Saturday 23 March 2019

தீப தீட்சை

சித்தர்களின்ஸ்ரீசக்கரம்
வாழ்க வாழ்க
*தீப தீட்சை*

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன்.

நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

(முதல் நாள் 3 நிமிடம் தீப ஒளியை பாா்த்து செய்யவும் படி படியாக நேரத்தை அதிகாிக்கவும். இல்லை என்றாள் கண் எரிச்சல், தலைவலி ஏற்படும்)

அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.

பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.

 1.மனக் கவலை தூள் படும்

 2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்

 3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்

 4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்

5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்

6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்

 7.ஒற்றைத்தலைவலி சரியாகும்

எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer