Friday 20 March 2015

சிவ ஆகமகுறிப்புகள்!.... உபசாரங்கள்



சிவ ஆகமகுறிப்புகள்!.... உபசாரங்கள்

உபசாரங்கள்
10.1 உபசாரங்கள் மூன்று விதம் : ஸாங்கம், உபாங்கம், ப்ரத்யங்கம். (1) ஸாங்கம் : ஸ்நானம் (அபிஷேகம்), பாத்யம், ஆசமனம், வஸ்திரம், ஆபரணம், வாஸனை, சந்தணம் பூசுதல், அர்க்யம், புஷ்பம் சாத்துதல் (2) உபாங்கம் : தூப-தீபம், ஸாயரøக்ஷகளில் விபூதி சாத்துவது, கொடை, சாமரம், கண்ணாடி, நிருத்தம், கீதம் ஆகியவற்றை தெரிவிப்பது (3) ப்ரத்யங்கம் : நைவேத்யம் செய்தல், ஸ்ரீபலி, ஹோமம் செய்தல், நித்யோத்ஸவம், சுருகோதகம், ஸ்வஸ்திவாசனம்.

10.2 ÷ஷாடச உபசாரங்கள் : உபசாரம் செய்யும் முறை : 1. ஆவாஹனம், 2. ஸ்தாபனம் 3. பாத்யம் 4. ஆசமநீயம் 5. அர்க்யம் 6 அபிஷேகம் 7 வஸ்த்ரம் சாத்துதல் 8 ஆபரண, புஷ்ப அலங்காரம் 9. தூபம் - தீபம் 10. நிவேதனம் 11. பலி இடுதல் 12. ஹோமம் செய்தல் 13. இசை, கீதம் 14. ஸ்ரீபலி நாயகர் எழுந்தருளல் (உலா) 15. நர்த்தனம் 16. உத்வாஸனம் (தோத்திரப் பாடல்கள் ஓதுதல்), நித்யோத்ஸவம்.

10.3 ஆவாஹநம் : அலங்காரத்திற்குப் பிறகு, சிவபெருமானை ஸத்யோஜாத மந்திரத்தினால் ஆவாஹநம் பண்ண வேண்டும்; பிறகு வாமதேவ மந்திரத்தினால் ஸ்தாபநம்; அகோர மந்திரத்தினால் ஸந்நிதாநம்; தத்புருஷ மந்திரத்தால் ஸந்நிரோதநம்; ஈசான மந்திரத்தினால் ஸம்முகீகரணம் (நன்முகத்தைக் காட்டியருள வேண்டுதல்) பண்ணவேண்டும்.

10.4 ஆவாஹனம் : அன்புடன் தனக்கு எதிர்முகமாக இருக்கச் செய்தல். பூஜை முடியும் வரை, தயை கூர்ந்த இலிங்கத்தில் அல்லது கலசத்தில் எழுந்தருளி இருக்க வேண்டும் என்று ப்ரார்த்திப்பதே ஆவாஹனம்.

10.5 ஸ்தாபனம் : பக்தியினால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறைவனை நிலைகொள்ளச் செய்யும் கிரியை.

10.6 ஸந்நிதானம் : இறைவா ! நான் என்றும் உன்னுடையவன்; என்னை ஆட்கொண்டு அருள் செய்து, என் கிரியைகளுக்கு ஆசி வழங்கு எனக் கோருவது.

10.7 நிரோதம் : தான் செய்யும் கிரியையின் முடிவு வரை தகைந்து இருக்குமாறு இறைவனைக் கோருவது.

10.8 ஆவாஹனத்தின் போது பாத்யம், ஆசமனீயம், அர்க்யம் இவைகளைக் கொடுக்க வேண்டும்.

10.9 எவை, எங்கே? : பாத்யத்தை பாதத்திலும், ஆசமனத்தைக் கையிலும், அர்க்யத்தை சிரஸ்ஸிலும் கொடுக்க வேண்டும். சந்தணப்பூச்சை சரீரத்திலும், சிரஸ்ஸில் கிரீடத்தை வைத்து அதன்மேல் புஷ்பத்தையும் வைக்க வேண்டும். மூக்குக்கு அருகில் தூபத்தையும், நேத்திரத்துக்கு அருகில் தீபத்தையும் காட்ட வேண்டும். அந்நத்தையும், தாம்பூலத்தையும் கையில் கொடுக்க வேண்டும்.

10.10 விளாமிச்சம்வேர், சந்தணம், அறுகு, வெண்கடுகு - இவை நான்கும் பாத்ய நீரில் சேர்ப்பதற்கு உரியவை. ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவற்பழம், ஜாதிக்ககாய், இவை ஆறும் ஆசமனீய நீரில் சேர்க்கக்கூடிய திரவியங்கள். எள், நெல், தருப்பை நுனி, ஜலம், பால், அக்ஷதை, வெண்கடுகு, யவம் இவை எட்டும் அர்க்ய நீரோடு சேர்க்ககூடிய திரவியங்கள்.

10.11 பாத்யம், அர்க்யம், ஆசமனீயம் கொடுக்க வேண்டிய காலங்கள் : அபிஷேக ஆரம்பம், அபிஷேக முடிவு, நைவேத்ய ஆரம்பம், நைவேத்ய முடிவு, தூவ-தீபங்கள் காட்டும் நேரம் - இந்த 5 சமயங்களின் முடிவு, பூஜையின் முடிவு - இந்த 3 காலங்களில் அர்க்யமும் கொடுக்க வேண்டும். அர்க்யம் கொடுக்கும் காலம், பூச்சுப் பூசம் காலம், அபிஷேக காலம் - இந்த மூன்று கால்ஙகளிலும் சந்தணமும் கொடுக்க வேண்டும்.

10.12 ஆவாஹனம், அர்க்யம், அபிஷேகம், தூபம், பூசும் காலம், நைவேத்யம், விசர்ஜனம் இந்த ஏழு காலங்களில் அஷ்ட புஷ்பம் சாத்த வேண்டும்.

10.13 தீப ÷ஷாடசோபசாரம் : 1. தூபம் 2. ஏகதீபம் (உருக்களி) 3. அலங்கார தீபம் (1,3,5,7,9 அல்லது 11 அடுக்குகள் கொண்ட தீபம். புஷ்ப தீபம், மஹா தீபம் என்றும் அழைக்கப் படுவதுண்டு ) 4. நாக தீபம், 5. வ்ருஷப தீபம் (நந்தி தீபம்) 6. புருஷா ம்ருக தீபம் 7. சூல தீபம் 8. கூர்ம (ஆமை) தீபம் 9. கஜ (யானை) தீபம் 10. ஸிம்ஹ தீபம் 11. வ்யாக்ர (புலி) தீபம் 12. கொடி தீபம் 13. மயூர தீபம் 14. பஞ்ச தட்டுடன் பூர்ண கும்ப தீபம் 15. நக்ஷத்ர தீபம் 16. மேரு தீபம். (இவற்றுள் சிலவற்றை விடுத்து, ஸூர்யன், சந்திரன், வ்ருக்ஷம் (மரம்) ஆகிய தீபங்களாலும் உபசரிப்பதுண்டு)

10.14 சுளுகேதகம் : மூ மந்த்ர ஜபம் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்து, ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, பிறகு ஹே பரசேம்வரா ! என்னுடைய பக்தியை, பூஜையை ஏற்றுக் கொள்வீராக ! என்று ப்ரார்த்தனை செய்து, எல்லா பூஜையின் பலனையும் தீர்த்தத்துடன் ஸ்ரீ சிவ பெருமான் கையில் கொடுக்க வேண்டும். தக்ஷிண ஹஸ்தத்தை நான்கு அங்குலமாகக் குறுக்கி, அந்தக் கையிலே புஷ்பம், தீர்த்தம் எவைகளை எடுத்து,  ஸ்ரீ சிவபெருமான் திருவடியினடியில் விடவேண்டும். இது சுளுகோதகம். பிறகு சந்தணம் புஷ்பம் இவைகளைக் கையில் வைத்துக், ஸம்ஹிதா மந்திரம் ஜபித்து, அதை சிவபெருமானுக்குச் சாத்தவேண்டும். (காரண ஆகமம் - பூஜாவிதி படலம் - ச்லோகம் 439-442). ÷ஷாடச உபசாரங்களுக்குப் பிறகு தேங்காய் பழம் தாம்பூலம் நிவேதனம் செய்து, கற்பூர ஹாரத்தி செய்தபின், சிவாச்சாரியார் சுளுகோதக சமர்ப்பணம் செய்து ப்ரார்த்திக்க வேண்டும். மூல மந்திரத்தை இயன்ற அளவு ஜபம் செய்து, அம்மந்திரத்தை கையில் புஷ்பத்துடன் சேர்த்து கவச மந்திரத்தினால்  அவகுண்டனம் செய்து, தீர்த்தத்தைக் கீழே விட்டு, சுவாமியின் வரத ஹஸ்தத்தில் புஷ்பத்தைச் சேர்த்து ஜப சமர்ப்பணம் செய்வதே சுளுகோதகம் என்பது. இவ்வாறு செய்யாத பூஜை பயனற்றதாகும்.

10.15 பூஜையின் ஆரம்பம், அபிஷேகத்தின் முடிவு, அர்ச்சனையின் முடிவு - இக்காலங்களில் தூபம், நெய்கலந்த தீபம் காண்பிக்கவேண்டும்.

10.16 தூபம் - பாபத்தைப் போக்கும்; தீபம் - பகைவரை அழிக்கும்; கடதீபம் - சாந்தி அளிக்கும்; நீராஜனம் - மேலுலகப் பலன் அளிக்கும்; விபூதி - மூவுலகிற்கும் øக்ஷ; கண்ணாடி - லோக விருத்தி; குடை - நீண்ட ஆயுள்; சாமரம் - பாக்கியம்; சுருட்டி, விசிறி - மங்களம்.

10.17 தீபாராதனை செய்யும் முறை : தீபத்தின்மேல் புஷ்பத்தை வைத்து நீரீக்ஷணம், ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்; பின்னர், பஞ்ச ப்ரம்மத்தை நியாஸித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்து, திரிசூல முத்திரை காட்டி, மந்திர நிவர்த்தியின் பொருட்டு நேத்திரத்தின் நேரில் தீபத்தையும், நாசிக்கு நேரில் தூபத்தையும் கொடுக்க வேண்டும்.

10.18 சுவாமியின் முகத்திற்கு நேராகவும், மூக்கிற்கு நேராகவும், மார்புக்கு நேராகவும், வயிற்றுக்கு நேராகவும், கால்களுக்கு நேராகவும் - ஒவ்வொரு இடத்திலும் ஓம் (படத்தினைப் பார்க்க) உருவம் போல மூன்றுமுறை காண்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer