Sunday 24 March 2019

வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை

வீட்டில் இருக்கும் ஆவி முதலான தீய சக்திகள் வெளியேற ஒரு ஆன்மீகவழிமுறை

பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்குக் கொண்டு வந்து சில நாட்கள் வைக்கவும்.அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக் கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு,அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும்.மேற்படி தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டில் போட்டால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும்.இது அதிக செலவில்லாத பரிகாரம்.ஆனால்,பலனோ அபரிதமானது.

ஓராண்டு வரை நவக்கிரக தோஷம் நம்மை பாதிக்காதிருக்க ஒரு ஆன்மீகப்பரிகாரம

சுத்தமான இடத்தில் இருந்து இரண்டு கைப்பிடியளவு அருகம்புல் எடுத்து வரவேண்டும்.அதைக் கழுவ வேண்டும்.பின் அதோடு ஐந்து மிளகை இடித்துப்போட வேண்டும்.அதை ஆட்டுரலில் அல்லது மிக்ஸியில் போட்டு சாறு எடுக்க வேந்தும்.அதை துணியில் வடிகட்ட வேண்டும்.அதில் முப்பது மில்லி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.குடித்தப்பின் ஒன்றரை மணி நேரம் வரையிலும் டீயோ காபியோ காலை உணவோ சாப்பிடக்கூடாது.அதன்பின் அதிக காரசாரமில்லாத உணவுகளை சாப்பிடலாம்.மச்சமாமிசம் அறவே கூடாது.இப்படி ஒன்பது நாள் சாப்பிட்டால் போதும்.ஒரு வருடம் வரை நவக்கிரக தோஷம் நம்மைப் பாதிக்காது.இது அனேகர் அனுபவத்தில் பரிசோதிக்கப்பட்டது.நன்றி:எனது ஆன்மீககுரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

சில வயதானவர்கள் நோய் நொடி இல்லாமல் படுக்கையில் படுக்காமல் உயிர்விடுவது எப்படி என என்னிடம் கேட்டார்கள்.

நான், சனிக்கிழமை மாலை மணி 4.30 முதல் 6.00மணிக்குள் 8 வாழைப்பழம் ஒரு எருமை மாட்டிற்குக் கொடுத்துக்கொண்டே வரச்சொன்னேன்.எம காயத்ரியை தினமும் இரவில் 27 தடவை ஜெபிக்கச் சொன்னேன்.முதியவர்கள் நல்ல முறையில் உயிர் துறந்தனர்.இதை ஜோதிடர்களும் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer