சிவ ஆகமகுறிப்புகள்!.... நைவேத்யம்
நைவேத்யம்
11.1 வண்டு
மலரை முகர்ந்து தேனைப் பருகி, அந்தத்
தேனை திருப்பித் தருகிறது; மலரின்
மணமோ சுவையோ தண்மையோ நீரோட்டமோ
கெடுவதில்தல. அதுபோல இறைவர்க்கு நிவேதித்த
பிரசாதங்களின் ரஸம் போவதில்லை. மேகம்
சூர்ய கிரகணங்களைக் கொண்டு நீரைக் குடித்து,
அதையே பிறகு மழையாகப் பொழிகின்றது,
அவ்வாறே, இறைவன் நிவேதனத்தைத் தன்
பார்வையால் ஏற்றுக் கொண்டு, கருணை
மழை பொழிந்து, நம்மைக் காக்கிறான்.
11.2 அபிஷேகத்தில்
நிறைவு, அர்ச்சனையின் முடிவு ஆகிய இரண்டு
சமயங்களில் நைவேத்யம் செய்ய வேண்டும்
11.3 மந்த்ராந்நம்,
நைவேத்யம் : மந்த்ரம் என்பது ரஹஸ்யம். பல்லிலும்,
உதட்டிலும், முகவாய்க்கட்டிலும் உற்பத்தி ஆவதால் மந்த்ரங்கள் ரஹஸ்யம்
எனப்படுகின்றன. எந்த அந்தமானது ரஹஸ்யமாக
நிவேதிக்கப்படுகிறதோ அதற்கு மந்த்ராந்நம் என்று
பெயர். அத்தகைய மந்த்ராந்தமாகிய மஹாநிவேதனத்தை
ஒரு பாத்திரத்தில் முக்காலியின் மேல் வைத்து, அதைச்
சுற்றி, பாகம் பண்ணப்பட்ட (சமைக்கப்பட்ட)
பதார்த்தங்களைத் தனித் தனிப் பாத்திரங்களில்
வரிசையாக வைத்து, அவற்றை ஒன்றொன்றாகச்
சோதனை செய்து, ஹ்ருதய மந்திரத்தினால்
ப்ரோக்ஷிக்க வேண்டும். அந்த நிவேதனத்தை அம்ருதமயமாகப்
பாவித்து, தேனு முத்திரை காட்டி,
புஷ்பத்தை வைத்து, நைவேத்யத்தை ஸ்வாமியினுடைய
தக்ஷிண ஹஸ்தத்திலே கொடுத்து, தீர்த்த பானத்தையும் கொடுக்க
வேண்டும்.
11.4 மயிர்,
புழு, மணல், உமி இவை
கலந்துள்ள அரிசிச்சோறு (அன்னம்) நைவேத்யத்திற்கு ஆகாது
; அரை அரிசிச் சோறு, குழைந்த
அன்னம், துர்நாற்றம் உள்ள அன்னம் ஆகியவையும்
கூடாது; மிகச் சூடாக நிவேதனம்
செய்யக்கூடாது.
11.5 ஈசான
முகத்திற்கு சுத்த அன்னமும், தத்புருஷ
முகத்திற்கு சர்க்கரைப் பொங்கலும், அகோர முகத்திற்கு எள்
அன்னமும், வாமதேவ முகத்திற்கு தயிர்
அன்னமும், ஸத்யோஜாத முகத்திற்கு வெண்பொங்கலும் படைப்பது சிறந்தது.
11.6 தாம்பூலத்தின்
நுனியில் லக்ஷ்மி, மத்தியில் ஸரஸ்வதீ, பின்பகுதியில் மூதேவி ஆகியோர் உள்ளதாக
ஐதீகம். எனவே, பின்பாகத்தை நீக்கிவிட்டு
தான் வெற்றியையை நிவேதனம் செய்ய வேண்டும்.
11.7 ஜலம்
உள்ள தேங்காயைத்தான் உடைத்து நிவேதனம் செய்ய
வேண்டும்; சமமாக இரு பாதியாக
உடைப்பதே சிறந்தது; குடுமி இல்லாமல் உடைத்தால்
அரசுக்கு கேடு; முழுக் குடுமியும்
உள்ளதாக உடைத்தால் நாட்டுக்கு கேடு; எனவே, கொஞ்சம்
குடுமி உள்ளதாகச் செய்துகொண்டு உடைக்க வேண்டும்; உடைத்த
பின்னர், அந்தச் சிறிதளவு குடுமியையும்
நீக்கி விட்டு நிவேதனம் செய்ய
வேண்டும்.
11.8 நந்திக்கு
நிவேதனம் : அரிசியையும், பயத்தம் பருப்பையும், வெல்லத்தையும்,
திருகின தேங்காயையும் ஒன்றாகக் கலந்து ப்ரதோஷ காலத்தில்
நந்தி தேவருக்கு விசேஷமாக நைவேத்யம் செய்திடல் வேண்டும்
11.9 திரை
இடுதல் : பூஜையின் போது, நிவேதன காலத்தில்
திரை இடாவிட்டால், பாபிகள் அதைப் பார்க்க
நேரிட்டு, அதனால் அந்த நிவேதனமும்,
அது அங்கமாக உள்ள பூஜையும்
பலனற்றதாகப் போய்விடும்.
No comments:
Post a Comment