Friday 20 March 2015

சிவ ஆகமகுறிப்புகள்!.... அபிஷேகம்



சிவ ஆகமகுறிப்புகள்!.... அபிஷேகம்

7. அபிஷேகம்

7.1 அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.

7.2 அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம்

7.3 அபிஷேக திரவியங்கள் தரும் பலன் : சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும், மணம் உள்ள தைலம் - சுகம் தரும், பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும், பஞ்சாமிர்தம் - செழிப்பினைத் தரும், நெய் - மோக்ஷம் அளிக்கும், பால் - வாழ்நாள் வளர்ச்சி, தயிர் - மக்கட் செல்வம் தரும், மாப்பொடி - கடன் ஆரோக்கியம் அளிக்கும், தேன் - சுகம் தரும், பழபஞ்சாமிர்தம் - செல்வங்கள் பெருகும், வாழைப்பழம் - பயிர் செழிக்கும், பல்லவம் - உலகை வயப்படுத்தும், மாம்பழம் - மகனுக்குச் சீர் சேர்க்கும், மாதுளை - கோபத்தை நீக்கும், கொளஞ்சி நாரத்தை - சோகத்தைப் போக்கும், நாரத்தை - ஒழுங்கு ஏற்படுத்தித் தரும், எலுமிச்சை - மரணபயம் நீக்கும், சர்க்கரை - பகை களையும், இளநீர் - இன்பங்கள் நல்கும், அன்னாபிஷேகம் - நாடாளும் வாய்ப்பு அளிக்கும், சந்தனக் குழம்பு - தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.

7.4 பஞ்சகவ்யம் : கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து, பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும்.

7.5 பஞ்சாமிர்தம் இரு வகை : (1) ரஸ பஞ்சாமிர்தம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது. (2) பல (பழ) பஞ்சாமிருதம் - மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது

7.6 நாகப்பழம் : மாதுளை, எலுமிச்சை, புளி, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா - ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer