Tuesday 5 March 2019

பீமனின் சிவபக்தி

🔱 *பீமனின் சிவபக்தி!!* 🔱

*ஒருமுறை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனை சிவபெருமான் குடிகொண்டிருக்கிற திருக்கயிலாயத்துக்கு அழைத்துச் சென்றார் .*

*செல்கின்ற வழியில சிவகணங்கள் வண்டி வண்டியாகப் பூக்களைக் கொண்டு போறதைப் பார்த்து, கண்ணனும், அர்ஜுனனும் எதற்கு இவ்வுளவு பூக்கள் என்று ஆச்சரியப்பட்டு சிவகணங்களை நிறுத்தி விவரம் கேட்டார்கள் .*

*அப்போது அவர்கள் " பூலோகத்தில் யாரோ பீமனாம்! "மகா சிவபக்தனாம்". பூமியில் அவன் பூஜித்த மலர்களைத்தான் தினமும் வண்டி வண்டியாக எடுத்துச் செல்கிறோம்" என்று சொன்னார்கள் சிவகணங்கள்.*

*பீமனுக்கு பூஜை செய்ய நேரம் ஏது?*

 *என்று கிருஷ்ணனிடம் ஆச்சரியமாவும், குழப்பத்தோடும் கேட்டான்அர்ஜுனன்.*

*ஸ்ரீகிருஷ்ணர் புன்னகை செய்துவிட்டுச் சொன்னார்...*

*'பீமன்கிட்ட ஒரு குணம் உண்டு. எங்கே பூந்தோட்டத்தையோ மலர்க்குவியலையோ பார்த்தாலும் உடனே ஒரு கணம் அங்கே நின்று கண்களை மூடி....*

*சர்வம் சிவார்ப்பணம்....*

*என்று மனதார சொல்லிடுவான். அதாவது, "அனைத்தும் சிவபெருமானுக்கே என்று அர்ப்பணித்து விடுவான்".*
*அதனால், அந்த மலர்கள் எல்லாமே, இங்கே சிவனாருக்கு வந்துவிடும் என்றார் கிருஷ்ணர் .*

*நாம் மணிக்கணக்கில் பூஜை செய்ய தேவையில்லை "மனதார ஒருநிமிடம் இறைவன நினைத்தால் போதும்" .*

🕉🔱 *ௐ நமசிவாய* 🔱 🕉

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer