Friday 20 March 2015

சிவ ஆகமகுறிப்புகள்!.... குருவே சரணம்!

குருவே சரணம்!

17.1 கோவிலுக்குள் சிவாச்சாரியாரிடம் இருந்துதான் விபூதி வாங்கிக் கொள்ள வேண்டும்; அது சிவனிடமிருந்தே பெற்றுக் கொள்வதற்குச் சமம். மற்றவரிடமிருந்து பெற்றுக் கொள்வதும், தானே எடுத்துக் கொள்வதும் பாபச் செயல்கள்



17.2 சிவாலயத்துள் சிவாச்சார்யாரே குரு; அவருக்கும் அவரது குருவே துணை; அனைவருக்கும் குருவாம் ஐயனே அவன் இருப்பிடத்தில் நிகழும் அனைத்திற்கும் சாக்ஷி.
17.3 எங்கே எப்படி யார் பூஜை செய்தாலும், அந்த பூஜை முறைகளை நமக்கு உபதேசித்த கருவை அவர் நினைவு கூர்தல் அவசியம். பூஜைக்கு முக்கியம் குரு பாதம், மந்திரத்திற்கு முக்கியம் குரு வார்த்தை, த்யானத்திற்கு முக்கியம் குரு வடிவம், மோக்ஷத்துக்கு முக்கியம் குரு தயை.
17.4 எனவே, கீழ் வரும் ச்லோகங்களைச் சொல்லித்தான் எந்த பூஜையையும் தொடங்க வேண்டும்.
ஓம் குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷõத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:
குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பர ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:
ஸதாஸிவ-ஸமாரம்பாம் ஸங்கராச்சார்ய-மத்யமாம்
ஆஸ்மத்-ஆசார்ய-பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்
குரு சரணாரவிந்தாப்யாம் நமோ நம:

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer