Saturday 28 March 2015

பிள்ளையார் துதி,

பிள்ளையார் துதி,

1. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

2. ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

3. ஆனைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வயிறு படைத்தவர் பக்தர் குறைத்தீர்த்தவர்

4. மஞ்சனிலே செய்யினும் மண்ணனாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்

5. ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

6. அவல் பொரிக்கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும்
கவலை யின்றித் திண்ணுவார் கஷ்டங்களை போக்குவார்

7. கலியுகத்து விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம்போல் சுற்றுவார்.


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer