Friday 24 November 2017

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்-25

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்



மூலவர் : ஐயப்பன்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : மேட்டுப்பாளையம்
  மாவட்டம் : கோயம்புத்தூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
 
 
திருவிழா:
 
  மே மாதத்தில் வரும் ஹஸ்த நட்சத்திரதன்று நடைபெறும் பிரதிஷ்டா தின சிறப்பு பூஜை வருட முக்கிய பூஜைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, விஷூ, ஆடிமாத கடைசி வெள்ளியன்று அஷ்டத்ரவ்ய மஹா கணபதி ஹோமம், ஓணம், விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, வித்யாரம்பம், தீபாவளி ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும் கார்த்திகை முதல் மார்கழிமுடிய தினமும் ஆராதனைகள் உண்டு. இவையல்லாமல் வியாழன்று சந்தான கோபால பூஜை, வெள்ளியன்று மாங்கல்ய புஷ்பாஞ்சலி, முதல் தமிழ்மாத சனிதோறும் புஷ்பாஞ்சலி அமாவாசையன்று காரிய சித்தி ஸ்ரீபகவதி சேவை பூஜை என எண்ணற்ற பூஜைகள் நடைபெறுகின்றன. மண்டல காலத்தில் தினமும் கணபதி ஹோமத்துடன் தொடங்கும் பூஜைகள், பிற ஆராதனைகள், ஐயப்பமார்களின் சரண கோஷங்கள் கருவறையைச் சுற்றிலும் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகள், வேத கோஷங்கள் என நம்மை இறையருளில் மெய்மறக்க செய்கின்றன.
 
தல சிறப்பு:
 
  -
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர்-25
 
போன்:
 
  +91 (04254) 22 22 76
 
பொது தகவல்:
 
  கோயில் பணிகள் நிறைவுற்ற நிலையில், தலைவர் பொறுப்பில் இருந்தவரின் காலில் இருந்த ஆறாத புண்ணும் பூர்ணமாக ஆறி, நல்ல நலத்துடன் காணப்படுகின்றார். நடப்பதற்கு எந்த விதமான அவஸ்த்தையும் இல்லை. இது ஐயப்பன் மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையும் அவன் கருணையுமின்றி வேறு என்னவாக இருக்க முடியும் என நினைவு கூறுகின்றார். 25 ஆண்டுகளாக காலில் ஏற்பட்ட புண்ணால் பட்ட துன்பங்களும் சிரமங்களும் வார்த்தைகளால் சொல்லி மாளாது. இத்துடன் சபரிமலைக்கு சென்றதோடு ஐயப்பனுக்கும் தளராமல் சேவை செய்தேன். மருத்துவர்களே ஆச்சரியப்படும் வகையில் பூர்ண நலம் பெற்றேன் என்றார். கோயில் கேரள சிற்ப சாஸ்திர முறைப்படி கட்டப்பெற்றுள்ளது. மூன்று கலசங்களையுடைய ஒரு நிலை ராஜ கோபுரமும் பெரிய நுழைவு வாயிலையும் கொண்டுள்ளது. கருவறையைச் சுற்றி கணபதி, முருகன், பகவதி மகாவிஷ்ணு மற்றும் நவகிரஹ சன்னதிகள் அமைந்துள்ளன. உட்பிரகார சுவற்றில் ஐயப்பனின் வரலாற்றைக் குறிக்கும் படங்களையும் அதன் விளக்கங்களையும் அழகுடன் புகைப்படங்களாக காட்சிப்படுத்தி உள்ளனர். சிறிய கோயிலாக இருந்தாலும் மிகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் அமைத்திருப்பது சிறப்பு.
 


பிரார்த்தனை
 
  -
 
நேர்த்திக்கடன்:
 
  -
 
தலபெருமை:
 
  10 தூண்களைக் கொண்ட முன் மண்டபத்தில் பலிபீடமும், செப்புத் தகடுகள் வேய்ந்த நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய நெடிதுயர்ந்த கொடிக்கம்பம் நம்மை வரவேற்பதைப் போல் உள்ளது. மண்டபத்தூண்களில் தசாவதார சுதைச் சிற்பங்களை நேர்த்தியாக அமைத்துள்ளனர். கருவறையில் சாந்தமே உருவான புன்னகை தழும்பும் முகத்துடன், எண்ணற்ற நெய் தீபங்களின் ஒலி வெள்ளத்தில் கருணையோடு அருள்பாலிக்கின்றார். கோயில் முழுவதும் தீபம் எரியும் நெய்யின் நறுமணம் வியாபித்துள்ளதை உணரமுடிகிறது.
 
 தல வரலாறு:
 
  மலைகளின் ராணியாக வீற்றிருந்து கொள்ளை கொள்ளும் அழகு கொண்டது நீலகிரிமலை. இம்மலையின் அடிவாரத்தில் பசுமையான தென்னை, பாக்குத்தோப்புகள் அடர்ந்த பகுதியில், மேட்டுப்பாளையம் சிவன் புரத்தில் அமைந்த எழில்மிகு திவ்ய க்ஷேத்திரம் தான் ஐயப்பன் திருக்கோயில். காரமடை சாலையில் மேற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. ஐயப்பன் கோயில் என்றாலே ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளங்குவதைக் காணமுடியும். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் இந்நகரில் ஐயப்பனுக்கென தனிக் கோயில் ஏதும் இல்லை. சபரிமலைக்குச் செல்ல மாலை போடுவதற்கும் கட்டுநிறை செய்வதற்கும் 45 கி.மீ. தொலைவில் உள்ள கோவைக்குச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. சபரிமலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் வருடா வருடம் கூடிக்கொண்டே வந்தது. ஒத்த குணங்களையுடைய பக்தர்கள் சேர்ந்து ஐயப்ப சேவா சமிதி என்ற அமைப்பினை ஏற்படுத்தினர் பின் ஐயப்ப விளக்கு பூஜை நடைபெற்றது.

இப்பூஜை, ஐயப்பனுக்கு கோயில் அமைப்பதற்கென, ஆண்டவனிடம் விண்ணப்பம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜை ஆகும். இவ்வாறு நடத்தப்பெற்ற பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு சுவாமி ஐயப்பன் கோயில் கட்ட அனுமதி வழங்கினார். அதுவரை பிற கோயில்களில் ஐயப்பன் படத்தை

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer