Thursday 29 May 2014

பூஜையின் போது மணியடிப்பது

பூஜையின் போது மணியடிப்பது




வீடு மற்றும் கோயில்களில் பூஜையின் போது மணியோசை முக்கிய பங்குவகுக்கிறது. பூஜை முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் அசுரர், அரக்கர்கள் போன்ற கொடியவர்களை விரட்டியடித்து தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நிருத்தம், வாத்தியம், கீதம் இந்த மூன்றில் மணியோசைக்கும் ஓர் இடம் உண்டு. சங்கு, மணி, சேமக்கலம் இம்மூன்றுமே கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த சாதனங்களாக இன்றளவும் விளங்குகின்றன. மணி சத்தம் கேட்கும் இடங்களில் தீய சக்திகள் நெருங்காது என்பது நம்பிக்கை.


சிவனுக்குரிய பூஜை மணியில் நந்தியும், பெருமாளுக்குரிய மணியில் சங்கு, சக்கரம், கருடன் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். மணியடிக்கும் போது ஒரு ஸ்லோகம் சொல்வார்கள். உள்ளத்தில் தூய்மையான உணர்வு எழவும், தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள். மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, அந்த இடம் முழுவதும் சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer