏழை மாணவர்கள் படிக்க உதவி செய்யுங்கள். சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
செல்ல வேண்டிய தலம்:  கீழப்பெரும்பள்ளம் கேதுபகவான் கோவில்

விருச்சிகம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வெற்றி வேண்டுமா! எதிர்நீச்சல் போடுங்க! (60/ 100)

தன்னம்பிக்கையுடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!
ராகு-கேது பெயர்ச்சியால் சுமாரான பலன் என்றாலும் கவலை வேண்டாம். காரணம் குரு பகவான் மற்றும் சனி பகவானால் அவ்வப்போது நன்மை கிடைக்கவே செய்யும். 11-ம் இடமான கன்னி ராசியில் இருந்து பொருளாதார வளத்தையும், பெண்களால் அனுகூலத்தையும் கொடுத்து வந்த ராகு, இனி 10-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. பொருள் இழப்பையும், உடல் உபாதைகளையும் கொடுக்கக் கூடும். கேது இதுவரை மீனத்தில் அதாவது 5-ம் இடத்தில் இருந்தார். அவர் உடல் நலக்குறைவு, பிள்ளைகளால் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கலாம். இனி 4-ம் இடமான கும்பத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. அவரால் தொழிலில் பிரச்னை குறுக்கிடலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம். பிரச்னைகள் வாழ்வில் குறுக்கிட்டாலும் விடாமுயற்சியுடன் எதிர்நீச்சல் போட்டால் வெற்றி கிடைக்காமல் போகாது.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு, கேது நிலைமை இப்படி இருந்தாலும், குரு சாதகமான இடத்தில் இருக்கிறார். அவரது 7 மற்றும் 9-ம் இடத்துப் பார்வைகள் சாதகமான இடத்தில் விழுகின்றன. அதன் மூலம் எண்ணற்ற நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மதிப்பு-மரியாதை அதிகரிக்கும். குருவால் நற்பலன் கிடைத்தாலும் ஏழரை சனிகாலம் என்பதால் சிரமத்தையும் சந்திக்க நேரிடும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்குவர். அல்லது வசதியான வீட்டிற்கு குடி புகலாம்.திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.  பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். புதிய பதவி கிடைக்க வாய்ப்புண்டு. சம்பள உயர்வும் கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறலாம். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரிகள் குருவால் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவர். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கவனம் தேவை. 2016 மார்ச்சுக்குப் பின் சனி வக்கிரம் அடைவதால் நன்மை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நற்பெயர் கிடைக்கப் பெறுவர்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றமான பலன் காணலாம். விரும்பிய நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் சூழல் உருவாகும்.
விவசாயிகள் மொச்சை, கடலை, கேழ்வரகு, நெல், கோதுமை போன்ற தானியங்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர்.
பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உடல் நலத்தை பொறுத்தவரை கேதுவால் வயிறு பிரச்னை வரலாம். பயணத்தின் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை: குரு 12-ம் இடத்தில் இருப்பதால் நன்மை தரமாட்டார். மற்ற கிரகங்களும் சாதகமாக இல்லாததால், வாழ்வில் தடைகள் குறுக்கிடலாம். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். பண வரவு திருப்தி அளித்தாலும், செலவும் அதிகரிக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படலாம். பொருட்கள் திருட்டு போக வாய்ப்புண்டு. வெளியூர் பிரயாணத்தில் கவனம் தேவை.
பணியாளர்கள் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். வியாபாரத்தில் உழைப்புக்கு ஏற்ப வருமானம் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர் விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படலாம். எதிரிகளால் அவ்வப்போது பிரச்னை குறுக்கிடும். புதிய முதலீடு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
மாணவர்கள் முயற்சியுடன் படிப்பது நல்லது.
விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்காது.
பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.
பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். யானைக்கு கரும்பு, பழம் கொடுங்கள். காளியம்மனை வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரம், கேதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

தனுசு ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தீர்ந்தது பிரச்னை திருப்தியுடன் வாழ்வீங்க! (75/100)

குறிக்கோளுடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!
ராகு-கேது இதுவரை திருப்தியற்ற நிலையில் இருந்தன. ராகு 10-ம் இடமான கன்னி ராசியில் இருந்து மனைவி வகையில் பிரச்னை, சமுகத்தில் மதிப்பு குறைவு கொடுத்திருப்பார். கேது 4-ம் வீடான மீனத்தில் இருந்து உடல் உபாதை, பிள்ளைகளால் தொல்லை தந்திருப்பார். வாழ்வில் குறுக்கிட்ட பிரச்னைக்கு விடைகொடுக்கும் காலம் இது. இனி மனதிருப்தியுடன் வாழ்வீர்கள். கேது 3-ம் இடமான கும்பத்திற்கு வந்து நன்மையை வாரி வழங்குவார். வாழ்வில் பொன், பொருள் சேரும். உடல் உபாதை நீங்கி குணம் பெறுவீர்கள். ராகு 9-ம் இடமான சிம்மத்திற்கு மாறுவார். இது சிறப்பான இடம் இல்லைஎன்றாலும், கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை இருக்காது. அவ்வப்போது தடைகளை உருவாக்கலாம்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை:  குரு பகவான் கன்னி ராசியில் இருப்பது சிறப்பானது அல்ல. ஆனால் அவரது 5-ம் இடத்து பார்வையால் நன்மை கிடைக்கும். பணப்புழக்கம் இருந்தாலும், குடும்பச் செலவும் அதிகரிக்கும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. முயற்சியில் தடைகள் குறுக்கிட்டு மறையும். முக்கிய விஷயங்களை குடும்ப பெரியவர்களின் ஆலோசனை கேட்டுச் செய்வது நன்மை தரும்.
கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். வீட்டில் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். மனதில் மகிழ்ச்சி நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபட்டாலும், குருவின் வக்கிர காலமான 7-2-2016 முதல் 20-6-2016 வரைக்குள் சுபவிஷயம் கைகூட வாய்ப்புண்டு. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு தலைதுõக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.உறவினர்கள் வகையில் வாக்குவாதம் தவிர்க்கவும்.
பணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கான பலனைப் பெறுவதில் தாமதமும் ஏற்படும். பணிச்சுமை காரணமாக சிலர், வகித்து வந்த பொறுப்பை கைவிடும் சூழ்நிலை உருவாகலாம். சிலருக்கு இட மாற்றம் ஏற்படலாம். அதிகாரிகளை அனுசரித்து போகவும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் மார்ச் முதல் ஜுன் வரை முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் அலைச்சலும், பளுவும் இருக்கும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய தொழிலில் இப்போது முதலீடு செய்ய வேண்டாம். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை வருமானம் மேம்படும்.
கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சீரான பலனை காண்பர். எதிர்பார்த்த புதிய பதவி முயற்சியின் பேரில் கிடைக்கும். கேதுவால் வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்தால் மட்டுமே வெற்றி காண்பர்.
விவசாயத்தில் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.
பெண்கள் குடும்பநலன் கருதி கணவரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு திருப்தியுடன் பணியாற்றுவர்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை:  குருபகவான் சாதகமான இடத்தில் இருப்பதால், கடந்த கால பின்தங்கிய நிலை இனி இருக்காது. பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி அனைத்தும் சிறப்பாக முடியும். தடைகளை முறியடித்து எளிதில் வெற்றி காண்பீர்கள். மக்கள் மத்தியில் மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். குடும்பத்தில் வாய்ப்பு வசதி பெருகும். தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும்.பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு கட்டவும், புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்புண்டு. குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
பணியாளர்களுக்கு கடந்த கால பிற்போக்கான நிலை மறையும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இட,பணி மாற்றம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை நிறைவேறும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர்.
வியாபாரிகளுக்கு அலைச்சலும், பணிச்சுமையும் இருக்கும். அரசுவகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
கலைஞர்கள் மிகச் சிறப்பான பலன் பெறுவர்.
அரசியல்வாதிகளுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். விவசாயத்தில் ஆதாயம் அதிகரிக்கும். நெல், கோதுமை, மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும்.
பெண்கள் பிறந்த வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வர்.
பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். சனி பகவானுக்கு எள்சோறு படைத்து வணங்குங்கள். ராகுவுக்கு நீல நிற வஸ்திரம் சாத்தி வழிபடுவது நல்லது. பிரதோஷத்தன்று சிவனை வணங்குங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்

மகரம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) தனிச்சு நில்லுங்க! துணிச்சலோடு சமாளியுங்க! (55/ 100)

பிறர் மனம் நோகாமல் பேசும் மகர ராசி அன்பர்களே!
இதுவரை ராகு 9-ம் இடமான கன்னி ராசியில் இருந்து காரியத் தடங்கலை ஏற்படுத்தி இருந்தார். எதிரிகள் வகையில் இருந்து இடையூறு வந்திருக்கலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். இப்போது ராகு 8-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்னைகளை உருவாக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். கேது இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான மீனத்தில் இருந்து இறை அருளையும், பொருளாதார வளத்தையும் தந்து கொண்டிருந்தார். எடுத்த காரியங்களில் வெற்றி பெற்றிருப்பீர்கள். இப்போது அவர் 2-ம் இடமான கும்பத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் அல்ல. இனி அவரால் நன்மை தருவது சிரமம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. பொருட்கள் திருட்டு போகலாம் என்பதால் கவனமாக இருக்கவும். ஆனாலும், தனித்து நின்று எதையும் துணிச்சலோடு சமாளிக்கும் நீங்கள் இதையெல்லாம் ஊதித் தள்ளி விடுவீர்கள். ராகு-கேது இரண்டு கிரகமுமே சாதகமற்ற இடத்தில் இருக்கிறார்களே என்று கவலை கொள்ள வேண்டாம். மற்ற கிரகங்கள் அவ்வப்போது நன்மை தருவார்கள். குருவின் 9-ம் இடத்துப்பார்வை ரிஷபத்தில் விழுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியையும், குழந்தை பாக்கியத்தையும் தருவார். பெண்களால் மேன்மை கிடைக்கும்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: ராகு கேதுவால் உங்களுக்கு பாதிப்பு தான் என்றாலும், அவர்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த காலத்தில் குரு மட்டுமின்றி , சனியும் நற்பலனை தரும் இடத்தில் உள்ளனர். இதனால் பணவிரயம் மறைந்து பொருளாதார வளம் பெருகும். மதிப்பு, மரியாதை, செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் கூடும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். கடந்த சில மாதங்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். ஆனால், குருவின் வக்கிர காலமான பிப்ரவரி முதல் ஜுன் வரை சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் புதிய வீடு, மனை வாங்க யோகம் மேலும் அதிகரிக்கும்.
வியாபாரிகள் கடந்த காலத்தை விட அதிக முன்னேற்றம் காணலாம். தொழில் சிறப்படையும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை மார்ச்சுக்குள் தொடங்கினால் நல்ல வளர்ச்சி அடையும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எனினும் வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். கவனக்குறைவு ஏற்பட்டால் மேற்கண்ட பலன்கள் கிடைப்பது அடிபட்டு விடும்.
கலைஞர்கள் தெம்புடன் காணப்படுவர்.
அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். மாணவர்கள் கடந்த ஆண்டைவிட நல்ல மதிப்பெண் பெறலாம். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயத்தில் நெல், கோதுமை சோளம், மொச்சை மற்றும் மானாவாரி பயிர்கள் சிறப்பான மகசூல் தரும். வழக்கு, விவகாரங்களில் தீர்ப்பு சாதகமாக இருக்கும்.
பெண்கள் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும்.  2017 ஜனவரி முதல்  ஜூலை வரை: முக்கிய கிரகங்கள் சாதகமாக இல்லாத காலம். பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனாவசிய செலவை தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமகலாம்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு வளர்ச்சி சீராக இருக்கும்.
கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களை பெறலாம்.
மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டி இருக்கும்.
விவசாயிகளுக்கு நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூல் தரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தட்டிபோகும். பக்கத்து நிலத்துகாரரிடம் அனுசரித்து போவது நல்லது.
பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.
பரிகாரம்: ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை பூஜை செய்யலாம். மேலும் சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி செய்யலாம். விநாயகரையும், நரசிம்மரையும் வழிபட்டு வாருங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  மதுரை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில்.

கும்பம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) தடைகளைத் தகர்ப்பீங்க! சாதனை படைப்பீங்க! (60/100)

உழைப்பில் உறுதி மிக்க கும்ப ராசி அன்பர்களே!
ராகு-கேது பெயர்ச்சி சுமாரான பலனையே தரும் என்றாலும், மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ராகு இதுவரை 8-ம் இடமான கன்னி ராசியில் இருந்து முயற்சியில் தடையும், குடும்பத்தில் பிரிவும் ஏற்படுத்தி இருப்பார். உறவினர் வகையிலும் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகி இருக்கலாம். இப்போது ராகு 7-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இடப்பெயர்ச்சியும், அவப்பெயரும் சந்திக்க நேரலாம். கேது இதுவரை 2-ம் இடமான மீனத்தில் இருந்து பகைவரால் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயம் போன்றவற்றை ஏற்படுத்தி இருப்பார்.தொழிலதிபர்கள் அரசின் கெடுபிடியால் இன்னலுக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் கேது இப்போது உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல என்றாலும், கெடுபலன் ஓரளவு குறையும். தடைகள் குறுக்கிட்டாலும் குருவின் பார்வை பலத்தால் தடைகளை தகர்த்து வாழ்வில் சாதனை படைப்பீர்கள்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை:  குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப்பார்வையால் மந்த நிலை படிப்படியாக மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு அவ்வப்போது வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். வீண் விவாதம் பேசுவதைத் தவிர்க்கவும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். புதிதாக வீடு-மனை வாங்கும் எண்ணம் தடைபடலாம். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூரில் வசிக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
பணியாளர்களுக்கு பணியில் பொறுப்பு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் இட, பணி மாற்றம் ஏற்படலாம்.
வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். புதிய வியாபார முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. தொழில் தொடங்க விரும்பினால், வக்கிர காலத்தில் குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பது நல்லது. பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாமல் போகும். அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.
அரசியல்வாதிகள், சமூகநல தொண்டர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ப கல்வி வளர்ச்சி உண்டாகும். குருவின் பார்வையால் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
விவசாயம் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் ஆடம்பர எண்ணத்தை தவிர்க்கவும். பிறந்த வீட்டில் இருந்து உதவி அவ்வப்போது கிடைக்கப்
பெறலாம். குடும்ப ஒற்றுமைக்காக கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
2017 ஜனவரி முதல் ஜூலை வரை:  குருபகவான் துலாம் ராசிக்கு வருவதால் சிறப்பான பலன் கிடைக்கும். அவரது 9-ம் இடத்துப் பார்வையால் நன்மை மேலோங்கும். எந்த தடைகளையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரிடம் உள்ள கருத்துவேறுபாடு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடி வரும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். சிலர்அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப் படுவர்.
வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.
மாணவர்கள் சிறப்பான பலனைப் பெறலாம்.
விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு உண்டாகும்.
பெண்கள் மகிழ்ச்சியான வாழ்வு நடத்துவர். உடல் நலனில் சற்று அக்கறை காட்டவும்.
பரிகாரம்: ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு தீபமேற்றி வழிபடுங்கள். பாம்பு புற்றுக் கோவிலுக்குச் சென்று வரலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்குவது நல்லது. ஆதரவற்றோருக்கு உதவுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  திருச்செந்துõர் முருகன் கோவில்

மீனம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)


மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) கடனை வாங்குவீங்க! கல்யாணத்தை முடிப்பீங்க! (75/ 100)

எல்லாரிடமும் பாசத்துடன் பழகி மகிழும் மீன ராசி அன்பர்களே!
இந்த ராகு-கேது பெயர்ச்சியால் முன்னேற்றம் பெறுவீர்கள். இவர்கள் கடந்த காலத்தில் சாதகமற்ற இடத்தில் இருந்து பின்னடைவை தந்திருப்பார்கள். ராகு உங்கள் ராசிக்கு 7-ம் இடமான கன்னி ராசியில் இருந்து பல்வேறு இன்னல்களை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கி இருப்பார். மக்கள் மத்தியில் செல்வாக்கை குறைத்திருப்பார். அப்படிப்பட்ட ராகு இப்போது 6-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம். இனி பிரச்னை அனைத்தும் நீங்கும். தீயவர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். புதிய முயற்சியில் வெற்றியைக் கொடுப்பார். ராகு நன்மை தரும் போது கேது  நன்மை தர மாட்டார். அவர் இது வரை உங்கள் ராசியில் இருந்து உடல் உபாதை, அரசாங்க வகையில் பிரச்னையைத் தந்திருப்பார். முயற்சியில் தடைகளும் நேர்ந்திருக்கலாம். இப்போது கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கும்பத்திற்குச் செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனால் கடந்த காலத்தில் இருந்த பிற்போக்கான நிலை மறையும். ஆனால், உடல் உபாதை உருவாகலாம்.
2016 ஜனவரி முதல்  டிசம்பர் வரை:  கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். உறவினர்கள் விரும்பி வந்து உறவாடுவர். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நிறைவேறும். அதுவும் மனதிற்குப் பிடித்த வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. சிலர் தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடி புகுவர். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபச்செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும்.
பணியாளர்களுக்கு கடந்தகாலத்தில் இருந்த பின் தங்கிய நிலை மறையும். தன்னம்பிக்கையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். படித்து முடித்து வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். ராகுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமைபெறுவீர்கள். ஆற்றல் மேம்படும்.
கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். சிலர் அரசிடம் இருந்து விருது பெற வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். புதிய பதவியும் கிடைக்கும்.
மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான வளர்ச்சி காணலாம். மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பைப் பெறுவர்.
விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை:  குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப் பார்வை சாதகமாக அமையும். ராகுவின் பலன் தொடர்ந்து கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சமுக மதிப்பு குறைந்தாலும், குடும்ப மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தம்பதியிடையே அன்பும், நெருக்கமும் நீடிக்கும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
பணியாளர்கள் நிர்வாக அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
வியாபாரிகள் உழைப்புக்கேற்ப பலன் காண்பர். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி தாமதமாகும். புதிய தொழில் முயற்சியைத் தற்போது தொடங்க வேண்டாம்.
கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் பெற முடியும்.
மாணவர்கள் இந்த கல்வியாண்டில் அக்கறையுடன் படிப்பது அவசியம். குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.
விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயத்தை தவிர்ப்பது அவசியம். புதிய வழக்கில் சிக்க வேண்டாம்.
பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமையால் அவதிப்பட நேரிடலாம்.
பரிகாரம்: சனி, கேதுவை வழிபாடு செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கையை வணங்குங்கள். ஆதரவற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். காக்கைக்கு அன்னமிட்ட பின் சாப்பிடுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலில் விளக்கேற்றுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்.

இந்துக்கள் எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது!


இந்துக்கள் எதைச் செய்யலாம்; எதைச் செய்யக்கூடாது!


சில பொதுவான குறிப்புகள்:

1. விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயக சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்)

2. பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியனவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3. விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4. அம்பிகைக்கு அருகம்புல் உகந்ததல்ல.

5. லட்சுமிக்குத் தும்பை கூடாது.

6. பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.

7. விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.

8. சாமந்திப்பூவை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.

9. மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.

10. வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.

11. அன்றலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

12. ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.

13. தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதி இல்லை.

14. வாசனை இல்லாதது: முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது. வாடியது: தகாதவர்களால் தொடப்பட்டது; நுகரப்பட்டது: ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது. காய்ந்தது. பழையது. தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தக் கூடாது.

15. சம்பக மொக்குத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

16. மலர்களை கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.

17. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.

18. துளசி, முகிழ் (மகிழம்) செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுரவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் (இலை) பத்ரங்கள் பூஜைக்கு உகந்தவை.

19. பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புலியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.

20. திருவிழாக் காலத்திலும், வீதிவலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும், மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாதென விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

21. அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

22. குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்து, குடுமியை நீக்கிவிட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

23. பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.

24. கோயில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ள கூடாது.

25. பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும்; தூப தீபம் முடியும் வரையிலும் பலிபோடும் போதும் கை மணியை அடிக்க வேண்டும். மணியின் சப்தமில்லாவிடில் அச்செயல்கள் பயனைத் தரமாட்டா


26. ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது, பதினொன்று அடுக்குகள் கொண்ட தீபத்துக்கு மஹாதீபம் அல்லது மஹாநீராஜனம் என்ற பெயர்.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer