Monday 27 October 2014

மகாபாரதம் பகுதி 050


மகாபாரதம் பகுதி-50

அவன் தன் இளையமகன் ருத்ரசேனனை அழைத்து, மகனே! ஒரு மானிடன் நம் நந்தவனத்தில் புகுந்து பட்சர்களைப் பந்தாடிக் கொண்டிருக்கிறானாம். நீ சென்று அவன் என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறான் என்பதை அறிந்து தகுந்த நிவாரணம் செய்துவா, என அனுப்பினான். ருத்ரசேனனும் அங்கு சென்று பீமனை சமாதானம் செய்து ,அவன் வந்த காரணத்தை தெரிந்து கொண்டான். பீமன் தன்னை கண்ணனின் மைத்துனன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். மேலும், கோகுலத்தில் மரமாய் நின்ற குபேரனின் இரண்டு குமாரர்களை தங்கள் மைத்துனன் கண்ணன், உரலை இழுத்து வந்து சாபவிமோசனம் கொடுத்ததை நினைவுபடுத்தினான். (குபேரனின் பிள்ளைகள் தான் ஒரு சாபத்தால் மரமாக கோகுலத்தில் நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது) இது கேட்டு ருத்ரசேனன் மகிழ்ந்து, தங்கத்தாமரைகளைப் பறித்துக் கொடுத்தான்.

இதனிடையே தம்பியைக் காணாத தர்மர் வருத்தத்தில் இருந்தார். திரவுபதி மூலமாக அவன், குபேரபட்டினம் சென்றிருப்பதை அறிந்து, அவனுக்கு என்னாகுமோ என கலங்கவும் செய்தார். பீமனின் மகன் கடோத்கஜனை மனதால் நினைத்தார். அவன், அந்தக்கணமே அவர் முன்னால் தேருடன் வந்து நின்று பெரியப்பாவின் பாதம் பணிந்தான். மகனே! உன் தந்தைக்கு ஆபத்து. நாம் உடனே குபேரபட்டினம் சென்று அவனை மீட்டு வருவோம் என்றதும், தனது தேரில், நான்கே நாழிகையில் யட்சர்களின் இடத்தை அடைந்து விட்டான். அங்கு தம்பியைக் கண்ட தர்மர் அவனிடம் கோபித்துக் கொண்டார். தன்னிடம் தன்னிடம் அனுமதி பெறாமல் பீமன் வந்தது குறித்து கடிந்தார். பீமன் நல்லபிள்ளை போல் தலை குனிந்து நின்றான். பின்னர் அவனை அழைத்துக்கொண்டு காமியவனம் சேர்ந்தார். பெண்கள் எதைப் பார்த்தாலும் ஆசைப்படுபவர்கள். ஒரு பூவுக்கு ஆசைப்பட்டு, கணவனை குபேரபட்டினம் வரை செல்வதற்கு காரணமான திரவுபதி ஒருநாள் கானகத்தை அர்ஜுனனுடன் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஓரிடத்தில் ஒரு நெல்லிமரம் நின்றது. அதன் உச்சியில் ஒரு நெல்லிக்கனி பெரிய அளவில் பழுத்து அழகாகக் காணப்பட்டது. அது அமித்ரமுனிவர் என்பவருக்கு சொந்தமான மரம். அந்த பழம் 12 வருடங்களுக்கு ஒருமுறை தான் காய்க்கும். அதைச் சாப்பிட்டு தான் மகரிஷி உயிர் வாழ்கிறார்.

அந்த பழத்தின் தன்மை இன்னதென அறியாமல், அதன் அழகில் சொக்கிப்போன திரவுபதி, வில், வித்தையில் உலகிலேயே உயர்ந்த என் உத்தமரே! தாங்கள் எனக்கு அந்தப் பழத்தை பறித்து தாருங்கள், என்றாள். அர்ஜுனன் ஒரு சிறிய அம்பை எய்தான். அவ்வளவு தான். பழம்  விழுந்தது. அது கீழே விழுந்தால் மணல் ஒட்டு விடக்கூடாது என்பதால், லாவகமாக கையில் பிடித்து மனைவியிடம் கொடுத்தான். அப்போது, அதைப் பார்த்து விட்ட அமித்ர முனிவரின் சீடர்கள் ஓடோடி வந்தனர். யார் நீங்கள்? இந்த பழம் அமித்ரமுனிவருக்குரியது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுப்பது. இதைச் சாப்பிட்டே எங்கள் குருநாதர் உயிர் வாழ்கிறார். இப்போது இதைப் பறித்து விட்டனர். எங்கள்  உங்களை சபிப் நீங்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாவது உறுயாகி விடுகிறது என்றனர்.

திரவுபதி கலங்கி அழுதாள். உங்களுக்கு துன்பம் கொடுப்பதற்கென்றே இந்த பூமியில்  பிறந்திருக்கி போலும், கணவர்கள்  அவர்களில் ரையாவது சுக வாழவிட்டேனாவருந்தினாள். பின்னர் தன் மற்ற கணவன்மாரை அழைத்து வந்தாள். அவர்கள் என்ன செய்வதென தெரியாமல் கலங்கி நின்ற வேளையில் சகாதேவன் சொன்னான். இக்கட்டான சமயங்களில் நமக்கு மைத்துனன் கண்ணனே உதவு. அவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவோம். கடந்த மாதம் துர்வாச முனிவர் இங்கு வந்திருந்த போது, அவருக்கு உணவளிக்க, திரவுபதியின் அட்சய பாத்திரத்தில் ஒட்டியிருந்த ஒரு பருக்கையை உண்டு, முனிவரின் வயிறு நிரம்பச்செய்த அதிசயத்தைக் கண்டோம். துர்வாசரை விட அமிர்த முனிவர் கோபக்காரர் என கேள்விப்பட்டிருக்கிறேன். இவரிடம் இருந்து தப்ப வேண்டுமானால், கண்ணனைத் தான் அழைத்தாக வேண்டும் என்றான்.

தர்மர், அதுவே சரியென ஒப்புக்கொண்டு, இதயத்தால் கண்ணனை நினைத்தார். அந்த மாயவன் வந்து விட்டான். கண்ணனை ஏன் மாயவன் என்கிறோம் தெரியுமா? மாயவன் என்றால் எங்கும் வியாபித்திருப்வன் எனப் பொருள். அவன் நம் முன்னால் வர வேண்டுமானால், இதயத்தை அவனிடம் நிலைநிறுத்தி, வணங்கவேண்டும். நிச்சயம் அவன் வந்துவிடுவான். தர்மருக்கு அந்த சக்தி இருந்தது, அவன் வந்து விட்டான். சகாதேவனுக்கோ கண்ணன் தான் கதி. நடந்தாலும், உறங்கினாலும், சாப்பிட்டாலும் கண்ணனின் சிந்தனை தான்! சொல்லப்போனால் அவனை ஒரு ஆண் ராதை என்றே சொல்லலாம். பீமனும் அப்படிப்பட்டவனே. பீமன் கண்ணன் மீது கொண்டிருந்த அபாரபக்தியை யாரும் அறியமாட்டார்கள். தர்மர் கஷ்டத்தின் போது மட்டுமே அவனை சிந்திப்பார். கண்ணனை சிந்திக்காமல் அவரு பகடை உருட்டியதன் விளைவைத் தானே இப்போது அவர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்! அர்ஜுனனும் நிலையும் ஏறத்தாழ அத்தகையதே! நகுலன் சிறந்த கிருஷ்ணன் பக்தனாயினும், அவரை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கும் அளவுக்கு சக்தியை அவன் பெறவில்லை.


தர்மர் மூலமே அவன் கண்ணனைத் தரிசிக்க இயலும். ஆனால் சகாதேவன் கிருஷ்ண பத்தியில் மிகமிக உயர்ந்தவன். கிருஷ்ணனோ சகாதேவனிடம் தான் யோசனை கேட்பார் பல விஷயங்களில். ஆனால், விடாக்கண்டனான சகாதேவன் அவரிடம் பிடி கொடுக்காமலே பேசுவான். பீமனுடைய பக்தி எப்படிப்பட்டது என்பதற்கு சிறு உதாரணம். பீமன் கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்யாமல் ஒருநாள் கூட சாப்பிட்டதில்லை. சாப்பிட உட்காரும் முன், உணவை இலையில் வைத்து, இரண்டு கைகளாலும் ஏந்தி, கிருஷ்ணா! வா, இதை ஏற்றுக் கொள் என்பான். கண்ணன் தினமும் கையேந்தி பெற்றுக் கொள்வார். ஒருநாள், அவனைச் சோதிப்பதற்காக அவர் வரவில்லை. பீமன் தன் கதாயுதத்தை எடுத்தான். வானில் நோக்கி வீசினான்.


             
               
               
               
               

மகாபாரதம் பகுதி 049


மகாபாரதம் பகுதி-49

ரவுபதியிடம் பீமன், அன்பே! நீ கேட்ட மலர் குபேரபட்டணத்தில் இருப்பதை அறிந்து கொண்டேன். காற்றினும் வேகமாகச் சென்று கணநேரத்தில் பறித்து வருகிறேன், என சொல்லிவிட்டு, பீமன் புறப்பட்டான்தலீவனம் என்ற காட்டின் வழி அவன் சென்ற போது, அவன் வேகம் தாளாமல், காடே அதிர்ந்து மிருகங்கள்  அலறியடித்து ஓடின. ஆனால், வழியில் படுத்திருந்த ஒரு குரங்கு மட்டும் பாதையை மறித்துக் கொண்டிருந்தது. இது  ஆச்சரியப்பட்ட  தன் கதாயு  குரங்கே! போய் படுவருவது தெரியவில்லை என  . அதன் மிக நீளமாக பல  இருந்தது.

பீமனை அலட்சியமாக ஏறிட்டுப் பார்த்த அந்தக் குரங்கு, மானிடனே! வேண்டுமானால் சுற்றிப்போ, அல்லது என் வாலை தூக்கி ஓரமாக வைத்து விட்டு போ, வீணே என்னையேன் எழுப்புகிறாய், என்றது. பீமன், அதன் வாலை அலட்சியமாக தூக்கி விடலாம் என கை வைத்தான். ஒரு சிறியவால், அந்த பலவா சக்திக்கு கட்டப்படவில்லைகொண்ட மட்டும் தூக்கியும் அதை அசைக்கக் கூட முடியவில்லைரங்கு சிரித்தது.
என்ன மானிடா! முடியவில்லையா என்றது. குரங்கே! ஜாலம் காட்டாதே. என் சக்திக்கு முன்னால் நீ ஒரு தூசு. ராமபக்தனாகிய என் சகோதரன் அனுமானின் வாலைத் தவிர, இந்த உலகில் வேறு எந்த குரங்கிற்கும் சக்தி கிடையாது என்பதை அறிவேன். இப்போது பார், என மீண்டும் தூக்க இப்போதும் வால் அசையவில்லை. அனுமான் அப்போது தன் சுய ரூபம் காட்டினார். ராமாயண காலத்தில் பிறந்து ஒரு யுகத்தையே கடந்த சீரஞ்சிவியான அவர், இப்போது முதிர்ந்த கோலத்தில் இருந்தார்.

தம்பி! பீமா! நானே அனுமான், என்றதும், பீமன் அவரது பாதங்களில் விழுந்தான். அண்ணா! என் தெய்வமே! தங்களுடனா நான் வாதம் செய்து கொண்டிருந்தேன். மன்னியுங்கள், என்று நமஸ்காரம் செய்தான். அனுமானின் தாய் அஞ்சனா, வாயு பகவான் மூலம் பெற்ற பிள்ளை ஆஞ்சநேயர். குந்தி தேவியும் வாயு பகவான் மூலமே பீமனைப் பெற்றாள். தாய் வேறு, தந்தை ஒன்று என்ற முறையில் இவர்கள் சகோதரர்கள் ஆகிறார்கள். தம்பியை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர், பீமா! நீ வேண்டும் வரத்தைக் கேள், என்றார். அண்ணா! நாங்கள் துரியோதனனால் பாதிக்கப்பட்டுள்ள விஷயத்தை தாங்கள் அறிவீர்கள். தர்மத்துக்காக நடக்கப்போகும் போரில் தாங்கள் என் தம்பி அர்ஜுனனின் தேரில் கட்டப்படும் கொடியில் வந்து அமர வேண்டும். நான் தங்கள் திருவடியை விரைவில் அடைய வேண்டும், என வேண்டினான்.

அர்ஜுனனின் கொடியில் வந்து அமர்வதாக ஒப்புக்கொண்ட ஆஞ்சநேயர், பீமா! நீ என் திருவடியை அடைய இன்னும் காலம் இருக்ககிறது. உன் தம்பிகளோடும், திரவுபதியோடும் வாழ வேண்டிய காலத்தை முடித்தபின் என்னை அடைவாய், என வரமருளினார். பின்னர் அளகாபுரிக்கு செல்லும் வழியை அனுமனிடம் கேட்டான் பீமன். தம்பி! அதற்கு இன்னும் பல யோஜனை தூரம் செல்ல வேண்டும். அங்கே நீ கேட்கும் மலர் இருக்கிறது. அந்த தோட்டத்தை பல ராட்சஷர்கள் பாதுகா த்து வருகிறார்கள். அவர்களைக் கொன்று அந்த மலரைப் பறிக்க வேண்டும். அல்லது குபேரன் தன் மனைவி சித்ராதே உதவியுடன் அந்த வனத்துக்கு அவ்வப்போது வருவான். நீ நட்பு கொண்டால் மலரை அவனே உனக்கு பரிசாகத்தருவான், என யோசனை சொன்னார். பீமன் அவரிடம் ஆசி பெற்று புறப்பட்டான். செல்லும் வழியில் சக்ரசாகர மலை வந்தது. அங்கே தேவர்கள் தவமிருப்பதுண்டு. புண்டரீகன் என்ற அசுரன் அப்பகுதிக்கு வந்த பிறகு, அவர்கள் அப்பகுதிக்கு வருவதில்லை. அவன் ஒரே நொடியில் இருநூறு யோஜனை தூரம் நடக்குமளவிலான கால்களைப் பெற்றவன். அந்த மலைக்கு பீமன் வந்ததும், அவன் வழி மறித்தான்.

மானிடனே! வழி தெரியாமல் வந்துவிட்டாயா? திரும்பி ஓடிவிடு, என்றான். கலங்காத பீமன், அசுரா! உன் அழிவுக் காலத்தை வரவழைத்துக் கொள்ளாதே. வழி விடு, என்று இடி போல் முழங்கினான். உடனே அசுரனுக்கு கோபம் ஏற்பட, இருவரும் கடுமையாகப் போரிட்டனர். அப்போது அசரீரி தோன்றி, பீமா! இவன் உன்னால் தான் அழிய வேண்டுமென்பது விதி. அவனது உயிர் அவனது தோளில் இருக்கிறது. உன் கதாயுதத்தால் அந்த இடத்தில் அடி, என்றதும், பீமனும் கணப்பொழுதில் அவ்வாறே செய்தான். அசுரன் சாய்ந்தான்தேவர்கள் மகிழ்ந்தனர். பின்னர் செந்தாமரை மலர்கள் பூத்துக்கிடக்கும் அளகாபுரி எல்லைக்குள் நுழைந்தான். அங்கேஅனுமான் சொன்னது போலவே ராட்சஷர்கள் உலா வந்து கொண்டிருந்தனர். ஒன்றிரண்டுல. வாமனன் என்பவன் தலைமையில் லட்சம் பேர் இருந்தார்கள். அவர்கள் பீமனை பார்த்துவிட்டனர். நரனே! நீ எப்படி பூலோகத்தில் இருந்து இந்த அளகாபுரிக்கு வந்தாய். உயிர் மேல் ஆசையிருந்தால் ஓடிவிடு. இங்கே இந்திரன் கூட வருவதற்கு அஞ்சுவான், என்றதும் பீமன் ஏதும் பேசாமல் அரக்கர் இடத்தினரிடையே பாய்ந்தான்.


லட்சம் பேரையும் கணப்பொழுதில் மரங்களை பிடுங்கி அடித்துக் கொன்றான். அவர்களை அம்புகளால் அடித்து சாய்த்தான். ஆர்ப்பாட்டுடன் தோட்டத்தில் நுழைந்தான். இதைக் கண்டு அங்கு வசித்த யட்சர்கள் கலங்கி ஓடி தங்கள் தலைவர் குபேரனிடம் விபரத்தைக் கூறினர். குபேரனின் கண்கள் சிவந்தன.சங்கோடணன் என்ற படைத்தலைவனை அழைத்து, அந்த மானிடனை இழுத்து வர கட்டளையிட்டான். சங்கோடணன் பெரும்படையுடன் அங்கு செல்லவே, பீமன் தன் பலத்தாலும் கதாயுதத்தாலும் பல்லாயிரம் யட்சர்களைக் கொன்று விட்டான். சங்கோடணனுக்கு கொடுத்த அடியில் அவன் புறமுதுகிட்டு ஓடினான். குபேரப்பெருமானே! அவன் சாதாரண ஆளாகத் தெரியவில்லை. சிவபெருமானே இங்கு வந்திருக்கிறாரோ எனத் தோன்றுகிறது எனவும் குபேரன் அதிர்ந்தான்


             
               
               
                
               .  
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer